Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
துயர் தோய்ந்த கறுப்பு யூலை1983 நாட்களை நினவிற் கொள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[Tuesday, 2012-07-24 22:23:28]
News Service

தாயக விடுதலைக்கான எமது போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கூடாகவும் சர்வதேச நியமங்களுக்கூடாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளில் விரைவாக ஒன்றுபடுதலே 1983 யூலை இன வன்செயலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத்தின் திட்டமிட்ட இனவழிப்பின் ஓர் அங்கமாக அமைந்த கறுப்புயூலை இனப்படுகொலையின் 29வது ஆண்டு நினைவேந்தல் உலகத் தமிழ் தேசங்களில் நினைவுகூரப்படுகின்றது.

இந்நாளினை நினைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தினால் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழுவிபரம் :

துயர்சுமந்த 1983 கறுப்பு யூலை நாட்களை 29வது வருடமாக எம்மினிய தாயகத்தமிழர்களும் உலகெங்கும் சிதறிவாழும் ஈழத்தமிழ் மக்களும் ஏனைய தமிழர்களும் இந்த வாரத்தின்போது நினைவுகொள்கின்றோம்.

இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் இறைமையும் இருப்பும் மேற்கு நாட்டு குடியேற்ற ஆட்சிகளினால் கபளீகரம் செய்யப்பட்டு பின்பு தீவில் வாழ்ந்த சிங்களபௌத்த தேசியவாதிகளிடம் தமிழர்கள் அரசியல் அடிமைகளாகக் (political captives) கையளிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தமிழ்மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையையும் அரசியல் ,றைமையினையும் கையிலெடுக்கப் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

1948,ல் மலையக தமிழ்மக்களின் வாக்குரிமையினைப்பறித்து அவர்களினை நாடற்றவர்களாக்குவதன் மூலம் ,லங்கைத்தீவில் தமிழ்மக்களின் இருப்பைத் தகர்த்தெறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழின ஒழிப்பு பலபரிமாணங்களில் ,ன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

அரசியலமைப்பினூடாகவும, பாராளுமன்ற சட்டங்களினூடாகவும், சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட நிர்வாக மற்றும் இராணுவக் கட்டமைப்பு மூலமாகவும் கட்டமைக்கப்பட்ட வன்செயல்கள் (structural violence) தீவில்வாழ்ந்த தமிழ்ப்பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன. இச் சட்டபூர்வமான கட்டமைக்கப்பட்ட வன்செயல்கள் மூலம் தமிழ்மக்கள் மீது விரைவாக நிறைவேற்ற முடியாமற்போன விடயங்களினை வெற்றிகரமாக அடையும் நோக்குடன் சிங்கள பௌத்த பேரின அரசுகள் காலத்திற்கு காலம் இனரீதியான வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டு வந்துள்ளார்கள். 1915,ல் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட வன்செயல்கள் தொடர்ந்து 1956, 1958, 1977, 1981, 1983, 2000, 2001, 2006, 2011, 2012 என சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக ,ன்றுவரை தொடர்ச்சியாகத் தமிழ்ப்பேசும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதே உண்மை.

இதேபோன்று 1940களில் விவசாய அபிவிருத்தியின் பேரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் நிலங்களினைத் துண்டாடிச் சிதைக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றுவரை பல்வேறு பெயர்களில் (labels) தொடரப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. முரண்பாடுகளுக்கு பின்னான மீள பிவிருத்தியும்; பாதுகாப்பும் என்று கூறிக்கொண்டு எங்கள் தாயகநிலம் ,ன்றும் நாளாந்தம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ் இனரீதியான வன்செயல்களுக்கான தோற்றுவாய் தற்செயல் நிகழ்ச்சிகள் போல் வெளிக்குத் தோற்றமளித்தாலும் அவை மிகத் துல்லியமான இலக்குகளுடன் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களினாலும் அவர்களினால் ஏவப்பட்ட சமூகவிரோத சக்திகளினாலும் முன்னெடுக்கப்பட்டது எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.

1983 யூலை ,னக்கலவரமும் இத்தகைய பின்னணியிலேயே உருவாக்கப்பட்ட இனஒழிப்பு நிகழ்ச்சித்திட்டமாகும். மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு தமிழ்மக்களின் சொத்துக்களும் தொழில்முயற்சிகளும் சூறையாடப்பட்டன. தமிழ்ப்பெண்களும் தாய்மாரும் பாலியல் வன்முறைக்கும் மானபங்கத்திற்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப் பட்டனர். இளைஞர்களும் முதியோரும் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் உயிரோடு கொழுத்தப்பட்டனர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அதி உயர்பாதுகாப்பு மிக்க வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதிகள் அடித்தும் வெட்டியும் கண்கள் பிடுங்கப்பட்டும் கொல்லப்பட்டனர். இக்கொடுமை இரண்டுநாட்களுக்கு அடுத்தடுத்து நடந்தது.

அன்றைய சிறீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா 'போர் என்றால் போர்' என்று பகிரங்கமாக அறிவித்து தமிழினப்படுகொலையினைப் பிரகடனப்படுத்தினார். அன்றைய இந்தியபிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தமிழ்மக்களுக்காக அன்று குரல் கொடுத்திருக்காவிட்டால் சிறீலங்காவின் தமிழின ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 1983 ,லேயே நிறைவுபெற்றிருக்கும்.

இன்று 2012 யூலையிலும் கூட வவுனியா சிறையில் தமிழ் அரசியல்கைதி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் (Genocide) பின்பும் கூட சிங்கள பௌத்த தேசியவாதிகளினதும் அவர்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சியினதும் இனவெறி அடங்கவில்லை என்பதற்குச் சான்றாகும்.

காலத்திற்குக் காலம் தமிழ்தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களினை கிழித்ததும், நடைமுறைப்படுத்தத் தயாரில்லாத விசாரணைக்குழு அறிக்கைகளினை தயாரிப்பதற்கென்று காலத்தினை நீட்டியடித்து சர்வதேசத்தினை ஏமாற்றிவருவதும் தனது இறைமையின் பெயரால் சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான நியமங்களினையும் மீறிவருவதும் இன்றைய சிறீலங்காவின் சாணக்கியத்திறமையாக மாறியுள்ளன.

இத்தகைய நிலையில் தான் 1983 யூலையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் துயர்நினைவுகளைச் சுமக்கும் பாரிய பொறுப்பு எமக்கு முன் காத்திருக்கின்றது. ஒன்றுபட்ட சிறிலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாத கட்டமைப்புக்குள் தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழமுடியாது என்பது இன்று உலகின் முன் வெளிப்படை உண்மையாகியுள்ளது. சர்வதேசத்தினதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் நேரடியான தலையீட்டின் மூலம் சிறீலங்கா தீவில் தமிழினப்படுகொலையினையும் தமிழர்தாயகத்தின் நில அபகரிப்பினையும் தடுத்து நிறுத்துதல் மிக அவசியமானதாகும்.

சிறீலங்காவினால் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவிதமான உள்ளக விசாரணைகளும் நியாயம் வழங்கும் பொறிமுறைகளும் குற்றம் செய்தோரைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் தொடர்ந்தும் தமிழினப்படுகொலையிலும் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களிலும் ஈடுபடுதற்கு வாய்ப்பளிப்பதற்கும் மட்டுமே துணை புரியும்.

இதனை நன்குணர்ந்தே, அமெரிக்காவில் பவலோ நகரில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வின் போது நாம் 'அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் தமிழீழதேசத்தில் தலைவிரித்தாடும் உயிரழிப்பு, இனஅடையாள அழிப்பு, மரபு நிலக்கவர்வு போன்ற அராஜகங்களைத் தொடர்ச்சியான வகையில் அனைத்துலக சமூகத்தினதும், அரசு சாராதொழுகும் மனித உரிமை அமைப்புக்களினதும், ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புக்களினதும் இடையறாத கண்காணிப்புக்குட்படுத்தி சிறீலங்காவானது இன, மத வெறியோடமைந்த இனவாத தீவு ஒன்றென்பதனை அனைத்துலக அனுசரணையோடு ஆவணப்படுத்துவதென முடிவு மேற்கொண்டிருந்தோம். இதனை விரைந்து செயற்படுத்துவதே இன்று எம்முன் உள்ள தலையாய கடமையாகும்.

தாயக விடுதலைக்கான எமது போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கூடாகவும் சர்வதேச நியமங்களுக்கூடாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளில் விரைவாக ஒன்றுபடுதலே 1983 யூலை இன வன்செயலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,


TDE_Computers2011
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com