Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னாரில் மீனவ கிராமவாசிகளிடையே மோதல். படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்!
[Saturday, 2012-07-14 19:35:57]
News Service

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது 13 மீன் வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன் பிடி உபகரணங்களை நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) மாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுளைந்த மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  

இவ் விடையம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 250 தொழிளாலர்கள் இவ்வாறு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகம் சிறீலங்கா இறங்குதுறைமுக கூட்டுஸ்தாபனத்திற்கு சொந்தமானதாக காணப்பட்ட நிலையில் அந்த திணைக்களத்தின் அனுமதியுடன் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் கோந்தை பிட்டி பகுதியினை அண்மித்த உப்புக்குளம் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் குறித்த மீனவர்களுக்கு வேறு இறங்கு துறைமுகம் ஒன்றை வழங்குவது தொடர்பில் கடந்த (27-06-2012) செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உயர் மட்டக் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எ.சரத்ரவீந்திர மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் ஜோசப்வாஸ் நகர் பங்குத்தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இறுதியாக அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்ட நிலையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழில் நுற்பப்பூங்காவிற்கு பின்புறமாக உள்ள கடற்கரைப்பகுதியில் யோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடற்தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காண முழு ஏற்பாடுகளையும் மன்னார் பிரதேசச் செயலாளர் மேற்கொண்டிருந்தார்.

கோந்தை பிட்டி இறங்கு துறைமுகத்தில் மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் 60 கண்ணாடியிழைப்படகுகள் மற்றும் 100 வள்ளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி 250 தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போது ஒதுக்கப்பட்ட காணி தனியாருக்குச் சொந்தமானதாக காணப்படுவதோடு குறித்த காணி தொடர்பில் மன்னார் நீதி மன்றத்தில் பல வருடங்களாக வழக்கு விசாரனை ஒன்று இடம் பெற்று வந்தமை தெரிய வந்தது.இந்த நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான தனி நபர் ஒருவர் மீண்டும் ஒரு வழக்கை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் குறித்த தொழில்நுற்பப் பூங்காவிற்கு பின் பகுதியில் உள்ள தனியாரது காணியில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு இடைக்கால தடையினை மன்னார் நீதி மன்றம் விதித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குறித்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபடாமல் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தமது குடும்பத்தின் வருமை நிலையை கருதிய ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன்டும் கடந்த 12 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துரறமுகத்தில் கடற்தொழிலுக்குச் சென்றனர்.

பின் நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது உப்புக்குளம் மீனவர்களுக்கும், ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.எனினும் அந்த மீனவர்களில் பலர் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் உப்புக்குளம் பகுதி மக்களும், மீனவர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் கோந்தை பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்று அங்கு இருந்த 13 மீன் வாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பெருமதியான பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்காண காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் உப்புக்குளம் மீனவர்களது எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாத நிலையில் படையினர் வரவழைக்கப்பட்டு பின் குறித்த கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறைமுகம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், மன்னார் ஜொசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள பகுதியில் இறங்கு துறைமுகம் அமைத்து கடல் தொழிலில் ஈடுபட அதிகாரிகளினால் இடம் வழங்கப்பட்டது.

எனினும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமானதால் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வருகின்றது. கடந்த 21 தினங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதிக்குள் அந்த மீனவர்கள் வரவில்லை. எனினும் கடந்த 12 ஆம் திகதி அந்த மீனவர்கள் எவருடைய அனுமதியும் இன்றி தொழிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமையும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் உப்புக்குளம் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் பலர் பலவந்தமாக தொழிலுக்குச் சென்றனர்.இந்த நிலையில் இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் சங்கமும், மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசல் நிர்வாகமும் இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதினால் ஜீம்மாத்தொழுகையின் பின் இப்பிரச்சினை அங்கு வெளிக்கொண்டுவரப்பட்டமையினால் அங்கு ஒன்று திரண்ட உப்புக்குளம் மீனவர்களும், அக்கிராம மக்களும் குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகத்திற்குச் சென்று அங்கிருந்த 08 மீன் பிடி வாடிகளை உடைத்துள்ளனர். அந்த மீனவர்களுடைய நோக்கம் வாடிகளை அகற்றுவதே தவிர உடமைகளை சேதப்படுத்தும் நோக்கமாக அமையவில்லை என மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தடைசெய்யப்பட்ட வலயமாக கொழும்புத் துறைமுகம் பிரகடனம்!
[Sunday, 2013-05-26 12:34:46]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



அம்மாவைக் கொலை செய்து மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும்போது மரணம்!
[Sunday, 2013-05-26 11:59:47]

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார். தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரே தப்பிச் செல்லும் போது மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



இலங்கையில் எனக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்க தூதரிடம் அசாத் சாலி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 09:08:05]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! Top News Top News
[Sunday, 2013-05-26 08:55:00]

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சர்கள் ஆதரவு! - சுரேஸ்
[Sunday, 2013-05-26 08:46:50]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆயுதக்குழு கடத்தலானது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பவர்களை எச்சரிக்கும் செயற்பாடு - அரியநேந்திரன் எம்.பி!
[Sunday, 2013-05-26 08:40:58]

அம்பாறை மல்வத்தை பகுதியிலுள்ள தனியார் காணிகளில் திட்டமிடப்பட்டுள்ள அத்து மீறிய குடியேற்றத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே தமிழரசுக்கட்சியின் அப்பகுதி மூத்த உறுப்பினர் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரந்திரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக சர்வதேச மன்னிப்புச்சபை செயற்படுகிறது - ருவன் வணிகசூரிய
[Sunday, 2013-05-26 08:38:55]

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது எனவும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.



மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு!
[Sunday, 2013-05-26 08:37:27]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தற்கொலைகளில் இலங்கை உலகசாதனை படைத்துள்ளது - எதிர்க்கட்சி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 08:34:01]

இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது. இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.



கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை!
[Sunday, 2013-05-26 08:27:26]

ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.



ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி இலங்கை செயற்படுகின்றது - அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்!
[Sunday, 2013-05-26 08:19:31]

ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைபய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன்,



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர் - சிங்கள் ஊடகம்!
[Sunday, 2013-05-26 08:14:28]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதனை புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருகின்றனர். அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.



டி.எம்.எஸ் மறைவுக்கு தலைவர்கள், கவிஞர்கள், திரையுலகின் இரங்கல்! Top News
[Sunday, 2013-05-26 07:26:36]

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் நேற்று பிற்பகல் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் கவிஞர்கள் வாலி, வைரமுத்து, நடிகர் சிவகுமார் உள்ளிட்ட திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.



மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com