Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னாரில் மீனவ கிராமவாசிகளிடையே மோதல். படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்!
[Saturday, 2012-07-14 19:35:57]
News Service

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது 13 மீன் வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன் பிடி உபகரணங்களை நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) மாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுளைந்த மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  

இவ் விடையம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 250 தொழிளாலர்கள் இவ்வாறு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகம் சிறீலங்கா இறங்குதுறைமுக கூட்டுஸ்தாபனத்திற்கு சொந்தமானதாக காணப்பட்ட நிலையில் அந்த திணைக்களத்தின் அனுமதியுடன் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் கோந்தை பிட்டி பகுதியினை அண்மித்த உப்புக்குளம் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் குறித்த மீனவர்களுக்கு வேறு இறங்கு துறைமுகம் ஒன்றை வழங்குவது தொடர்பில் கடந்த (27-06-2012) செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உயர் மட்டக் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எ.சரத்ரவீந்திர மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் ஜோசப்வாஸ் நகர் பங்குத்தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இறுதியாக அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்ட நிலையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழில் நுற்பப்பூங்காவிற்கு பின்புறமாக உள்ள கடற்கரைப்பகுதியில் யோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடற்தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காண முழு ஏற்பாடுகளையும் மன்னார் பிரதேசச் செயலாளர் மேற்கொண்டிருந்தார்.

கோந்தை பிட்டி இறங்கு துறைமுகத்தில் மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் 60 கண்ணாடியிழைப்படகுகள் மற்றும் 100 வள்ளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி 250 தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போது ஒதுக்கப்பட்ட காணி தனியாருக்குச் சொந்தமானதாக காணப்படுவதோடு குறித்த காணி தொடர்பில் மன்னார் நீதி மன்றத்தில் பல வருடங்களாக வழக்கு விசாரனை ஒன்று இடம் பெற்று வந்தமை தெரிய வந்தது.இந்த நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான தனி நபர் ஒருவர் மீண்டும் ஒரு வழக்கை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் குறித்த தொழில்நுற்பப் பூங்காவிற்கு பின் பகுதியில் உள்ள தனியாரது காணியில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு இடைக்கால தடையினை மன்னார் நீதி மன்றம் விதித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குறித்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபடாமல் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தமது குடும்பத்தின் வருமை நிலையை கருதிய ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மீன்டும் கடந்த 12 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துரறமுகத்தில் கடற்தொழிலுக்குச் சென்றனர்.

பின் நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது உப்புக்குளம் மீனவர்களுக்கும், ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.எனினும் அந்த மீனவர்களில் பலர் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் உப்புக்குளம் பகுதி மக்களும், மீனவர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் கோந்தை பிட்டி மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்று அங்கு இருந்த 13 மீன் வாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பெருமதியான பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்காண காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் உப்புக்குளம் மீனவர்களது எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாத நிலையில் படையினர் வரவழைக்கப்பட்டு பின் குறித்த கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறைமுகம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், மன்னார் ஜொசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள பகுதியில் இறங்கு துறைமுகம் அமைத்து கடல் தொழிலில் ஈடுபட அதிகாரிகளினால் இடம் வழங்கப்பட்டது.

எனினும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமானதால் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வருகின்றது. கடந்த 21 தினங்களுக்கு மேலாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதிக்குள் அந்த மீனவர்கள் வரவில்லை. எனினும் கடந்த 12 ஆம் திகதி அந்த மீனவர்கள் எவருடைய அனுமதியும் இன்றி தொழிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமையும் தொழிலுக்குச் செல்ல முற்பட்ட போது ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் உப்புக்குளம் மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் பலர் பலவந்தமாக தொழிலுக்குச் சென்றனர்.இந்த நிலையில் இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் மீனவர் சங்கமும், மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசல் நிர்வாகமும் இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதினால் ஜீம்மாத்தொழுகையின் பின் இப்பிரச்சினை அங்கு வெளிக்கொண்டுவரப்பட்டமையினால் அங்கு ஒன்று திரண்ட உப்புக்குளம் மீனவர்களும், அக்கிராம மக்களும் குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகத்திற்குச் சென்று அங்கிருந்த 08 மீன் பிடி வாடிகளை உடைத்துள்ளனர். அந்த மீனவர்களுடைய நோக்கம் வாடிகளை அகற்றுவதே தவிர உடமைகளை சேதப்படுத்தும் நோக்கமாக அமையவில்லை என மன்னார் உப்புக்குளம் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.



யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகின்ற போதிலும் அது தமிழர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளது - சம்பந்தன்
[Wednesday, 2013-05-22 09:25:28]

நடந்து முடிந்துள்ள யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று வர்ணிக்கப்பட்டாலும் அது தமிழ் சிவிலியன்களுக்கு எதிராகவே பாவிக்கப்பட்டது. எனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக இந்நாட்டில் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியல் தீர்வு என்பதும் சமாதான சகவாழ்வு என்பதும் தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் சகலருக்கும் அது வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
[Wednesday, 2013-05-22 09:24:12]

திருமலை மாவட்டம் - சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன் இந்திய தேசிய அனல் மின்சக்தி கூட்டுத்தாபனம் கைச்சாத்திடவுள்ளது. இது தொடர்பாகக் காணப்பட்ட உடன்பாட்டையடுத்தே இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.



திட்டமிட்டவாறு செப்டெம்பரில் வட மாகாணசபை தேர்தல் நடைபெறும் - ஜீ.எல்.பீரிஸ்
[Wednesday, 2013-05-22 09:11:33]

வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோன்று கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வைத்திருக்கின்ற அரசியல் கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. தேவைப்பட்ட நேரத்தில் அரசாங்கம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. அறிக்கை மற்றும் வடக்கு, கிழக்கின் காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படவுள்ளன!
[Wednesday, 2013-05-22 09:04:39]

யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு - பந்துல
[Wednesday, 2013-05-22 08:44:31]

இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மாணவர்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், அப்போதைய பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சந்தர்ப்பம் அளிக்கவில்லை. ஐந்து பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசாங்கம் நியமித்திருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் பேராசிரியர் தட்டீல் என்பவரின் பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே இசட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பாணை!
[Wednesday, 2013-05-22 08:36:25]

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை இன்று காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் வவுனியா காரியாலயத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழத்த மக்களுக்காக கடந்த 18ஆம் திகதி மாலை மன்னாரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உட்பட அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.



உரிமைகளுக்காக குரல் கொடுக்காதுவிடின் சீனிக்காகவும், பாணுக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உருவாகும் - ரணில்!
[Tuesday, 2013-05-21 21:23:41]

சிறிமாவோ ஆட்சிக்காலத்தைப் போன்று நாட்டு மக்களை ஒருவேளை உணவிற்காக வரிசையில் நிறுத்தும் முயற்சிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் நிலமையை புரிந்து கொண்டு உரிமக்காக குரல்கொடுக்காவிடின் பாணுக்காகவும் சினிக்காகவும் காத்துக்கிடக்கும் நிலையே உருவாகும். என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழிச்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்து போய் உள்ளது. ஆகவே தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்கள் எழுச்சி 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும்.இதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



வாழ்க்கையில் விரக்தி - சென்னையில் தாய்,மனைவி,மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழரால் பரபரப்பு!
[Tuesday, 2013-05-21 20:17:06]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.



எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வி!
[Tuesday, 2013-05-21 20:02:19]

இலங்கையின் இரும்புத் தொழிச் சங்கம் என ஒருகாலத்தில் பேசப்பட்ட ஜேவீபீ தொழிற் சங்கமும், அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வியடைந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடந்தது என்பதற்கான அடையாளத்தையே இலங்கையில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தனியார் வர்த்தக நிலையங்கள் கூட அதாவது கோட்டை புறக்கோட்டை கடைகள் எல்லாம் இயங்கியது. வெளி மாவட்டங்களிலும் சகலதும் இயங்கியதாக தெரியவருகின்றது. அரசாங்கம் அச்சுறுத்தி அரச ஊழியா்களை வேலைக்கு வர வைத்தது என்று கூறினாலும் தனியார் நிறுவனங்கள் கடைகளுக்கு என்ன நடந்தது? ஒன்று கூட மூடப்படவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? சீமான் கேள்வி!
[Tuesday, 2013-05-21 19:36:12]

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் - ராதிகா
[Tuesday, 2013-05-21 19:28:40]

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மே-18 முள்ளிவாய்க்கால் துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மக்களின் ஒருமித்த எதிர்ப்பைக் கண்டு அரசு பயந்துள்ளது - கே. டி. லால்காந்த
[Tuesday, 2013-05-21 19:16:53]

வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்த விடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com