Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்! - நெடுமாறன்
[Saturday, 2012-07-14 19:27:14]
News Service

விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்- பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்- நூல் எழுதப்பட்டது என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

  

சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் என்ற நூலின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. விழாவில் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று பேசியது:

உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் பிரபாகரன் போராட்டத்திற்கு எந்த நாடுகளின் உதவி கிடைக்கவில்லை. 20 நாடுகள் அணி திரண்டு ஒழிக்க முயற்சித்தது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதியை திரட்டி ஆயுதங்களை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன். இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்.

பிரபாகரன் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல் தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும். ஒரு கருவியாகும். இந்நூலை படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். தோள் கொடுக்க வேண்டும். எப்படியாவது பதவி பெற்று, அதனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடையே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளது. இந்த மாயையை மாற்றுவதற்கு இப்படி பட்ட நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் நிலை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மலேசிய தமிழர்களுக்கு இந்நிலை ஏற்படலாம். ஏன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இந்நிலை ஏற்படலாம். எனவே நாம் இந்த காலக்கட்டத்தில் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து அனைத்துவித தியாகத்திற்கு தயாராகி போராட துணிய வேண்டும். தமிழர்களின் முதலாவது, இறுதியான எதிரி இந்தியா. இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி, அதற்கு துணையாக நின்றி கருணாநிதியும் குற்றவாளி என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கைது செய்யச் சென்ற பொலிசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் பொலிஸ் காவலில் அவஸ்தை - கூட இருந்தவர் மராட்டிய நடிகையாம்!
[Sunday, 2013-05-19 20:11:44]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரின் பேரில் மும்பையில் ஸ்ரீசாந்தை கைது செய்த டெல்லி போலீசாரை அவர் மிரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டலில் டெல்லி போலீசார் ஸ்ரீசாந்தை கைது செய்த போது, தனது செல்போனை போலீசாரை நோக்கி வீசிய அவர், யார் கிட்ட பேசணும்?. மகாராஷ்டிரா முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? கேரள முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? என்று போலீசாரையே மிரட்டும் தோரணையில் கூறியுள்ளார்.போலீஸ் நிலையத்திற்கு போகும்வரை போலீசாருடன் ஒத்துழைக்காமல் வயலண்ட்டாக இருந்த ஸ்ரீசாந்த், இவரை வரவேற்க ஏற்கனவே கஸ்டடியில் சூதாட்ட தரகர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் கப்-சிப் என்று சைலெண்ட்டாக ஆகி விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.



ஊசி மூலம் உடலில் அசிட் செலுத்தி கொலைக் குற்றவாளியை கொன்ற பொலிசார் - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!
[Sunday, 2013-05-19 19:57:39]

உத்தரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவரை போலீசார் அசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தி சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உபி. மாநிலம் ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த வெள்ளியன்று பல்பீர் என்பவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். அவர் ஊசி வாயிலாக அசிட், பெட்ரோ‌ல் செலுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



புதுடில்லி வந்த சீனப் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!
[Sunday, 2013-05-19 19:44:11]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வந்தார். சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வந்தார். மதியம், டில்லி வந்த அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, எல்லை விவகாரம், தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சீனப்பிரதமர் லி கெகியாங்குடன், உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது.



பற்றியெரியும் சென்னைத் துறைமுகம் - பல பகுதிகளில் புகைமண்டலம்!
[Sunday, 2013-05-19 19:36:24]

சென்னை துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் 7வது நுழைவுவாயிலில் உள்ள புட் கார்பரேஷன் நிறுவனத்தின் குடோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனால் பயங்கர புகை கிளம்பியது. இந்த புகை, துறைமுகம், மண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



பொலிசார் முன்வாசல் வழியே அதிரடியாக நுழைய பின்வாசல் வழியாகத் தப்பியோடினார் சீமான்!
[Sunday, 2013-05-19 19:08:08]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தலைமையில், நேற்று கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான். இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் அவசரப்படுத்தினர். ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். அப்போது 10 மணியாகி விட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், போலீசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.



இந்திய இராணுவத்துக்குள் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஊடுருவல் - முக்கிய தகவல்களை வழங்கிய அதிகாரி கைது!
[Sunday, 2013-05-19 10:03:23]

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார்.



திருப்பதியைத் திணறடிக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் - கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் மயக்கம்!
[Sunday, 2013-05-19 08:26:30]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர். பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் நாராயணகிரி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.



குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் திடீரென வாபஸ் - சென்னை வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு!
[Sunday, 2013-05-19 08:23:44]

கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் விநியோகம் செய்யப்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் கேன் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 121 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.



கடலூர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் - பொலிசார் விசாரணை!
[Sunday, 2013-05-19 08:19:39]

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடலூர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசினார். அவர் தனது உரையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை.



நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆளும் ஆசை வரும்போது, தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாதா? - கடலூரில் சீமான் ஆவேசம்!
[Sunday, 2013-05-19 08:15:08]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை நடந்த கருத்தரங்கில் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: நம் மாநாடு, பொதுக்கூட்டம் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையானது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை காட்டுகிறது. நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆள ஆசை வரலாம். ஆனால், தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாது என நினைக்கின்றனர். ஆறு மாதம் கழித்து பார்ப்போம், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை. அப்போது அவர்கள் உணர்வார்கள். நாங்கள் இல்லா மல் எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.



அடுத்த தேர்தலில் விருதுநகரில் மதிமுக போட்டியிடும் என்கிறார் வைகோ!
[Saturday, 2013-05-18 19:55:45]

அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வரும் செப்டம்பர்15-ம் தேதி ம.தி.மு.க. மாநாடு விருதுநகரி்ல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



2011 ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்த்துக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு? - புதிதாக எழும் சர்ச்சை!
[Saturday, 2013-05-18 19:50:57]

ஐ.பி.எல். போட்டியில் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி கைதான வீரர் ஸ்ரீசாந்த் மீது மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 2011 ஐ.பி.எல். போட்டியின்போதும், இவருக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. 2011-ல் ஸ்ரீசாந்த் கொச்சி அணிக்காக விளையாடினார். அப்போது கொச்சி மைதானத்தில் நடந்த போட்டியில் கொச்சியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கொச்சி அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது. 161 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.



மனைவி மீது சந்தேகப்பட்டு இடுப்பில் பூட்டு மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டுச் சிறைத்தண்டனை!
[Saturday, 2013-05-18 19:46:28]

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வயிற்றில் இருந்த விஷத்தை எனிமா தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு பூட்டு மாட்டி பூட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, அந்த பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தபோது அவர், 16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக நடந்து வந்த என் கணவர், நாளடைவில் என் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார்.



காஷ்மீர் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானவை! - காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்
[Saturday, 2013-05-18 19:42:35]

காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக். கடலூரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர், "இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான்.



முள்ளிவாய்க்கால் நினைவு பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு தடை - மீறி கூட்டம் நடத்துகிறார் சீமான்!
[Saturday, 2013-05-18 19:36:07]

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்ததை ஒட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்ற பொருளில் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் இயக்கத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக பொலிசார் கூட்டத்தை தடுக்க முயல்வதாகத் தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் இயக்கம் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், இவற்றுக்கு எதிராக தமிழக பொலிசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தது.



"எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்" - நீதிபதியிடம் கதறி அழுத டில்லி மாணவியின் தாய்!
[Saturday, 2013-05-18 06:36:07]

தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாகேத் விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவரது தாய் சாட்சியம் அளித்தார். அப்போது, "எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்' என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க அவர் கை கூப்பி வேண்டிக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 13 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் அவர் உயிரிழந்தார்.தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாணவியின் தாய் வெள்ளிக்கிழமை அளித்த சாட்சியம் வருமாறு:



100 மி.லீ குடிநீர் பாக்கெட் 7 ரூபா - தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை!
[Saturday, 2013-05-18 06:07:26]

பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, தமிழகத்தின் நகர்ப்புறங்களில், 900க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், இந்த தொழிலில், 309 நிறுவனங்கள் செயல்படுகின்றன.



முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்று குவிக்க துணைபோன காங்கிரஸ் தலைமையகத்துக்கு பூட்டுப்போட முயன்றவர்கள் கைது!
[Saturday, 2013-05-18 05:56:49]

சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு, பூட்டு போடும் முற்றுகை போராட்டம் நடத்திய, இந்து மக்கள் கட்சியினர், 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான, காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தை விட்டு வெளியேறும்படி கோரி, சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, சத்தியமூர்த்தி பவன் அருகே, இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அவர்கள் அனைவரும், கையில் கொடியுடனும், பூட்டுக்களுடனும் ஓடி வந்து கோஷமிட்டனர்.



பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வரும் 20ம் தேதி "பைபாஸ் சர்ஜரி'!
[Saturday, 2013-05-18 05:52:37]

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, வரும், 20ம் தேதி, சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடக்கவுள்ளது. விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, கடந்த, 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், மேலும் சில வழக்குகளிலும், கைது செய்யப்பட்ட அவர், அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்று, கடந்த, 11ம் தேதி விடுதலை ஆனார். மூச்சு திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், அன்று இரவே அவர் சேர்க்கப்பட்டார்.



மனைவிக்காக இன்னொரு தாஜ்மகால் கட்டினார் போஸ்ட் மாஸ்டர்!
[Saturday, 2013-05-18 05:49:39]

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.


Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com