Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
குழந்தைகளின் சீதபேதிக்கு மருந்தாகும் ரோஜா..
[Thursday, 2012-07-12 09:28:04]
News Service

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

  

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.

குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.

அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!



உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
[Friday, 2013-05-17 17:22:45]

பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும். இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.



கரு முட்டை மூலம் உயிர்ப் பிரதியாக்கம் - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Friday, 2013-05-17 14:24:50]

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



துல்லியமாக இலக்கு வைக்க பயன்படும் ஸ்மார்ட் ரைபிள்ஸ்!Top News
[Friday, 2013-05-17 13:19:08]

ஸ்மார்ட் ரைஃபில்ஸ் - இந்த அதி நவீன துப்பாக்கி மூலம் வைக்கப்படும் டார்கெட்டை துல்லியமாக நீங்கள் மட்டுமல்ல உங்கள் அருகில் இருக்கும் இன்னொருவரும் கணிக்க முடியும், இதன் வீடியோ டார்கெட் லென்ஸ் மூலம் அதன் மூலம் அந்த டார்கெட்டை கரெக்டாய் சுட முடியும் மற்றும் அதை உடனே வீடியோவாக வெப் தளத்திர்க்கும் சேர்க்கவும் முடியும். இப்படி உங்கள் துப்பாக்கியின் டார்க்கெட்டை இன்னொருவரும் பார்த்து அஸிஸ்ட் செய்வதனால் தவறு செய்ய வாய்ப்பில்லை.



LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்! Top News
[Thursday, 2013-05-16 18:17:38]

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், 'லைட் எமிட்டிங் டையோடு' விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



நடிகர் தனுஷுக்கு 3 படத்தில் இருந்த நோய் உங்களுக்கு இருக்கா? எப்படி கண்டுபிடிப்பது? இதை படியுங்கள்...
[Thursday, 2013-05-16 18:12:08]

"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார். இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும். நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும். இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!



Gmail தரும் புத்தம் புதிய வசதி - மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!Top News
[Thursday, 2013-05-16 15:27:51]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.



மலேரியா நோய்க்காவி நுளம்புகளே மனித மணத்தால் அதிகம் கவரப்படுகின்றன - ஆய்வில் தகவல்!
[Thursday, 2013-05-16 15:16:31]

மலேரியா நோய்க் கிருமிகளை காவி வருகின்ற நுளம்புகள் (கொசுக்கள்) மிகவும் அதிகமாக மனித உடலின் மணத்தினால் கவரப்படுவதாக அது குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மலேரியா நோய்க் கிருமியைக் காவி வரும் நுளம்பு, அந்தக் கிருமி இல்லாமல் வரும் நுளம்பைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித வியர்வை மணத்தினால் கவரப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த கிருமிகளை காவி வருகின்ற நுளம்பினால் மனிதன் கடிபடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறு நோய்க்கிருமிகளை காவிவரும் அந்த நுளம்புகள் அதிகம் கவரப்படுவதற்கு, அந்த நோய்க்கிருமிகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கான முயற்சியும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.



பெண்களின் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்!
[Wednesday, 2013-05-15 22:22:07]

பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. 'பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்' என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.



பாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்!
[Wednesday, 2013-05-15 22:01:48]

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.



சீன மருத்துவர்களால் ரொக்கட் தொழில்நுட்பத்தில் செயற்கை இதயம் உருவாக்கம்!Top News
[Wednesday, 2013-05-15 17:26:44]

சீன மருத்துவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். டியான்ஜின் டொ இன்டர்நேஷனல் கார்டியாவாஸ்குலார் (Tianjin TEDA International Cardiovascular) மருத்துவமனை மருத்துவர்கள் இந்த செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இதயம் செம்மறியாடு ஒன்றிற்கு 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட நிலையில் அந்த ஆடு 62 நாட்களாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் மற்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த செயற்கை இதயம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செயற்கை இதயம் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும், அதிக பாதுகாப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



உலகளாவிய இணையப் பாவனை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Wednesday, 2013-05-15 15:57:45]

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.



மூளையின் செயற்பாடு பதின்ம வயதினரில் எப்படி இருக்கும்? ஆய்வில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள்!
[Wednesday, 2013-05-15 15:55:03]

பதின்பருவ வயதினரின் மூளை செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளும் ஒரு ஆழ்ந்த ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 14லிருந்து 24 வயது வரையிலான 300 பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், அவர்களது தன்னுணர்வான மற்றும் உணர்ச்சிகரமான நடத்தை எப்படி அவர்கள் வயதாகும்போது மாறுகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் மூளை இயக்க நுட்பங்களை அவர்கள் அடையாளம் காண முற்படுவார்கள். சில பதின்பருவத்தினர் ஏன் அவ்வப்போது 'உம்'மென்று இருக்கிறார்கள், பிறகு அந்த மனோநிலையிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவும்.



செல்பேசி பாவனையின் பின்னாடி மறைந்திருக்கும் ஆபத்துக்கள்!
[Wednesday, 2013-05-15 15:52:27]

தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம். இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், எங்கு சென்றாலும், குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோமோ இல்லையோ, செல்போனை உடன் கொண்டு செல்கின்றனர். இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை.



15GB வரை இலவச சேமிப்பு வசதியை அதிகரித்தது கூகுள்!
[Tuesday, 2013-05-14 20:41:34]

ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் போன்ற பிரபல சேவைகளை வழங்கிவரும் கூகிள் நிறுவனம் அதன் இலவச சேமிப்பளவை 15 ஜிபி வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜிமெயிலில் 15 ஜிபிவரையான அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவுடன் இணைத்து சேமித்துவைக்க முடியும். அதாவது 5GB ஜிமெயிலிலும் 9GB கூகுள் ட்ரைவுடன் சேமிக்க முடியும். தற்போது குறிப்பிட்ட பயனாளருக்கு மட்டுமே விரிவு படுத்தப்பட்டுள்ள இலவச சேமிப்பளவு விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென தெரிவிக்கின்றது கூகிள் நிறுவனம்.



முக அழகிற்கு தடையாக இருக்கும் வேர்குரு மறைய சில வழிமுறைகள்!
[Tuesday, 2013-05-14 18:03:33]

* மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பின் வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில், இந்தக் குழம்பைப் பூசி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

* சந்தனப் பவுடர் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் 2-3 டேபிள் ஸ்பூன் பன்னீர் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் அதனை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசி விடவும்.



புத்திக் கூர்மையை அதிகரிக்க சில இலகுவான வழிமுறைகள்!
[Tuesday, 2013-05-14 17:57:43]

பொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம். கணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம். ஆனால் இவையெல்லாம் போதாது. கீழே சொல்லப்பட்ட முறையான பயிற்சிகளை சரியாக செய்து வந்தால், மூளைக்குள்ளே உள்ள பலதரப்பட்ட திறமைகளை, முதுமையின் காரணமாகவோ, சரியான தூண்டுகோலின்மையினாலோ, அத்திறமைகள் மங்குவதற்கு முன்பாகவே, எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும். இப்பயிற்சிகள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இவற்றை தினப்படியான செயல்களுடன் ஒன்றிணைத்து செய்யத் தொடங்கினால், அதுவும் சிலவாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வேறுபாட்டை உணர முடியும்.



இறக்கைகள் அற்ற காற்றாலை மின்சார தொழில்நுட்பம் அறிமுகம்!Top News
[Tuesday, 2013-05-14 15:35:08]

காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று மின்சாரமாக இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்று நன்றாக அடித்தால் தான் அதில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி. இதனால் ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது- இந்தியா போன்ற நாடுகளில். ஏன் என்றால் அதி வேக காற்று இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள் கொஞ்சம் கூட அசையாது அதற்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்று. இந்தியாவில் அது பருவ நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.இந்நிலையில் அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும் கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல் விசேஷம் என்னவென்றால் இதில் இறக்கைகளே கிடையாது. இரண்டாவது விசேஷம் இது இயங்க வெறும் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய தென்றலே இதற்கு போதுமானது.



உலோகங்களின் ராஜா தங்குதனாம் - சுவாரஸ்யமான தகவல்கள்!
[Monday, 2013-05-13 20:08:39]

எந்த உலோகத்தையும் உடைக்கக் கூடிய, அறுக்கக் கூடிய உறுதியான உலோகம் டங்ஸ்டன். 1781இல் வில்ஹெம் ஷீல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட டங்ஸ்டன், இன்று நம் அன்றாட வாழ் வில் பல்வேறு விதமாகப் புழங்கிக் கொண் டிருக்கிறது. டங்ஸ்டனால் உருவாக்கப்பட்ட சில மின்சாதன பாகங்களை காட்சிக்கு வைத்து, அதைப் புலப்படுத்தினார்கள் சென்னை அருங்காட்சியகத்தினர். கூடுதல் தகவல்களை காப்பாட்சியர் சேகர் தந்தார்... டங்ஸ்டன் எல்லா உலோகங் களைப் போலவும் பூமிக்கு அடியில்தான் கிடைக்கிறது. ஆனால், மற்ற உலோகங்களைப் போல அல்லாமல் மிகக் கடினமான பாறைகளுக்கிடையே படிமமாக அது இருக்கிறது. டங்ஸ்டன் அதிகமாகக் கிடைக்கும் இடங்கள் எரிமலைப் பிரதேசங்களே. எரிமலைக் குழம்பினாலும் உருக்க முடியாத அளவுக்குக் கடினத்தன்மையுடையது டங்ஸ்டன்.


Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com