Untitled Document
March 29, 2024 [GMT]
மூக்கடைப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெற!
[Saturday 2018-02-17 15:00]

மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும். முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும்.

மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும். முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும்.

  

நமது இந்திய பாரம்பரியத்தில், நம் முன்னோர்களால் பல வழிகள் பின்பற்றபட்டு வந்தது . பாரம்பரிய வைத்திய முறைகள் பல நம் வீட்டு பாட்டிகளால் பின்பற்றப்பட்டு, மிகுந்த பலனளிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறலை ஒரே இரவில் சரி செய்யும் சக்தி இந்த பாட்டி வைத்தியத்திற்கு உண்டு. மூக்கடைப்பை போக்க அவற்றுள் சில வழிமுறைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீராவி பிடிப்பது

பல சுவாச சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு நீராவி பிடிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். நாள்பட்ட சளி, சைனஸ் போன்ற உபாதைகளுக்கும் நீராவி பிடிப்பது நல்ல பலனை தருகிறது. சைனஸ் தொந்தரவால், தலையில் பயங்கர வலி உண்டாகிறது. நீராவி பிடிப்பதன் மூலம், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது .

எண்ணெயை நுகர்வது

வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது மூலிகைகளை சேர்த்து பயன்படுத்துவது மூக்கடைப்பை விலக்கும். தைல எண்ணெய்யின் வாசம் மூக்கடைப்பை தீர்க்க வல்லது. கொதிக்க வைத்த நீரில், சில துளி தைல எண்ணெய்யை தெளிக்கவும். அந்த நீரில், நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்பு உடனே சீராகி, மூச்சு திணறல் குறைகிறது. புதினா எண்ணெயையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

சலைன் நீர்

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்பொது இந்த திரவத்தை சலைன் திரவம் என்று கூறலாம். இந்த திரவத்தை சில துளிகள் மூக்கிற்குள் விடவும். இதனை செய்வதன் மூலம், மூக்கில் கட்டியுள்ள சளி மென்மையாகி மூக்கு வழியே வடியத் துவங்கும். மேலும், தூசு, சளி போன்றவை விலகி, சீரான சுவாசம் கிடைக்கும்.

பூண்டு

பூண்டிற்கு பலவித மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக மூக்கடைப்பிற்கு இது மிக சிறந்த தீர்வாகிறது. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம். பூண்டில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் தன்மை, தொற்றுகளை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்கிறது.

வெங்காயம்

வெங்காயத்தை அறியும் போது கண்களிலும் மூக்கிலும் நீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதே போல், மூக்கடைப்பு ஏற்படும்போது 5 நிமிடம் தொடர்ந்து வெங்காயத்தை நுகரும்போது, மூக்கடைப்பு சரியாகி, மூச்சு சீராகிறது. முயற்சித்து பாருங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகர்

வெதுவெதுப்பான நீருடன் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு நாளில் 3 முறை இந்த நீரை பருகி வரவும். நாளின் இறுதியில் உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். மூக்கடைப்பிற்கு மட்டுமில்லாமல், சைனஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகிறது.

எலுமிச்சை

வைட்டமின் சி அதிகமுள்ள இந்த சிட்ரஸ் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. எலுமிச்சை , சிறந்த ஒரு அன்டி ஆக்ஸ்சிடென்ட். 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து, இந்த திரவத்தை மூக்கில் சில துளிகள் விடவும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு குணமாகிறது.

தக்காளி சாறு

தக்காளியை மசித்து, உப்பு சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். இந்த கலவையில் சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும். நன்றாக கொதித்த இந்த நீரை ஒரு நாளில் 2 முறை பருகவும். தக்காளிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. ஆகவே மூக்கு பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவை இந்த நீரை பருக்வதால் குறைகிறது. சைனஸ் பிரச்சனைக்கும் இது ஒரு தீர்வாகும்.

துளசி

துளசி இலைக்கு ஒரு புனிதத்தன்மை உண்டு. மேலும், இதற்கு மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. துளசி இலைகள் சிலவற்றை எடுத்து, கழுவி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காலை உணவிற்கு முன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் டீ பருகும்போதும், சில துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பருகுவது நல்லது. இதனால் மூக்கடைப்பு முழுவதும் காணாமல் போகும்.

இஞ்சி

இஞ்சிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உள்ளது. மூக்கடைப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவதால் அல்லது டீயில் சேர்த்து பருகுவதால் மூக்கடைப்பு குணமாகும். உடனடி நிவாரணத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், உடனடி நிவாரணத்திற்கு மேலே கூறிய பொருட்களை பயன்படுத்தி மூக்கடைப்பை குணப்படுத்தலாம்.

  
   Bookmark and Share Seithy.com



3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்?
[Friday 2024-03-29 16:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள். இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.



ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு!
[Thursday 2024-03-28 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-03-27 18:00]

பெரும்பாலானோர் இந்த கால கட்டத்தில் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.



உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
[Tuesday 2024-03-26 18:00]

தென்னிந்திய சமையலில் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பு சீராக செயற்படுவதாக ஆய்வு ததகவல்கள் குறிப்பிடுகின்றது. அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது.இது இதய ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.



உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா!
[Sunday 2024-03-24 18:00]

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பாயா. இது பெரும்பாலும் காலை உணவாக இடியாப்பம், அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
[Saturday 2024-03-23 18:00]

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.



நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?
[Friday 2024-03-22 18:00]

பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்!
[Thursday 2024-03-21 18:00]

நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுக்காய் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னனு தெரியுமா?
[Tuesday 2024-03-19 15:00]

இந்த அவசரமான கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். வீட்டையும் பார்க்க வேண்டும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் வெளியிலும் வேலை செய்ய வேண்டும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர்.



டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
[Monday 2024-03-18 18:00]

பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான். நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது. இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.



மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?
[Sunday 2024-03-17 18:00]

பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.



தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!
[Saturday 2024-03-16 18:00]

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.



சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?
[Friday 2024-03-15 18:00]

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.



திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
[Thursday 2024-03-14 18:00]

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.



நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!
[Wednesday 2024-03-13 18:00]

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.



கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?
[Tuesday 2024-03-12 18:00]

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஜப்பானியர்கள் 90 வயதை கடந்து உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-03-11 18:00]

நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சுகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.



கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Sunday 2024-03-10 16:00]

வெயில் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.



தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன்?
[Saturday 2024-03-09 15:00]

நமது உடல் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் சாப்பிடுவது மிகவும் பயன் தரும். அந்த வகையில் பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பாதாமில் அதிக நார்ச்சத்து மற்றும் கூடுதலான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.



ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு!
[Friday 2024-03-08 18:00]

தொன்று தொட்டு சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிளகு உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அது தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது. மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா