Untitled Document
April 16, 2024 [GMT]
இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்
[Tuesday 2018-01-16 11:00]

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.

  

எடையைக் கட்டுப்படுத்தலாம் வலிமையையும், திண்மையையும் பெறலாம். மூட்டுக்களிலும், தசைகளிலும் இளக்கம் பெறலாம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம் மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துவதுடன் மூப்படையும்போது வலிமையைப் பேணலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் 30 வயதில் வரும் சர்க்கரை நோய் மற்றும் இதயநோயைக் கட்டுப்படுத்தலாம். அதே போல் யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒவ்வொருவர் உடலுக்குத் தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்குத் தகுந்தபடியே உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே.

அதேபோல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும்படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெறவேண்டும்.

அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. செய்துவிட்டு, நாளுக்குநாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

குறிப்பாக, இதயநோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கு இத்தகைய உடற்பயிற்சிகள் உதவுகின்றன. தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடும்போது இதயத்தமனி நோய்களையும், மாரடைப்புகளையும் கணிசமான அளவில் தடுக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

  
   Bookmark and Share Seithy.com



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.



வெள்ளி கொலுசு அணிவதன் நன்மைகள்!
[Saturday 2024-04-06 16:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



சரும பொலிவிற்கான அழகுக்குறிப்புக்கள்!
[Saturday 2024-04-06 07:00]

பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர். செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும். இந்த வீட்டு அழகுக்கு பொருட்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.



நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு!
[Thursday 2024-04-04 18:00]

பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.



பிரியாணியால் தீங்கு ஏற்படுமா?
[Wednesday 2024-04-03 18:00]

நம்மில் பெரும்பாலான நபர்கள் பிரியாணி அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இதனால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த காட்சியில் தெரிந்து கொள்வோம். பிரியாணி சுவையான உணவு என்றாலும் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு, சோடியம் உப்பு உள்ளதால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.



கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி செய்வது எப்படி?
[Tuesday 2024-04-02 18:00]

பொதுவாகவே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் பிரியாணி முக்கிய இடம் வகிக்கினறது. அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான ஆம்பூர் பிரியாணியை வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கைகளில் வியர்வை வர என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-04-01 18:00]

எல்லோருக்கும் எதாவது ஒரு நோய் இருக்கும். அந்த நோய்கள் எல்லாம் வெவ்வேறு வகையாக காணப்படும். ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் இப்படி சில காரணங்களால் வியர்வை வரும்.



கொளுத்தும் வெயிலுக்கு புதினா தண்ணீர்!
[Sunday 2024-03-31 17:00]

கோடை கால வெயிலை சமாளிப்பதற்கு புதினா தண்ணீர் எப்படி உதவியாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து விடுகின்றது. இதனால் மக்கள் கடும் அவதியில் சிக்கிக் கொள்கின்றனர். தற்போது வெயில் என்பது அளவுக்கு அதிகமான இருந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



செவ்வாழை ஆண்மை குறைபாட்டை போக்குமா?
[Saturday 2024-03-30 18:00]

வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது.



3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்?
[Friday 2024-03-29 16:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள். இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.



ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு!
[Thursday 2024-03-28 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா