Untitled Document
March 29, 2024 [GMT]
சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு! Top News
[Wednesday 2017-10-18 08:00]

 சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய  இந்து மாநாடு  கடந்த  ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில்  சிறப்பாக  நடைபெற்றது.

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

  

மன்னார் நகரம் முழுவதும் நந்திக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் மன்னார் நுழைவாயிலில் உள்ள பாலத்தடியில் ஆரம்பமான ஊர்வலம் பெரும்திரளான சைவ மக்களுடன் மன்னார் நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது. இவ் ஊர்வலத்தில் நடராஜர் திருவுருவத்தினை இளைஞர்கள் தோளிலே சுமந்து வர சைவ பெரு மக்கள் நந்திக்கொ டிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்படடனர் அதனை தொடர்ந்து நந்தி கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்து மாநாட்டு நிகழ்வுகள் இரு அரங்குளாக நடை பெற்றன காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் சிறப் பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், வவுனியா தமிழ் சங்க ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸதாபகர் இலக்கியமணி சி.கணேஸ்குமார் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஈலிங் கனக துர்க்கை ஆலய தலைவர் ரீ.யோகநாதன், லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் வி.கணேசமூர்த்தி ,மன்னார் ஆங்கில வள நிலைய முகாமையாளர் எஸ்.சண்முகலிங்கம் ,மன்னார் சித்தி விநாயகர் இந்துகல்லூரி அதிபர் த.தனேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் திருமுறையினை அறநெறி ஆசிரியர்கள் ஓத தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி லி.சுபோதினி பாடினார். திருக்கேதீச்சர பிரதம குரு சிவஸ்ரீதி.கருணானந்த குருக்க ளின் ஆசியுரையினையை தொடர்ந்து கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவதாண்டவம் நடன நிகழ்வும் கவின்கலாலய நாட்டியபள்ளி மாணவி கே.எஸ். திவிஸாவின் நடன நிகழ்வும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் பிரதம விருந்தினர் இடம் பெற்றன அதனை தொடர்ந்து மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் செயலாளர் ம.நடேசசானந்தனின் நன்றியுரையுரையுடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

மாலை நிகழ்வுகள் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அரங்கில் தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார் முன்னிலையில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவத்தமிழ் செல்வர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடை பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் சிறப்ப விருந்தினர்களாக பேராதனை பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன் யாழ். அறிவு திருக்கோவில் தலைவர் மனவளகலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல் மட்டகளப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் சீ.யோகேஸ்வரன,; ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன், யாழ்.இந்துகல்லூரி அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா, லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது வீராச்சாமி குழுவினரின் மங்கல வாத்தியத்தினை தொடர்ந்து பஞ்புராணம், தமிழ்த்தாய் வாழ்த்தினை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரி மாணவர்க ள் வழங்கினர். சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஊடக இணைப்பாளர் கி.வசந்தரூபனின் வரவேற்புரையினை தொடர்ந்து தலைமையுரையும் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உப செயலாளர் வீ.பிரதீபனின் பேரவையின் நோக்கங்கங்களும் குறிக்கோளும் என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் பிரதம விருந்தினர் உரைகள் இடம் பெற்றன அதனை தொடர்ந்து மட்டகளப்பு அழகியல் கல்லூரி மாணவர்களின் வயலின் இசையும் மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றத்தினரின் நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சமய,சமூக,கலை பணிகளை ஆற்றிவரும் பெரியோர் கௌரவிப்பு நிகழ்வு நடை பெற்றது. இக்கௌரவிப்பு நிகழ்வில் கலாநிதி மறவன்புலவு க.சச்சிதானந்தம், சிவசம்பு. இராமகிருஸ்ணன்,சுப்பிமணியம்..பி ருந்தாவனநாதன், வீராச்சாமி அரிகரபுத்திரன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டும் நிகழ்வு இடம் பெற்றன.அதனை தொடர்ந்து சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் ல.சதீஸ்குமாரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

  
   Bookmark and Share Seithy.com



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா