Untitled Document
April 16, 2024 [GMT]
துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான டுவிட் பதிவால் பறிக்கப்பட்ட அழகி பட்டம்!
[Sunday 2017-09-24 16:00]

முன்னதாக பதிவிடப்பட்ட டுவிட் ஒன்று அம்பலமாகிய பின்னர்,

முன்னதாக பதிவிடப்பட்ட டுவிட் ஒன்று அம்பலமாகிய பின்னர், "துருக்கி அழகிப் போட்டி 2017" பட்டத்தை வென்ற அழகியிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கோள்காட்டி, தன்னுடைய மாதவிடாய் சுழற்சியை, "தியாகிகள்" சிந்துகிற ரத்தத்தோடு ஒப்பிட்டு, 18 வயதான இதிர் இசென் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தோர் இந்த டுவிட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, இதிர் இசென் வெற்றிபெற்றிருந்த சில மணிநேரங்களுக்கு பிறகு, அந்தப் போட்டியில் இருந்து அவரை நீக்கிவிடுகின்ற தங்களுடைய முடிவை உறுதி செய்தனர்.

  

தான் அரசியல் ரீதியாக அதனை பகிரவில்லை என்று இன்ஸ்டாகிராம் வழியாக இசென் தெரிவித்திருக்கிறார். கடந்த ஜூலை 15 ஆம் நாள், துருக்கியில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற ஓராண்டு நிறைவின்போது இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ எழுச்சியின்போது நடைபெற்ற சண்டையில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். "ஜூலை 15 ஆம் நாள் தியாகிகள் தினத்தை கொண்டாடுவதற்கு இன்று காலை என்னுடைய மாதவிடாய் வேளையில் இருக்கிறேன். என்னுடைய ரத்தம் வெளியேறுவதில், நம்முடைய தியாகிகளின் ரத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நாளை கொண்டாடுகிறேன்" என்று இசென் டுவிட்டர் பதிவிட்டிருந்தார். துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்துவான் இந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராக செயல்பட்டு இறந்தோரை வழக்கமாக "தியாகிகள்" என்று குறிப்பிடுவதுண்டு

வியாழக்கிழமையன்று இஸ்தான்புல்லில் இந்த அழகிப் போட்டியின் வெற்றிவிழா நடைபெறும் வரை டுவிட்டர் பதிவு வெளிவரவில்லை என்று இந்தப் போட்டியை ஏற்பாடு செய்வோர் தெரிவித்தனர்.அதற்கு பிறகு அந்த நிலைமை மற்றும் பதிவை சரிபார்ப்பது என்று நீண்ட கூட்டத்தை இந்த அழகுப்போட்டி ஏற்பாட்டாளர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.அவரது "மிஸ் துருக்கி" பட்டத்தை பறித்துவிடும் அவர்களின் முடிவை அறிக்கை வெளியிட்டு வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

"இந்தப் பதிவு இதிர் இசென்னால் டுவிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். துருக்கி நாட்டை உலகிற்கு அறிமுகம் செய்வதாலும், நாட்டை பிரதிபலிப்பதற்கு பங்காற்றுவதாலும், இத்தகைய பதிவை 'மிஸ் துருக்கி அமைப்பு' ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு சமூக ஊடகம் வழியாக இசென் பின்னர் பதில் அளித்துள்ளார்.இந்தப் பதிவை பகிர்ந்து கொண்டபோது என்னில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை என்று 18 வயது இளம் பெண்ணாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் வெளியிட்ட பதிவு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டிருந்த அவர், "தாயகத்திற்கும், நாட்டிற்கும் மரியாதை வழங்கும் வகையில் நான் வளர்க்கப்பட்டேன்" என்று மேலும் கூறியிருக்கிறார்.இந்த சம்பவத்தால், சீனாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் துருக்கியின் சார்பாக இந்த அழகிப்போட்டியில் இரண்டாவதாக வந்த அஸ்லி சுமென் கலந்து கொள்ளயிருக்கிறார்.இத்தகைய அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்ற முதல் அழகி அல்ல இசென்.2016 ஆம் ஆண்டு துருக்கி அழகிப் போட்டியில் வென்ற இன்னொரு அழகியான மெர்வி பையுக்சாராக், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட நையாண்டி கவிதையால் அதிபர் எர்தவானை கேலி செய்ததாக, 14 மாதங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்றிருக்கிறார்,

2006 ஆம் ஆண்டு துருக்கி அழகிப் போட்டியை வென்ற மெர்வி பையுக்சாராக், 2015 ஆம் ஆண்டும் சிறுகாலம் கைது செய்யப்பட்டிருந்தார்.அந்நேரத்தில், துருக்கி அதிபர் எர்துவான், தன்னை கேலி செய்தோருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகளை தொடர்ந்திருந்தார்.கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகு, ஒற்றுமை உணர்வால் தூண்டப்படுவதாக கூறி, இந்த வழக்குகளை எல்லாம் அவர் திரும்ப பெற்றார். இருப்பினும், தேசிய பாதுகாப்பிற்காக தேவைப்படுவது என்று அதிபர் கூறுகின்ற நடவடிக்கைகளால் கடும் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் அரசு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



26 வருட மர்மம்: பிரித்தானியாவில் குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்!
[Tuesday 2024-04-16 05:00]

1998ஆம் ஆண்டில் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கொலை வழக்கில் பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம், woodlandஇல் உள்ள Warrington பார்க்கிற்கு அருகில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அதிகாரிகள் "Callum" என்று செல்லப் பெயர் சூட்டினார்கள், இது தொடர்பாக கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.



இஸ்ரேல் பதிலடிக்கு தயாரா? தெஹ்ரானில் விமானத் தடையை நீக்கியது ஈரான்!
[Tuesday 2024-04-16 05:00]

தலைநகர் தெஹ்ரான் மீதான விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு!
[Tuesday 2024-04-16 05:00]

பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹாரி பின்னடை அடைந்துள்ளார். பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹரி பின்னடை அடைந்துள்ளார். ஏப்ரல் 15, 2024 அன்று, இளவரசர் ஹரி மேற்கொண்ட மேன்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.



அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்: தேவாலயத்தில் கத்திக்குத்து!
[Monday 2024-04-15 18:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது: மூன்றாம் உலகப்போர் அச்சத்தில் மக்கள்!
[Monday 2024-04-15 18:00]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். புகழ் பெற்ற பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான Michel de Nostredame என்னும் நாஸ்ட்ரடாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன், தனது Les Prophéties என்னு புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களை கணித்து எழுதியுள்ளார். ஹிட்லருடைய எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை முதல், கோவிட் வரை அவர் கணித்த பல விடயங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளன.



ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்பு!
[Monday 2024-04-15 18:00]

ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



"ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" - ஜோ பைடன் உறுதி!
[Monday 2024-04-15 18:00]

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது எந்தவிதமான எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.



"புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் விரைவில் புறப்படும்" - கேபினட் அமைச்சர் அறிவிப்பு!
[Monday 2024-04-15 06:00]

சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய திட்டத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



ஈரான் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு!
[Monday 2024-04-15 06:00]

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் அதிரடி தாக்குதலை முன்னெடுத்த ஈரானுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலை முன்னெடுக்க உரிய நேரம் மற்றும் அதன் அளவு தொடர்பில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.



ஈரானின் எதிர்பாராத தாக்குதல்: இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா!
[Monday 2024-04-15 06:00]

மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த நிலையிலேயே வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் ஒரு போருக்கு அமெரிக்கா தயாரில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.



இஸ்ரேல் மீதான தாக்குலுக்கு ட்ரூடோ கண்டனம்!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



பதிலடி கொடுத்தால் மீண்டும் பலமாக தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சனிக்கிழமை இரவு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலமடங்கு பலத்துடன் தாக்குவோம் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது .



எயர் கனடா விமான சேவையின் அவசர அறிவிப்பு!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.



இஸ்ரேல் மீதான தாக்குதல்: வன்மையாக கண்டிக்கும் அமெரிக்க அதிபர்!
[Sunday 2024-04-14 18:00]

அண்மையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ஈரானிய முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.



சிட்னி தாக்குதல்தாரியின் அடையாளம் தெரிந்தது!
[Sunday 2024-04-14 07:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர வணிக வளாகம் ஒன்றில் கொடூர தாக்குதலை முன்னெடுத்த ஆயுததாரியின் அடையாளம் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசாரால் அந்த நபர் கொல்லப்பட்ட நிலையில், 40 வயதான Joel Cauchi என்பவரே தாக்குதலை முன்னெடுத்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



ஈரானின் பொறுப்பற்ற செயல்: பிரித்தானிய பிரதமர் சுனக் கடும் கண்டனம்!
[Sunday 2024-04-14 07:00]

இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்த ஈரானின் செயலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக், குறித்த தாக்குதலானது பதட்டங்களைத் தூண்டி, பிராந்தியத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்!
[Sunday 2024-04-14 07:00]

ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



தொடரும் பதற்றம்: இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கைப்பற்றியது ஈரான்!
[Saturday 2024-04-13 18:00]

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.



சுவிட்சர்லாந்தையும் வம்புக்கிழுக்கும் ரஷ்யா!
[Saturday 2024-04-13 18:00]

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல நாடுகள் மீது விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது ரஷ்ய தரப்பு. பிரித்தானியா முதல் பல மேற்கத்திய நாடுகளுக்கு புடின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில், மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர். அந்த விடயம் பிரான்சுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.



அவுஸ்திரேலியா வணிகவளாகமொன்றில் வன்முறை சம்பவம்!
[Saturday 2024-04-13 18:00]

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா