Untitled Document
April 25, 2024 [GMT]
தொலைந்து போன தென்னமரவடி: Top News
[Thursday 2017-08-17 08:00]

தென்னமரவடி கிராமம்  நம் தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சந்திக்கும் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்து உள்ளது.  இந்தத் தென்னமரவடியானது தொன்மையான வரலாறு  படைத்த ஊருமாகும். இவ்வூர் 'தென்னன் மரபு அடி', அதாவது பாண்டியனின் மரபில் வந்தவர்கள் என்ற காரணப்பெயரைக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 'தென்னன் மரபு அடி' என்ற சொற்கள் புணர்ந்து 'தென்னமரபடி' என்று ஆகிப் பின்னர் இன்று 'தென்னமரவடி' எனத்  திரிந்து வழங்கி வருகின்றது.

தென்னமரவடி கிராமம் நம் தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சந்திக்கும் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்து உள்ளது. இந்தத் தென்னமரவடியானது தொன்மையான வரலாறு படைத்த ஊருமாகும். இவ்வூர் 'தென்னன் மரபு அடி', அதாவது பாண்டியனின் மரபில் வந்தவர்கள் என்ற காரணப்பெயரைக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 'தென்னன் மரபு அடி' என்ற சொற்கள் புணர்ந்து 'தென்னமரபடி' என்று ஆகிப் பின்னர் இன்று 'தென்னமரவடி' எனத் திரிந்து வழங்கி வருகின்றது.

  

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வூரில் 1625 உறுப்பினர் கொண்ட 242 குடும்பங்கள் வளமாக வாழ்ந்து வந்தன. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் கடற் தொழிலும் இவர்களது முதன்மையான தொழில்களாக அப்போது விளங்கின. பாடசாலை, கோவில்கள், நூலகம், மருத்துவமனை, பேருந்துப் போக்குவரத்து என்ற அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இவ்வூர் அன்று தன்னிறைவோடு விளங்கியது. ஆனால் 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டில் ஓர் இரவில் இவ்வூர் முழுமையாக எரியூட்டி அழிக்கப்பட்டது. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் உயிர்ப் பாதுகாப்புக்கருதி அயலில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் தப்பி ஓடி அங்கு இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 2009 போர் இடம்பெற்றது. அதில் சிக்கி மேலும் பலர் இறந்து போயினர். ஏறத்தாள சுமார் கால் நூற்றாண்டு காலம் இவ்வூர் மக்கள் தமது சொந்த ஊருக்குள் திரும்பி வர முடியாத அசாதாரண சூழல் நிலவியது.

மிக அண்மைக் காலத்தில்தான் தென்னமரவடி மக்கள் திரும்பி வரக்கூடியதொரு சூழல் உருவாக்கி உள்ளது. இதுவரை 230 உறுப்பினரைக் கொண்ட 82 குடும்பங்கள் திரும்பி வந்துள்ளன. 279 குடும்பங்கள் இன்னும் வரவேண்டி உள்ளது. இவர்களில் 817 உறுப்பினர்களைக் கொண்ட 260 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 40 உறுப்பினரை கொண்ட 19 குடும்பங்கள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன.

இந் நிலையில், தென்னமரவடிக்கு திரும்பி வந்து குடியேறியோர் பல்வேறு சிக்கல்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். வாழ்வதற்கு ஒழுங்கான வீட்டு வசதி இல்லை, மருத்துவ வசதியில்லை, போக்குவரத்து வசதி இல்லை, தொழில் வாய்ப்பு இல்லை, யானைத் தொல்லை எனப் பல்வேறு சிக்கல்களோடு அவர்கள் தம் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை சீராகுமிடத்து மட்டுமே வெளியிடங்களில் வாழும் மற்றவர்கள் தாங்களும் திரும்பி வருவது சாத்தியம் எனக் கூறி வருகின்றனர். இதுவரை 28 குடும்பங்களுக்கு மட்டும்தான் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியோருக்கும் வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து, தென்னமரவடியின் மறு பிறப்பிற்கு ஒரு வாய்ப்புத் தேடும் முயற்சிகள் கனடாவில் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் நோக்கோடும், அவர்களைப் பொருளாதார அடிப்படையில் வலுவூட்டும் இலக்கோடும், கால்நடை வளர்ப்பு, தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை ஆகியன ஒன்றிணைந்த பண்ணை ஓன்றை 100,000 கனடியன் டொலர்கள் செலவில் அமைக்கத் திட்டமிடபட்டுள்ளது.

இந்தப் பண்ணையில் 10 குடும்பங்கள் உடனடியாகக் குடியமர்த்தப்பட்டு வேலை வாய்ப்பைப் பெறுவர். மேலும், அனைத்துத் தென்னமரவடி மக்களும் பொருளாதார அடிப்படையிலான பல்வேறு நன்மைகளையும் பெறுவர். இந்தத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்தினால் இறால் வளர்ப்பு, மீன் வளர்ப்பு முதலீடுகள் தென்னமரவடி நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தென்னமராவடிக் கிராம அபிவிருத்திச் சங்கம் இப்பண்ணைத்திட்டத்தைச் செயற்படுத்தும். NEEDS என்றழைக்கப்படும் வடகிழக்கு அபிவிருத்தி நடுவம் இத்திட்டச் செயலாக்கத்தைக் கண்காணிக்கும். திருகோணமலை நலன்புரிச் சங்கமும் இதற்கு உதவும்.

இவற்றின் தொடர்ச்சியாக, செப்டெம்பர் 10 ஆம் நாள் ஸ்காபரோவின் தொம்சன் பூங்காவில் (Thomson Memorial Park

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா