Untitled Document
April 20, 2024 [GMT]
டெனீஸ்வரன் குறித்து சனியன்று முடிவு! - செல்வம் அடைக்கலநாதன்
[Thursday 2017-08-17 08:00]

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்பதவி விலக மாட்டேன் என்று கூறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தொடர்பாக சனிக்கிழமை முடிவெடுக்கப்படும் என்றும்  ரெலோ தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்பதவி விலக மாட்டேன் என்று கூறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தொடர்பாக சனிக்கிழமை முடிவெடுக்கப்படும் என்றும் ரெலோ தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

  

' இந்த விடயத்தில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்தை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தனது கட்சியின் கட்டுப்பாட்டுடன் இணைந்து செயற்பட்டமையினால் இன்று வரை அவரை கட்சி ஒரு போதும் கை விடாத வாய்ப்பினை பெற்றுள்ளார். ரெலோவின் உயர் மட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கூட இருக்கின்றது. வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் அமைச்சர் டெனிஸ்வரன் ஊழல் செய்திருக்கின்றார் என்றோ, கையாடல் செய்திருக்கின்றார் என்றோ, பதவியை துஸ்பிரயோகம்செய்திருக்கின்றார் என்றோ கூறுவதற்கு இடமில்லை. அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான நோக்கம். நாங்கள் எழுதிய கடிதத்தில் ஊழல் தொடர்பிலும், அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பிலும் எதுவும் இல்லை.ரெலோவின் தலைமைக்குழு கடந்த வாரம் கூடிய போது அமைச்சர் டெனிஸ்வரன் கலந்து கொண்டு விளக்கத்தையளித்தார்.

அவரிடம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சி கோரியிருந்தது. ஆனால் தனக்கு ஒரு நாள் அவகாசத்தை கோரியிருந்தார். அவருடைய கோரிக்கைக்கு அமைவாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்கள் மூலமாக தான் சுய விருப்பத்துடன் பதவி விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு செய்தியை சொல்லி இருந்தார். கட்சி எனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருக்கின்றார்.

டெனிஸ்வரன் இந்த விடயத்தில் அதுவும் கட்சி கூறியதை கேட்டிருந்தால் கடைசி வரைக்கும் ரெலோ அவருடன் நின்றிருக்கும் என நான் தெரிவிக்க விரும்புகின்றேன். மாகாண சபை விவகாரம் என்பது என்னைப் பொறுத்த மட்டில் மக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாறி மாறி கருத்துக்களை கூறுகின்ற விடயங்கள் எங்களுக்கும் வேதனையை ஏற்படுத்துகின்றது. மக்களுக்காக சேவை செய்கின்ற மாகாண சபை எங்களுக்குள் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருப்பது அல்லது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பது மன வேதனையை தருகின்றது.

இருந்தாலும் முதலமைச்சர் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உட்பட கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து வடமாகாண சபையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அமைச்சுக்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தோம். அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். ஏன் முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவை மாற்றத்தில் கால தாமதத்தை ஏற்படுத்துகின்றார் என்ற விடயம் கேள்விக்குறியான விடயம்.

அந்த வகையிலே கட்சி ஒரு முடிவை எடுத்து மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் பெயரை கொடுத்துள்ளோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. எனவே இந்த சர்ச்சை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். இதனை வைத்துக் கொண்டு பலர் பல விதமாக விமர்சிக்கின்ற ஒரு தன்மை ஏற்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் ஒரு போராட்ட இயக்கமாக இருக்கின்றோம்.போராட்ட இயக்கமாக இருந்தவர்கள் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் , அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து போராடியுள்ளனர்.

குறிப்பாக போராளிகள் பல இடங்களிலே உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனவே நாங்கள் பொதுவாக ஒட்டு மொத்த மக்களுடைய குரலாக இருக்கின்ற ஒரு கட்சி.நாங்கள் நிதானமாக செயற்பட வேண்டும். அந்த வகையிலே நாங்கள் நிதானமாக செயற்படுகின்றோம். எங்களுடைய மக்களுடைய அன்றாட பிரச்சினை குறிப்பாக காணாமல் போனவர்கள், தமது சொந்த காணிகளை மீட்பதற்கான போராடும் மக்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல துன்பங்களை இன்று வரை அனுபவித்து வரும் எம் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முயற்சி தற்போது இருக்கின்றது.

ஆகவே ரெலோ வின் உயர் மட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கூட இருக்கின்றது. வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம் என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்!
[Saturday 2024-04-20 06:00]

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 91 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.



கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-20 06:00]

தமிழரசு கட்சி ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது சேவை சந்தை முன்பாக நேற்று அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.



ஈரானிய ஜனாதிபதியின் வருகைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!
[Saturday 2024-04-20 06:00]

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Saturday 2024-04-20 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்!
[Saturday 2024-04-20 06:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.



ஒட்டாவா கொலைகளுடன் தொடர்புடைய இளைஞன் பிணை கோரவில்லை!
[Saturday 2024-04-20 06:00]

கனடா- ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!
[Saturday 2024-04-20 06:00]

அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜேவிபி- பேராயர் சந்திப்பு குறித்து சந்தேகம் கிளப்புகிறது ஐதேக!
[Saturday 2024-04-20 06:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னியினர், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.



சுற்றுலாவிகள் கூடும் இடங்களில் சுற்றிவளைப்புகள்!
[Saturday 2024-04-20 06:00]

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் சஞ்சய் ரணசிங்க தெரிவித்துள்ளார்.



ஐஸ் போதைப்பொருளுடன் கடற்படை அதிகாரிகள் கைது!
[Saturday 2024-04-20 06:00]

முல்லேரிய பிரதேசத்தில் சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா