Untitled Document
April 18, 2024 [GMT]
கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2017-07-24 08:00]

உலகை உலுப்பிய - ஈழத்தமிழர்களுக்கு எதிரான - கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

உலகை உலுப்பிய - ஈழத்தமிழர்களுக்கு எதிரான - கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 23 ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம், லண்டன், டவுனிங் வீதியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

  

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டமானது-

இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பிற்கான சர்வதேச விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்

இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை நிலை உறுதி செய்யப்பட வேண்டும்

தமிழர் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களுக்கான தீர்வு அமைய வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது.

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான இனச்சங்காரமே கறுப்பு ஜூலை. தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.

இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கை வைத்துள்ளது சிங்கள அரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டு வருகின்றது.

கறுப்பு ஜூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்குகின்ற ஒரு காலமாக இனி வரும் காலம் அமைய புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்க வேண்டிய காலம் இது.

  
   Bookmark and Share Seithy.com



அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!
[Wednesday 2024-04-17 16:00]

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி தாயின் நகைகள், மோட்டார் சைக்கிள் கொள்ளை!
[Wednesday 2024-04-17 16:00]

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.



திருநெல்வேலியில் விபத்து - இளைஞன் காயம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.



சுதந்திரக் கட்சியில் புதிய நியமனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆட்சேபனை!
[Wednesday 2024-04-17 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.



கோட்டாவின் 10 கோடி ரூபா வாகனம் மொடல் அழகி பியூமியிடம் வந்தது எப்படி?
[Wednesday 2024-04-17 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்துவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி எனது நாடு அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.



தனக்குத் தானே புதைகுழி வெட்டிய தெவரப்பெரும! - அங்கேயே சனியன்று அடக்கம்.
[Wednesday 2024-04-17 16:00]

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் விஷ பூச்சி கடித்ததால் ஒருவர் மரணம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்த ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.



டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவு!
[Wednesday 2024-04-17 16:00]

கடந்த காலாண்டு முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.



சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்!
[Wednesday 2024-04-17 16:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



திருமணமாகி ஒரே மாதத்தில் காணாமல்போன கணவன்! - மனைவி முறைப்பாடு.
[Wednesday 2024-04-17 16:00]

தனது கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்!
[Wednesday 2024-04-17 05:00]

முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணமானார். வீ மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.



வெடுக்குநாறி மலை அட்டூழியங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
[Wednesday 2024-04-17 05:00]

சிவராத்திரி தினத்தன்று, வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.



சிங்கள வேட்பாளர்களை நம்பவும் முடியாது, தேர்தலைப் புறக்கணிக்கவும் முடியாது!
[Wednesday 2024-04-17 05:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாவியிடம் 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்க முயன்றவர் கைது!
[Wednesday 2024-04-17 05:00]

கொழும்பு - புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் வெளிநாட்டவரை ஏமாற்றி, கொத்து ரொட்டி பார்சலை 1900 ரூபாவுக்கு விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடுகளுக்குப் பறந்த அமைச்சர்கள், எம்.பிக்கள்!
[Wednesday 2024-04-17 05:00]

இருபதிற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகோர்க்குமாறு அழைக்கிறது ஐதேக!
[Wednesday 2024-04-17 05:00]

கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்தி, நிலையான நாட்டை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது.



வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் சேர்ந்து பொலிசாரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday 2024-04-17 05:00]

வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இன்று தொடக்கம் புதிய வீசா நடைமுறை!
[Wednesday 2024-04-17 05:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.



சர்வோதய நிறுவுநர் ஆரியரத்ன காலமானார்!
[Wednesday 2024-04-17 05:00]

சர்வோதய அமைப்பின் நிறுவுநர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன நேற்றுக் காலமானார். 92 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



வவுனியா வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்! - ஒருவர் காயம்.
[Wednesday 2024-04-17 05:00]

வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா