Untitled Document
March 28, 2024 [GMT]
சுமந்திரன் கொலைச் சதி சந்தேக நபர்கள் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றம்!
[Wednesday 2017-06-28 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியகுற்றச்சாட்டில் கைது செய்து அனுராதபுரம்சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் 23ம்திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்குஅறிக்கையிடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியகுற்றச்சாட்டில் கைது செய்து அனுராதபுரம்சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் 23ம்திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்குஅறிக்கையிடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

  

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியகுற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து ச்நதேகநபர்களும் கிளிநொச்சி மாவட்;ட நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக இன்று வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் திகதி இரவு இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவதுசந்தேக நபர் ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டநிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து சந்தேக நபர்களும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் சார்பாக ஆஜரான சடடத்தரணிகள் மன்றில் தோன்றி கிளிநொச்சி நீதிமன்றகட்டளைக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகள் சிறைச்சாலையில்தொடர்ந்தும் தாக்கப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பித்தனர். இவ்வறிக்கையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம்சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில்முதலாவது சந்தேகநபர் சகோதர இனத்தைச் சேர்ந்த கைதியொருவரால் கேவலமாகநடத்த முற்பட்ட போது ஐந்தாவது சந்தேகநபர் அதனைத் தட்டிக் கேட்க முயன்றதுடன் இதுதொடர்பில் சிறைச்சாலைஉத்தியோகத்தரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 23ம்திகதி இரவு கடமையில் இருந்து ஆறு சிறைச்சாலைஉத்தியோகத்தர்கள் ஐந்தாவது சந்தேகநபரை பாரதூரமாக தாக்கியுள்ளனர். யுத்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டு காலில் காயமடைந்த நிலையில்உள்ள இவரை குறித்த ஆறு சிறைச்சாலைஉத்தியோகத்தர்களும்சப்பாத்துக் கால்களால் ஏறி மிதித்து பாரதூரமாக துன்புறுத்தியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்ற கைதிகள்மிகப்பாரதூரமான முறையில் நான்கு ஐந்து தடவைகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களாலும் தங்களாலும் மன்றின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டது என தெரிவித்த சட்டத்தரணிகள், குறித்த செயற்பாடு நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக அமைவதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில்அனுராதபுரம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுகின்றதுஎன்றும், அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்தேக நபர் கடந்த 23ம்திகதி முதல் 26ம்திகதி வரையும் அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில்சிகிச்சை பெற்றதுடன் இன்றைய தினம் (28-06-2017) மன்றில் ஒரு சுகதேகியாகஆஜர்படுத்தப்படவில்லை.இது தொடர்பில் குறித்த ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் கடுமையான விசாரணைகள்மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

மேலும்இவர்களை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பில்லைஎன்றும் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்க கட்டளையிடுமாறும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற நீதிவான்இதற்கு முன்னரும் கைதிகள் தாக்கப்படுவது பாரபட்சமான முறையில் நடத்தப்படுவதுதொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பில் வாய்மொழி மூலமாகவும் கடிதம் மூலமும் உரிய அதிகாரிகளுக்குஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் சுயதீன விசாரணை ஒன்றினை நடாத்தி மன்றுக்குஅறிக்கையிடுமாறும் கடந்த 23ம்திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் கடமையில்இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெயர் விபரங்களை மன்றுக்குசமர்ப்பிக்குமாறு பதிவாளர் மூலம் எழுத்து மூல அறிவிப்பை விடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த கைதிகளை யாழப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் இதில்பாதிக்கப்பட்ட முதலாம் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்களை விசேட சட்டவைத்தியஅதிகாரியின் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



மீசாலையில் சொகுசுப் பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்.தென்மராட்சி மீசாலை பகுதியில் அதி சொகுசு பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை இரவு ஏ9 வீதியில் மீசாலை வீரசிங்கம் பாடசா​லை முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வடக்கு விவசாயிகளுக்கு மின்கட்டணம் குறைப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



கோட்டா நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்கியது நீதிமன்றம்!
[Tuesday 2024-03-26 18:00]

நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் செல்லுபடியற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.



சம்பளப் பிரச்சினைக்காக பதவி விலகமாட்டேன்!
[Tuesday 2024-03-26 18:00]

சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



வடக்கில் கடந்த ஆண்டு 52 கொலைகள் - யாழ்., கிளிநொச்சி பிரிவுகள் முன்னணியில்.
[Tuesday 2024-03-26 17:00]

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்!
[Tuesday 2024-03-26 07:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் என்றும் அவர் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.



தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் மூலம் தேர்தலைப் பிற்போட முனையவில்லை!
[Tuesday 2024-03-26 07:00]

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லையென நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது!
[Tuesday 2024-03-26 07:00]

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளைக் கோர வேண்டியதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்



எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் தாக்குதல்!
[Tuesday 2024-03-26 07:00]

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மைத்திரியை கைது செய்ய வேண்டும்!
[Tuesday 2024-03-26 07:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



சித்திரை புத்தாண்டுக்கு முன் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 05:00]

2024 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



வட்டி வீதத்தைக் குறைத்தது மத்திய வங்கி!
[Tuesday 2024-03-26 05:00]

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.



பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை!
[Tuesday 2024-03-26 05:00]

சித்திரை புதுவருட காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



தினேஸ் சீனா சென்றதால் பதில் அமைச்சராக ஜானக வக்கம்புர!
[Tuesday 2024-03-26 05:00]

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகளுக்கான பதில் அமைச்சரவை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் பிற்பகல் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.



இளநீரால் கொட்டும் வருமானம்!
[Tuesday 2024-03-26 05:00]

கடந்த பெப்ரவரி மாதத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 3, 439 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை விடவும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா