Untitled Document
April 25, 2024 [GMT]
அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்
[Thursday 2017-06-22 09:00]

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக இராக் படைகள் கூறுகின்றன.சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான், ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை (கலிஃபாட்) அறிவித்தார்.ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த பள்ளிவாசலை வெடிக்கவைத்த நடவடிக்கை, ஐ ஸ் அமைப்பு தனது ''தோல்வியை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட அறிவிப்பு'' என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி தெரிவித்தார்.

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக இராக் படைகள் கூறுகின்றன.சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான், ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை (கலிஃபாட்) அறிவித்தார்.ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பள்ளிவாசலை வெடிக்கவைத்த நடவடிக்கை, ஐ ஸ் அமைப்பு தனது ''தோல்வியை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட அறிவிப்பு'' என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி தெரிவித்தார்.

  

உயரத்தில் இருந்து பறவை பார்வையில் தெரிவது போல எடுக்கப்பட்ட படங்களில், பள்ளிவாசல் மற்றும் கோபுரம் பெரும்பாலும் அழிக்கப்பட்டவிட்டதாக தெரிகிறது. மொசூல் நகரத்தை மீட்கும் தாக்குதல் நடவடிக்கைக்கு பொறுப்பான இராக் அரச படையின் தளபதி ஐ எஸ் அமைப்பு ''மற்றொரு வரலாற்று ரீதியிலான குற்றத்தை'' நடத்தியபோது, இராக் படையினர் அந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.

ஐ எஸ் அமைப்பு மொசூல் மற்றும் இராக்கின் பெரும் பொக்கிஷங்களில் ஒன்றை'' சேதப்படுத்திவிட்டதாக, இராக்கில் உள்ள மூத்த அமெரிக்க படை தளபதி கூறினார்.

இது மொசூல் மற்றும் அனைத்து இராக்கிய மக்களுக்கும் எதிரான ஒரு குற்றம், ஏன் இந்த கொடூரமான அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது ஆகும்" என்று மேஜர் ஜெனரல் ஜோசப் மார்ட்டின் கூறினார்.

ஜிஹாதிகள் , இராக் மற்றும் சிரியாவில் பல முக்கிய பாரம்பரிய இடங்களை அழித்திருக்கின்றனர். ஐ எஸ் அமைப்பு 100,000 க்கும் அதிகமான மக்களைக் மனித கேடயங்களாக வைத்திருக்கலாம் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

2016 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்ட ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில், அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்கள் உதவியுடன், ஆயிரக்கணக்கான இராக்கிய பாதுகாப்பு படைகள், குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகள் ஈடுபட்டுள்ளனர்.

இராக் அரசாங்கம் ஜனவரி 2017 ல் கிழக்கு மொசூலுக்கு முழு "விடுதலை" என்று அறிவித்தது. ஆனால் நகரத்தின் மேற்கே அதன் குறுகலான தெருக்கள் கொண்ட பகுதிகள் மிகவும் கடினமான சவாலை முன்வைத்துள்ளன.

இராக் அரசின் அறிக்கையில் பள்ளிவாசல் மற்றும் அதன் தனித்துவமான ஹ்ட்பா சாய்வு கோபுரம் சேதமடைந்துவிட்டதாக கூறியுள்ளது. இந்த பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் 1172 ல் தொடங்கப்பட்டன.

ஜூன் 2014 ல் மொசூல் நகரத்தை பிடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பக்தாதி பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை தனது பிரசங்கத்திலிருந்து, தனது தலைமையை அறிவித்தார். ஐ எஸ் அமைப்பு -இஸ்லாமிய சட்டத்தின் படி, அல்லது ஷரியாவில், பூமியில் கடவுளின் துணைப் பொறுப்பாளராக அல்லது கலிஃபாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசு என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளில் அவரது பொதுவெளியில் தோன்றியது அதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. மொசூலுக்குள், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் வலுவாக பகுதியாக இருந்த பகுதி பழைய நகரம் ஆகும். ஈராக்கின் தீவிரவாத எதிர்ப்பு சேவை, ராணுவம் மற்றும் மத்திய காவல்துறை ஆகியவை பழைய நகரத்தை அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கும் நடவடிக்கை என்பது தாக்குதலின் "இறுதி அத்தியாயம்" இது என்று, ஞாயிற்றுக்கிழமை அன்று இராக் ராணுவ தளபதிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் மாதம் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயத்தில் சுமார் 6,000 இருந்தனர். அந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது மொசூல் நகரத்தில் 300 போராளிகளுக்கும் குறைவனானவர்கள்தான் இருப்பார்கள் என்று நம்புவதாக ராணுவம் கூறியது.

முன்னதாக இந்த வாரம் விமானம் மூலம் வீசப்பட்ட துண்டறிக்கைகளில், பொதுமக்கள் பொது வெளிகளை தவிர்க்குமாறும் , தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் மற்றும் குண்டுகள் ஆகியவற்றிலிருந்து காயமடைந்தவர்களில் மேற்கு மொசூலில் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று செவ்வாயன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) எச்சரித்தது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
[Thursday 2024-04-25 18:00]

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



"ஆயுதங்களை கைவிட தயார்" - இரண்டு நிபந்தனைகள் முன்வைத்த ஹமாஸ் படைகள்!
[Thursday 2024-04-25 18:00]

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று அந்த குழுவினரின் மூத்தல் அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய கால விசித்திர விலங்கை பார்த்த கனடிய குடும்பம்?
[Thursday 2024-04-25 18:00]

பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம்!
[Thursday 2024-04-25 18:00]

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவுஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? - 16 வயது சிறுவன் கைது!
[Thursday 2024-04-25 06:00]

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.



இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 18:00]

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடொன்றிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.



காட்டுத்தீ அபாயத்தில் கனடா!
[Wednesday 2024-04-24 18:00]

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.



இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!
[Wednesday 2024-04-24 18:00]

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.



கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்!
[Wednesday 2024-04-24 06:00]

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.



லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 06:00]

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.



லண்டன் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 06:00]

பிரித்தானியாவில் தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளை கும்பல் ஒன்று செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லண்டன் சவுத்ஹோல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பெறுமதியான தங்க நகைகளை பறி கொடுத்துள்ளார். குறித்த பெண்மணி அந்தப் பகுதியிலுள்ள மெற்றோ வங்கிக்கு சென்று அங்குள்ள பெட்டகத்தில் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து வந்துள்ளார்.



ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்!
[Tuesday 2024-04-23 18:00]

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.



சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது!
[Tuesday 2024-04-23 18:00]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல்!
[Tuesday 2024-04-23 18:00]

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அடிக்கடி இஸ்ரேலைத் தாக்குகிற நிலையில் இஸ்ரேலும் பதிலடி கொடுத்த வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறினார்.



கனேடிய நகரமொன்றில் பற்றியெரிந்தபடி பயணித்த ரயில்!
[Tuesday 2024-04-23 18:00]

கனேடிய நகரமொன்றில், பற்றியெரிந்தபடி ரயில் ஒன்று பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.



பலவீனமாக உள்ள நாணயம்: தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்!
[Tuesday 2024-04-23 06:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.



லண்டனில் உயிருடன் தீயில் கருகிய இருவர்!
[Tuesday 2024-04-23 06:00]

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. தொடர்புடைய கோர சம்பவம் ஞாயிறன்று இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா