Untitled Document
April 18, 2024 [GMT]
சிவராம் படுகொலை பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும்! - சம்பந்தன் Top News
[Sunday 2017-04-30 09:00]

சிவராமின் படுகொலை சம்பந்தமான  உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.

சிவராமின் படுகொலை சம்பந்தமான உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.

  

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிவராம் பல விடயங்களைப்பற்றி எழுதியிருந்த போது அவருடைய சிந்தனையினுடைய கூர்மையை அன்று எழுத்துக்களால் காட்டினார். அவரின் எழுத்தின் கூர்மையை அவரால் எழுதப்பட்ட கட்டுரையால் எல்லோரும் அவதானித்தார்கள். அதை எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். சிவராமின் எழுத்துத்திறமையை பல பெரியார்கள், புத்திஜீவிகள் புகழ்ந்து பேசியதை நான் காதால் கேட்டிருக்கின்றேன்.

அவருடன் தனிப்பட்ட ரீதியில் பேசும் போதும், கருத்துக்களை, சிந்தனையை பரிமாறிக் கொள்ளும் போதும் அவர் சொல்கின்ற கருத்துக்களிலிருந்து, அவருடைய சிந்தனையுடைய ஆழம், அழுத்தம், அதனுடைய சரிவு எல்லாம் புலப்படும். சிவராம் சாதாரண மனிதரல்ல. அவர் திறமைசாலி. அவர் உயிரோடு இருந்திருந்தால் ஊடகத்துறையில் பெரியதொரு இடத்தைப் பிடித்திருப்பார்.அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. நாங்கள், எங்கள் சமுதாயம் பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றது. சிவராம், நடேசன், சுகிர்தராஜன் போன்றவர்களை இழந்திருக்கின்றது.

பல்வேறு காரணங்களின் நிமித்தம் சமூகம் சம்பந்தமாக சமூகத்தில் பிரபல சம்பவங்கள் நிகழ்ந்த போது அந்த சம்பவங்களை வெளிக் கொண்டு வருவதற்காக, அந்த சம்பவங்களின் உண்மைகளை மறைக்காமல் இருப்பதற்காக அவர் பல உண்மைகளை எழுதியதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார். திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது அக்கொலைச் சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பல முயற்சிகள் நடைபெற்றது. அந்த மாணவர்கள் தன்வசம் வைத்திருந்த குண்டுகளின் நிமித்தம் கொலை செய்யப்பட்டார்கள் எனும் சம்பவத்தை மாற்றியமைக்க முனைந்தார்கள்.அப்பாவி மாணவர்களை சுட்டுக் கொன்ற விடயங்கள் பத்திரிகை மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள். இதன் நிமித்தம் சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டார்.

சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் அறியப்படவில்லை. உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் என்று நான் அவசியமாக நினைக்கின்றேன். ஏனென்றால் பல்வேறு விதமான திறமையான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருந்த போது அவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டனர்? எதற்காக கொலை செய்தார்கள்? அவை வெளிவர வேண்டியது சமூகத்தில் உள்ள அத்தியாவசியமான தேவையாகும் என்று நான் கருதுகின்றேன்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இந்த நாட்டில் இடம்பெற கூடாது. ஏனென்றால் இவ்வாறான ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பான உண்மைத்தன்மை வெளி கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதுகின்றேன். லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார். இந்த சம்பவங்களின் விசாரணைகள் இன்று நடைபெறுகின்றது. அவர்களின் பிரேதங்கள் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. சில புது முடிவுகளுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் இந்தநாட்டில் யாரும் சுதந்திரமாக சிந்திக்கவில்லை. சுதந்திரமாக செயற்பட முடியாது.

சுதந்திரமாக எழுத முடியாத நிலமை இருந்தது. இன்று அந்த நிலைமை மாறியிருக்கின்றது. சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து வருகின்றோம். பல விடயங்களை பல கோணங்களில் விடயங்களை ஆராய்ந்து அவருடைய எழுத்துக்கள் மூலமாக இவ்வூடகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக பாரிய பங்களிப்பை செய்திருப்பார். அந்தவகையில் சிவராமின் இறப்பை பெரும் இழப்பாக கருதுகின்றேன்.

ஒரு நாட்டின் சமுதாயத்திற்கு ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்கள். அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது, ஜனநாயகம் பலமாக இருப்பது, ஜனநாயகம் ஆட்சியில் அடிப்படையாக இருப்பது, ஒரு நாட்டின் செயற்படுகின்ற ஊடகவியலாளரின் சுதந்திரத்தில் தங்கியிருக்கின்றது. அவர்கள் உண்மையை எழுத வேண்டும். உண்மையான விடயங்களை கூற வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். உண்மை சாதாரண மக்களுக்கு தெரிய வேண்டும். இவ்விதமாக தெரியப்பட்டால் தான் அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம். அது உறுதியாக பாதுகாக்கப்படலாம்.

ஆனால் ஊடகவியலாளர்கள் உங்களுடைய மூத்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தை நடத்தி மரியாதை செலுத்தியுள்ளீர்கள். ஊடகவியலாளர்கள் பலமாக இருக்க வேண்டும். ஊடகப்பணியை துணிவாக ஆற்ற வேண்டும். எம்மைப் பொருத்தளவில் ஊடகவியலாளர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றோம். நீங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் எவ்விதமாக உதவலாமோ அவ்வாறு உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் பின்நிற்க மாட்டோம். அதனை உறுதியாக கூறிவைக்கின்றோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகஸ்வரன், வியாளேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இ.சாணக்கியன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்கு வியூகமா?
[Thursday 2024-04-18 05:00]

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



மைத்திரிக்கு எழுந்து மரியாதை செலுத்தாத நிமல்!
[Thursday 2024-04-18 05:00]

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108 ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.



அருட்தந்தை சிறில் காமினிக்கு சிஐடி அழைப்பாணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.



சுதந்திர கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியேன்!
[Thursday 2024-04-18 05:00]

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



வடக்கிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
[Thursday 2024-04-18 05:00]

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இ வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



பேராயருக்கு ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் உறுதிமொழி!
[Thursday 2024-04-18 05:00]

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



அராலியில் கணவன் தாக்கி மனைவி படுகாயம்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் நேற்று மாலை கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கொத்துக்கு 1900 ரூபா விலை கூறிய கடைக்காரருக்கு பிணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு புதுக்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரியில் தப்பியோடிய கைதிகள்- 30 நமிடங்களில் துரத்திப் பிடித்த பொலிஸ்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!
[Wednesday 2024-04-17 16:00]

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி தாயின் நகைகள், மோட்டார் சைக்கிள் கொள்ளை!
[Wednesday 2024-04-17 16:00]

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.



திருநெல்வேலியில் விபத்து - இளைஞன் காயம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.



சுதந்திரக் கட்சியில் புதிய நியமனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆட்சேபனை!
[Wednesday 2024-04-17 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.



கோட்டாவின் 10 கோடி ரூபா வாகனம் மொடல் அழகி பியூமியிடம் வந்தது எப்படி?
[Wednesday 2024-04-17 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்துவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி எனது நாடு அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.



தனக்குத் தானே புதைகுழி வெட்டிய தெவரப்பெரும! - அங்கேயே சனியன்று அடக்கம்.
[Wednesday 2024-04-17 16:00]

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் விஷ பூச்சி கடித்ததால் ஒருவர் மரணம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்த ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.



டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவு!
[Wednesday 2024-04-17 16:00]

கடந்த காலாண்டு முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.



சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்!
[Wednesday 2024-04-17 16:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



திருமணமாகி ஒரே மாதத்தில் காணாமல்போன கணவன்! - மனைவி முறைப்பாடு.
[Wednesday 2024-04-17 16:00]

தனது கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா