Untitled Document
April 25, 2024 [GMT]
தமிழர்களின் உரிமைகளை பேச்சுக்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை உலகிற்கு உரைத்தவர் சிவராம்!
[Sunday 2017-04-30 09:00]

சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மாமனிதர் தராகி சிவராம் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண் டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மாமனிதர் தராகி சிவராம் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண் டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  

தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்த ஒரு பெரும் பணியை கைக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் இறந்த தினத்தில் அவர் பற்றி சிந்திக்காமல் இருப்பது இறை நிந்தனைக்கு ஒப்பானது.

அந்த வகையில் இந்நிகழ்வில் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்த போது மற்றைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்துவிட்டு எதுவித மறுப்பும் இன்றி எனது சம்மதத்தை தெரிவித்திருந்தேன். எனினும் ஒழுங்கு செய்ய சற்றுத் தாமதமாகிவிட்டது. இலங்கைத் தமிழினத்தின் சிறந்த ஒரு ஊடகவியலாளராகத் திகழ்ந்த தராகி டி. சிவராம் அவர்கள் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்களிடத்திலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தராகி என்றும் டி.சிவராம் என்றும் நன்கு அறியப்பட்ட திரு.தர்மரட்ணம் சிவராம் அவர்கள் மிகத்துணிச்சலானதொரு ஊடகவியலாளர். அவரின் எழுத்துக்கள் கூடுதலாக ஆய்வு முறையான ஊடகவியலாகவே அமைந்தன. எவ்வகையான நெருக்கடிச் சூழ்நிலைகளிலும் எதற்கும் அஞ்சாது துணிச்சலாக செய்திகளையும் அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தவர். அவருடைய ஊடகப் பணியில் இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக சிறந்த ஒரு ஊடகவியலாளராகச் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளி உலகிற்கு தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஊடகப் பணியினூடாக தமது எழுத்தாற்றல் மூலம் முழுப் பங்களிப்பையும் அவர் ஆற்றி வந்தார்.

ஊடகவியல்துறையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடாது தமிழ் அரசியல், இலக்கியம், இலங்கையின் சிக்கலான வரலாறு ஆகியவை தொடர்பிலும் இவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. சரித்திரவியலாளர்கள், அரசியல் அறிவியலாளர்கள், ஆதிமக்கள் வளர்ச்சி பற்றிய அறிவியலாளர்கள் , சட்டவல்லுனர்கள், புவியியலாளர்கள் ஆகிய அனைத்துத் துறை விற்பன்னர்களுடனும் தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்களை கைக் கொண்டிருந்தமையால் உள்நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரின் அரசியல் ஆய்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1990களில் பல அரசாங்கங்களும், மனித உரிமைகள் நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும், இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சிவராமின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக முன்வந்தனர்.

இதனால் அவர் ஐரோப்பிய, ஆசிய, வடஅமெரிக்க நாடுகள் பலவற்றிற்கு இராஜதந்திரக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பல முறை சென்று வந்தார். அவரின் இறப்பு ஏற்பட்ட தினத்தில்கூட ஜப்பானிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக செல்ல இருந்தார் என்பது பின்னர் அறியக் கிடைத்தது. இவரின் கொல்லப்பட்ட பூத உடல் தலையில் பலத்த காயங்களுடன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கும் வைத்தியசாலைக்கும் இடையில் புதர்கள் உள்ள ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்ற பணியில் தன்னை நீண்டகாலமாகவே இணைத்துக் கொண்ட சிவராம் தனது செயலில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்ததுடன், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார். சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து தமிழர்களுக்கான உரிமைகளை எந்தப் பேச்சுவார்த்தையின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாது என்ற உண்மையினை உலகுக்கு எடுத்துரைத்து வந்தார். இன்றும் அவ்வாறான சிந்தனையில் நாம் இருந்தாலும் ஆயுதத்தை ஒதுக்கிவைத்து ஆளுமைமிக்க நெருக்குதல்கள் மூலம் நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற எண்ணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

தராகி அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்திலும் தொடர்பாடலிலும் கூடுதலான அறிவை வளர்த்துக் கொண்டு எமது மக்களுக்கெதிரான அரசின் செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதற்கு பின்நிற்கக்கூடாது என்ற கொள்கையில் இறுக்கமாக இருந்தார். அவரின் எழுத்தாற்றல் பக்கச்சார்புகள் இல்லாமல் தனது விமர்சனங்களை உண்மையாகவும் நேர்மையாகவும் ஊடகவாயிலாக வெளிப்படுத்துகின்ற சிறந்த பண்பை கொண்டிருந்தமையால் தராகி அவர்களின் கட்டுரைகளை படிப்பதற்கென்றே 1990களில் விசேட வாசகர் வட்டம் மக்கள் மத்தியில் உருவாகியிருந்தமை அவரின் எழுத்தாற்றலுக்கு சான்று பகர்வன.

இந்த இடத்தில் நான் தற்போதைய இளைய பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு ஓர் பணிவான வேண்டுதலை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள். நடுநிலைநின்று எழுதுங்கள். ஆரம்பத்தில் உங்களை பலர் விமர்சிப்பார்கள். ஆனால் நாளடைவில் நீங்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளராக மக்களால் இனம் காணப்படுவீர்கள். அதற்காக உழையுங்கள் என்பதே எனது வேண்டுகோள். பல பத்திரிகையாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு. அன்றும் இருந்தது. அரசியலுக்கு வந்த பின்னரும் இருந்தது. இருந்தும் வருகின்றது.

அவர்களுள் சிலரைப் பரிதாபத்திற்கு உரியவர்களாக நான் அடையாளம் காண்கின்றேன். ஒருவர் நல்லவர், கெட்டவர் என்று அவர்கள் அடையாளம் காண்பது தமக்கு அவர் எந்தளவு குடிக்க, வெறிக்க, சாப்பிட கையளித்தார் என்பதை வைத்தே என்பதைக் கண்டேன். இன்னார் நாம் போனால் இவற்றையெல்லாம் தருவார். ஆகவே அவர் சிறந்த மனிதர் என்பார்கள். அந்த மனிதர் தம்மை விலை பேசுகின்றார் என்பதை அறியாமலேயே என்னிடம் இதைக் கூறுவார்கள். தராகி அவர்களின் கட்டுரைகள் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை என்ற ஒரு நிலையை அவரின் எழுத்தாற்றல் தோற்றுவித்திருந்தது.

சுதந்திர எழுத்தாளராக செயற்பட்ட தராகி அவர்கள் செய்திப் பத்திரிகைகளுக்கு மட்டும் செய்திகளை எழுதுவதுடன் நின்றுவிடாது வலயத் தளத்திலும் எழுத்தாளராக இறக்கும் வரை பணியாற்றினார். இவரின் செயற்பாடுகள் பல உண்மைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவரது எழுத்து வடிவம் கொலையாளிகளுக்கு மிகுந்த விசனத்தையும் கொலை வெறியையும் தூண்டிவிட்டிருப்பதை தராகி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த போதும் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நிலைப்பாட்டில் அவர் இறுதிவரை உறுதியுடன் தொடர்ந்து செயற்பட்டமை நன்றி அறிதலுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட வேண்டிய தொன்றாகும்.

தனது குடும்பம் தனது பிள்ளைகள் தனது சுய பாதுகாப்பு என்ற விடயங்களில் சுயலாபம் இன்றி செயற்பட்ட அவர் தனது பணியை இறுதிவரை செவ்வனே எடுத்துச் சென்று அநியாயமாக கொல்லப்பட்டார். அவரின் தனிப்பட்ட விபரங்களை இந்தத் தருணத்தில் ஆராய்ந்து பார்த்தோமானால் அவர் கிழக்கு மாகாண அக்கரைப்பற்றில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 11ந் திகதி பிறந்தார். மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்று உயர் கல்வியை கொழும்பில் பெம்பொறோக் மற்றும் அக்வினாஸ் கல்லூரிகளில் தொடர்ந்து 1982ல் பேராதனைப் பல்கலைக் கழகத்தினுள் உள்நுழைந்தார். ஆனால் 1983ம் ஆண்டின் கலவரங்கள் அவரைத் தொடர் உயர் கல்விபெற விடவில்லை.

காந்திய இயக்கத்துடன் அவர் தம்மை இணைத்துக் கொண்டார். அவர் மட்டக்களப்பைச் சேர்ந்த யோகரஞ்சினி பூபாலபிள்ளையை 1988ல் மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார். 1988ல் அவர் சக ஊடகவியலாளரின் வற்புறுத்தலின் பேரில்பத்திரிகையாளராகப் பங்கேற்றார். அதே காலகட்டத்தில் ஐலன்ட் பத்திரிகையின் அரசியல் விமர்சகராகப் பங்கேற்றார். அப்பொழுதுதான் 'தாரகை' என்ற பெயரை அப்பத்திரிகை வைக்கப் போய் அவருக்கு 'தராகி' என்ற நாமம் ஏதோ விதமாக வந்து சேர்ந்தது. தராகியும் தமது தொழில் சார்ந்த நேர்மையின் நிமித்தம் கொல்லப்பட்டார்கள் என்பது எமது நாட்டின் சாபக்கேடு.

அடக்கு முறை என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல, தொழிலாளர்கள் மீது தொழில் வழங்குனரின் அடக்குமுறைகள், வர்க்க அடக்குமுறைகள், இன அடக்கு முறைகள், மத அடக்குமுறைகள் என அடக்குமுறைகள் பல வடிவங்களில் நலிவடைந்த மக்கள் மீது வலிமை மிக்கவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. எனினும் அடக்கு முறைகள் அதிகரிக்க அதிகரிக்க வீறுகொண்டெழுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் காலம் சென்றாவது தமது கோரிக்கைகளில் கொள்கைகளில் வெற்றி பெற்றிருப்பதை சரித்திர வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.

தராகி அவரின் எழுத்தாற்றல் மூலம் அப்போதைய அரசாங்கங்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்குத் தொடர்பான சக்திகளும் அவரை நெருக்கடிகளுக்குள் நுழைக்க பலவிதங்களிலும் முயற்சித்து வந்தனர். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென நண்பர்களும் ஊடகவியலாளர்களும் இன்னும் பலரும் அவருக்குத் தெரிவித்திருந்த போதும் உயிருக்குப் பயந்து தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. 'இங்கு சாகாமல் நான் எங்கு சாவேன்' என்று அவர் தம் நண்பர்களிடம் பலமுறை கேட்டதுண்டு.

தனி ஒரு தராகியை கொல்வதன் மூலம் அவரின் கொள்கைகளை அழித்துவிடலாம் அல்லது அவ் வழியில் ஈடுபடுகின்ற ஏனைய அங்கத்தவர்களை பீதியடையச் செய்து அடக்கிவிடலாம் என்று எண்ணுவது மிலேச்சத்தனமானது என்றார். எமது நாட்டில் பல பத்திரிகையாளர்கள் அரச மிரட்டல்கள், அரச வன்முறை போன்றவற்றிற்குப் பலியாகி வந்துள்ளனர். தமிழ் ஊடகவியலாளர்கள் என்று பார்த்தால் நடராஜா அற்புதராஜா, பாலநடராஜஐயர், ஐயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், கே.எஸ்.இராஜா, ரேலங்கி செல்வராஜா, ஐ.சண்முகலிங்கம், எஸ்.சிவமகாராஜா, சுப்பிரமணியம் சுஜிந்தராஜன் போன்ற பலருடன் தராகியின் பெயரும் இணைக்கப்பட வேண்டி வந்தது எமது துரதிர்ஷ்டமே.

தராகி அவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, நல்ல மனம் கொண்ட நேர் சிந்தனையுடைய பல சிங்கள மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரது அன்பு மனைவி, பிள்ளைகள் பெற்ற துன்ப துயரங்களுக்கு யார்தான் பதில்கூறப் போகின்றார்கள்? எனினும் அவரின் விடாப்பிடியான கொள்கைகள் எமக்கெல்லாம் கலங்கரை விளக்கமாக விளங்கக் கூடும். அவரின் வாழ்க்கையில் இருந்து பின்வருவனவற்றை நாம் படித்துக் கொள்ளலாம்.

1. ஆய்வு முறை ஊடகவியல் எம்மை அரசியல், சமூக வானில் நடைபெற இருப்பவற்றை ஏற்கனவே ஆருடம் கூற வழிவகுக்கின்றது. பல எதிர்கால நடப்புக்களை அவர் ஏற்கனவே நடக்கும் என கூறியிருந்தார்.

2. கிணற்றுத்தவளைகள் போல் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு தேசிய, சர்வதேச அளவிலான விடயங்களை மறந்து விடாது இருப்பது.

தற்போது ஜெனீவாக் கூட்டத்தின் பிரேரணைகளுக்குப் பிறகு சர்வதேச செய்திகளுடனும் பரீட்சயப்பட்டு இருப்பது ஊடகவியளர்களுக்கு முக்கியமாகின்றது. தராகி அவ்வாறே செயல்பட்டார். வெளியுலக நடப்புக்களை அறிந்து அவற்றின் நன்மை தீமைகளை எமக்கு காலத்திற்குக் காலம் தந்துதவினார்.

3. நடப்பவற்றை அவர் மனித உரிமைகள் கண்டுகொண்டு பார்த்து தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

4. நவீன முறைகளை ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். அதனுடனே ஊடகவியலாளர்கள் சுயதிருத்தக் கோவைகளை இயற்றி தம்மைத் தாமே நல்வழிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

காலனுக்கு இரையாக்கப்பட்ட தராகிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் உரிய விசாரணைகளை இப்பொழுதாவது மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா