Untitled Document
April 25, 2024 [GMT]
அச்சுவேலி முக்கொலை வழக்கில் இன்று தீர்ப்பு! - குற்றத்தை ஒப்புக்கொண்டார் எதிரி
[Thursday 2017-03-30 07:00]

அச்சுவேலியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீரு்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், தான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். இதை நியாயப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரியான பொ.தனஞ்சயன் சாட்சியமளித்துள்ளார்.

அச்சுவேலியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீரு்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், தான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். இதை நியாயப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரியான பொ.தனஞ்சயன் சாட்சியமளித்துள்ளார்.

  

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை நேற்று மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இடம்பெற்ற சாட்சியப் பதிவின் போதே அவ்வாறு எதிரியினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் எதிரியான பொன்னம்பலம் தனஞ்சயன் சாட்சியம் அளிக்கையில், சில குடும்ப பிணக்குகள் காரணமாக, நானும் மனைவியும் பிரிந்திருந்தோம். எனது மகன் எனது மனைவியுடனேயே இருந்தார். பலமுறை மகனைப் பார்ப்பதற்கு முயற்சித்த போதும் எனக்கு அச் சந்தர்ப்பத்தை யாரும் ஏற்படுத்தி தரவில்லை. இவ்வாறான நிலையில் எனது மகனை திருட்டுத்தனமாக பார்ப்பதற்காக கடந்த 2014.05.03ம் திகதி இரவு 10 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட நேரத்தில் எனது நண்பனது முச்சக்கரவண்டியில் குறித்த சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றிருந்தேன்.

அங்கே சென்று நான் வீட்டின் ஓட்டைக்கல் வழியாக பார்த்த போது அறையில் எனது குழந்தை நடுவிலும், இரு பக்கமும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்ததை கண்டேன். அப்போது உண்மையில் அதில் எனது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தது யார் என என்னால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆனால் இக் காட்சியை கண்டதும் எனக்கு முன்பு ஒருமுறை எனது மாமி அதாவது மனைவியின் தாய், உனக்கு தர்மிகா (எனது மனைவி) விவாகரத்து பத்திரம் தான் அனுப்புவா என்று கூறியது ஞாபகம் வரவே நான் எனது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தது எனது மனைவியும், அவரோடு மாமியார் கூறியது போல வேறொருவரை திருமணம் செய்து வைத்து விட்டார்களோ என்ற தவாறான சிந்தனையும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் அவர்களது கதவினை ஆக்ரோசத்துடன் தட்டினேன்.

அப்போது நான் தட்டிய கதவுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு கதவினுடாக வெளியே வந்த எனது மனைவியின் தம்பியான சுபாங்கன் என்னை நோக்கி வாள் ஒன்றினை வீசினார். நான் அதனை தடுத்து பிடித்து விட்டேன். இச் சந்தர்ப்பத்தில் எனது கண்ணாடியும் கீழே வீழ்ந்து விட்டது. அதனால் எனக்கு இருட்டில் சரியாக நிதானம் இல்லாது சுபாங்கனும் நானும் வாளினை பறிப்பது தொடர்பில் முரண்பட்டுக்கொண்டோம். இதன்போது அங்கு எனது மாமியாரும் வந்து விட்டார். இதன்போதே நான் ஆக்ரோசத்தில் வாளினை விசுக்கி தாறுமாறாக வெட்டினேன். அந்த இடத்தில் அப்போது மாமியார் மீதும் வெட்டு வீழ்ந்திருக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து நான் எனது குழந்தை படுத்திருந்த அறைக்குள் இருந்து ஆண் ஒருவர் வெளியே வந்தார். அவர் கையில் பார்கட்டை இருந்தது. அவர் பார்கட்டையை என்னை நோக்கி அடிப்பதற்காக ஒங்கினார். அதனால் நான் என்கையில் இருந்த வாளினால் வெட்டினேன்.அப்போது அவர் பார்கட்டையை கீழே போடாததால் அவர் தலையில் வெட்டினேன். இதன்போது கத்திக்கொண்டு அந்த அறையில் இருந்து எனது மனைவியின் சகோதரி வெளியே வந்தார். மற்றைய அறையில் இருந்து மனைவியும் வெளியே வந்தார்.

நான் வெட்டிய வெட்டு எனது மனைவியின் சகோதரிக்கும் பட்டிருந்தது. அப்போது தான் நான் தவறாக விளங்கிக்கொண்டு விட்டேன் என்பதை புரிந்து கொண்டேன். இதன்பின்னர் நான் வெளியே வந்து வீழ்ந்து கிடந்த எனது மனைவியை தூக்கினேன். அப்போது அவரது முகத்தில் கையில் இரத்தம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் தாறுமாறாக வெட்டும் போது எனது மனைவி ஒடி வரும் போது அவருக்கும் வெட்டு வீழ்ந்திருக்கின்றது என்பதை உணர்ந்தேன்.

உடனே நான் அவ்விடத்தில் இருந்து வாளினையும் எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றேன். அவ்வாறு செல்லும் போது வழியில் எனது முச்சக்கரவண்டி எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டது. எனவே முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே ஒரமாக விட்டுவிட்டு தோட்டப் பகுதி ஊடாக எனது வீடு நோக்கி நடந்து சென்றேன். செல்லும் போதே வாழைத் தோட்டத்துக்குள் வாளினை குத்தி வைத்து விட்டு சென்றேன்.

பின்னர் ஊரெழுவில் உள்ள எனது வீட்டிற்கு சென்று அங்கு உடைகளை மாற்றிவிட்டு சுன்னாகத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு அதிகாலை 4 மணியளவில் சென்று நடந்ததை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைய போவதாக கூறினேன். ஆனால் எனக்கு சம்பவம் நடக்கும் போது அவர்கள் இறந்து விட்டார்களா இல்லையா என்பது தெரியாது. பின்னர் எனது நண்பர் ஊடாகவே அறிந்தேன் மூவரும் இறந்து விட்டதாக. பின்னர் நான் சென்று எனது பிரதேசத்திற்கு பொறுப்பான கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் காலை சரணடைந்தேன். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த என்னை பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் பாரப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு நானே நான் வெட்டுவதற்கு பயன்படுத்திய வாளையும் பொலிஸாருக்கு எடுத்துக்கொடுத்தேன். நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை. என சாட்சியமளித்தார்.

இதனை தொடர்ந்து இவரது சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் குறித்த சம்பவத்தில் மூவர் கொலை செய்ததையும், இருவரை கொலை செய்ய முயற்சித்தமையையும் ஏற்றுக்கொள்ளுகிறீரா? என வினாவியதற்கு, குறித்த எதிரி, குறித்த மூவரது மரணத்திற்கும் தாமே காரணம் எனவும் அதற்கு காரணம் தமக்கு இருந்த மன உளைச்சலும், அன்றைய தினம் தாம் கண்ட காட்சியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஆக்ரோசமுமே காரணம் என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த சாட்சி குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதில் இருந்து தனது குழந்தையை பார்க்க முடியாது இருந்ததாகவும் எனினும் தமது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, நீதிமன்றில் வைத்து தனது குழந்தையை பார்ப்பதற்கு நீதிபதி அனுமதியளித்திருந்தமைக்கும் திறந்த நீதிமன்றில் கைகூப்பி கண்ணீர்மல்க தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த ஐந்து வயதுடைய குழந்தையிடம் நீதிபதி குறித்த தந்தையான எதிரியை காட்டி இது யார் என வினவிய போது குறித்த குழந்தை பதிலளிக்காது நின்றது. அதன் போது, நீதிபதி உங்களது அப்பா எங்கே என கேட்ட போது அக் குழந்தை அப்பா செத்துவிட்டார் என பதிலளித்தது. அந்த பதிலை கேட்டதும் நீதிமன்றில் ஒரு விதமான அமைதி நிலவியது.

குறித்த வழக்கில் 10வது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த நிலைய பொறுப்பதிகாரி சமன் நிலந்த குமார ஜெயசிங்க சாட்சியமளிக்கையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 2014.05.04ம் திகதி அதிகாலை 2மணிக்கு எனக்கு தகவல் கிடைக்கப்பட்டிருந்தது. இதன்படி நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே காணப்பட்ட வீட்டில் பெண் ஒருவர் காயப்பட்டு இருந்தார். அவர் முழுமையாக இரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக நான் அப் பெண்ணை பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு சேர்ப்பித்தேன். அதன் பின்னர் அங்கே அவதானித்த போது வீட்டின் மற்றுமொரு அறையில் இருந்து ஒருவர் முனகுவது போன்றதான சத்தம் கேட்டது. நான் சத்தம் கேட்ட அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இரத்த வெள்ளத்தில் காயப்பட்டு கிடந்தார்கள். அவர்கள் இருந்த அறை முழுவதும் இரத்தம் தேங்கியிருந்தது. நான் அவர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பினேன்.

மற்றைய அறையில் நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தையில் சுமார் இரண்டு வயதான குழந்தையொன்று நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. நான் அக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டேன். அப்போதும் அக் குழந்தை நன்றாக துங்கிக்கொண்டே இருந்தது. நான் அக் குழந்தையின் தலை முதல் பாதம் வரை தடவி பார்த்தேன் அவருக்கும் எதாவது காயங்கள் உண்டா என, ஆனால் எதுவிதமான காயமும் இருக்கவில்லை. நான் அக் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தேன்.

வைத்தியசாலைக்கு சென்ற போது முன்னர் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தார்கள். உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் வரை குறித்த குழந்தையை யாரும் பொறுப்பெடுக்க வரவில்லை. உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னரே உறவினர்கள் எனக் கூறி அக் குழந்தையை பாரமெடுத்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து கொலையாளியை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் இக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவரை கைது செய்வதற்காகவும் அவர் தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவும் ஒமந்தை சோதனை சாவடி, கடற்படை, கட்டுநாயக்க விமான நிலையம் எனைய பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தேன்.

குறித்த சந்தேகநபர் இக் கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பே குறித்த கொலை செய்யப்பட்டவர்களோடு முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததையும் இவருக்கும் கொலையில் தொடர்பு இருக்கின்றது என்பதையும் விசாரணைகளினூடாகவும் இரகசிய தகவல்கள் ஊடாகவும் கண்டறிந்திருந்தேன். அதன் அடிப்படையிலே குறித்த பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவரை 2014.05.04ம் திகதி மாலை 5.30 மணிக்கு கோப்பாய் சந்தியில் உள்ள பஸ்தரிப்பு நிலையமொன்றில் வைத்து கைது செய்திருந்தேன்.

தொடர்ந்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கொலை செய்யப் பயன்படுத்திய வாள், இவர் பயணம் செய்ய பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் இவர் அணிந்திருந்த உடைகள் போன்றவற்றை கைப்பற்றியிருந்தேன். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானது கட்டளைக்கு ஏற்ப அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தியிருந்தேன். என சாட்சியமளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரது சாட்சியத்தை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்யும் போது இந்த சம்பவம் தொடர்பில் நீங்கள் சிறிகரன் என்பவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தீர்களா என வினவியபோது அதற்கு குறித்த சாட்சி இல்லையென பதிலளித்தார். தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி உங்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த எதிரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தாம் எதிரி சார்பில் கூறுவதாக கூறியிருந்தார். இதற்கு குறித்த பொலிஸ் அதிகாரியான சாட்சி தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து இவ் வழக்கில் 15வது சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த, இச் சம்பவத்தில் காயமடைந்திருந்த தனஞ்சயன் தர்மிகாவை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரியான கந்தையா ரட்ணசிங்கம் சாட்சியமளிக்கையில், காயமடைந்த பெண்ணான த. தர்மிகாவின் உடலில் 15வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. அதில் எட்டு காயங்கள் கொடூரமான காயங்களாக காணப்பட்டிருந்தன என சாட்சியமளித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் இவ் வழக்கின் 07வது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த சட்டவைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியமளிக்கையில், என்னிடம் பிரேத பரிசோதனைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட மூன்று சடலத்தில் முதலாவது சடலமான நி.அருள்நாயகி என்பவரது சடலத்தில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. இவர் உயிரிழந்தமைக்கு காரணம் அவரது உடலில் காணப்பட்ட அதிகளவான வெட்டுக் காயங்களில் இருந்து அதிகளவான குருதி பெருக்கு ஏற்பட்டதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.

இதேபோன்று நி. சுபாங்கன் என்பவரது உடலில் 6 வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. இவரும் உடலில் இருந்து காயங்களூடாக வெளியேறிய அதிகளவான குருதி பெருக்கத்தால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும். மூன்றாவதாக உயிரிழந்த நபரான யசோதரன் மதுஷாவின் உடலிலும் எட்டு வெட்டுக்காயங்கள் காணப்பட்டிருந்தன. இவரும் உடலில் இருந்து அதிளவான இரத்தம் வெளியேறியதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும். இதனை விட நான் படுகாயமடைந்திருந்த தங்கவேல் யசோதரனது உடலை பரிசோதனை செய்த போது அவரது உடலில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. அத்துடன் கொலை செய்யப்பட்ட மூவரது உடலில் இருந்த காயங்களும் காயமடைந்த நபரது உடலில் இருந்த காயங்களும் கூரான ஆயுதத்தால் வெட்டும் போதே ஏற்படுத்தப்பட்டிருக்கும். என சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன் பொன்னம்பலம் தனஞ்சயனை 2014.05.05ம் திகதி 11.55க்கு பரிசோதனை செய்யும் போது அவரது உடலில் ஆறு உடனடி காயங்களும், 1 பழைய காயமும் 1 காயத்திற்கான வடுவும் காணப்பட்டிருந்தது. இதில் ஆறு புதுக்காயங்களில் நான்கு உரஞ்சல் காயமாகவும் இரண்டு வெடிப்புக் காயங்களாகவும் காணப்பட்டிருந்தன. மேலும் வெடிப்பு காயங்கள் மிக சிறிய கனம் குறைந்த ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டதாக எனது அனுபவத்தினூடாக அறிக்கின்றேன் என சாட்சியமளித்திருந்தார். இதனை தொடர்ந்து இவரது சாட்சியமும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த வழக்கின் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த 04வது சாட்சியான த. தர்மிகா மற்றும் 05வது சாட்சியான தங்கவேல் யசோதரன் ஆகியோர் தம் மீது வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாளினை அடையாளம் காட்டுவதற்காக மட்டும் புதன்கிழமை மன்றுக்கு அழைக்கப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து எடுத்து வரப்பட்டிருந்த குறித்த சான்றுப் பொருட்கள் திறந்த நீதிமன்றில் நீதிபதியால் பிரிக்கப்பட்டு குறித்த சாட்சிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த சாட்சிகள் அவ் வாளினை அடையாளம் காட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அடையாளம் காட்டிய வாளானது மன்றால் இலக்கமிடப்பட்டு சாட்சிப் பட்டியலில் சான்றாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றைவிட சட்டவைத்திய அதிகாரிகளது அறிக்கைகளும் சாட்சிப் பட்டியலில் மன்றால் இலக்கமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் தீர்ப்பானது இன்று யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்படவுள்ளதாகவும் அதுவரை குறித்த வழக்கை ஒத்திவைக்கவும் எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்ப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா