Untitled Document
April 25, 2024 [GMT]
30 ஆண்டு ஆயுதப் போராட்டத்தினால் பெறமுடியாத தீர்வை ஒரு வருடத்தில் பெற முடியுமா? - செல்வம் எம்.பி
[Monday 2017-02-20 07:00]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் முப்படையையும் கொண்ட நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. அப்படி இருக்கையில் ஒரு வருடத்தில் தீர்வு என்பதை எப்படி பெற முடியும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கவிஞர் எம். பரஞ்சோதி எழுதிய 'நாங்கள் விட்டில்கள் அல்ல' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

30 வருட ஆயுதப் போராட்டத்தில் முப்படையையும் கொண்ட நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. அப்படி இருக்கையில் ஒரு வருடத்தில் தீர்வு என்பதை எப்படி பெற முடியும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கவிஞர் எம். பரஞ்சோதி எழுதிய 'நாங்கள் விட்டில்கள் அல்ல' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

  

அவர் தொடர்ந்தும் தெரிவித்தாவது, கேப்பாப்புலவு மக்கள் போராடுகிறார்கள் அவர்களது நிலத்திற்கு என்று இருந்து விட முடியாது. நாளைக்கு எங்களது வீட்டிற்கு பக்கத்தில் வந்து ஒருவர் இருக்கின்ற போது நாங்கள் போராடுவோம். அப்பொழுது எங்களுக்கு ஆதரவாக அவர்கள் போராடுவார்கள். நாங்கள் நெருப்பைக் கண்டால், வெளிச்சத்தைக் கண்டால் சாவதற்கு விட்டில்கள் அல்ல. நாங்கள் வெடித்தவர்கள். நெருப்பை உருவாக்குவதற்கு வெடித்த இனம். இந்த கவிதையும் எமக்கு உணர்வுகளைத் தூண்டுகிறது. பல கலைஞர்கள் தமது உணர்வுகளை எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதுகின்ற போது பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பொது சிந்தனையார்களை விட்டுவிடுங்கள். ஒரு விடுதலைப் போராளியாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஒரு கவிஞன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் எப்படி எங்களை தயார் படுத்துகின்றோம் என்பது தான் கேள்வி. தமிழ் நாட்டிலே இளைஞர்கள் தங்களது பாராம்பரியம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். இங்கேயும் எங்களுடைய இளைஞர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கேப்பாப்புலவுக்கு அந்தப் போராட்டங்கள் எங்கே போனது...? காணாமல் போனவர்களின் உறவுகள், தாய்மார்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கும் போது அந்த இளைஞர்களின் போராட்டம் எங்கே போனது. மழை பெய்கிறது. நாங்கள் பார்வையாளராக திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு போறோம். அதில் ஒருவர் வந்து இருந்திட்டாலே பெரிய எழுச்சியாக இருக்கிறது. நிச்சயமாக கேப்பாபுலவு வெல்லப்பட வேண்டும். எல்லோரும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

எங்களுடைய இனம் படுகின்ற துன்பங்கள், பட்ட துன்பங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு அகிம்சை ரீதியில் போராட நினைக்கின்ற ஒரு எழுச்சியாக மாறுகின்ற தன்மை ஏற்படுகின்ற போது நாங்கள் மௌனமாக இருக்கின்றோம். ஆனால் தேசியம் பேசுகின்றோம். போராட்டத்தின் கடைசி நாட்கள் எண்ணப்படுகின்ற போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலே எத்தனை பேர் நாங்கள் அதற்கு ஆதரவாக என்னுடைய இனம் அழிகிறது. எங்களுடைய சொந்தங்கள் அழிகிறது என அதற்கு ஆதரவாக ஏதாவது செய்திருக்கிறோம். கொண்டாட்டங்கள் நடந்தது. கலியாண வீடுகள் நடந்தது. எல்லா கொண்டாட்டங்களும் நடந்தது. அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று இருந்தோம். இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என்கிறோம். அதற்கு பல விமர்சனங்கள்.

30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தில் முப்படையையும் கொண்ட நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. காரணம் சர்வதேசத்தை நாங்கள் மதிக்காத தன்மையால் சர்வதேசம் இவர்களை அடக்க முடியாது என்று நினைத்து அழித்தார்கள். ஒருவருடத்திலே 2017 இல் தீர்வு கிடைக்கும் என்று சொன்னார்கள். சம்மந்தன் ஐயா சொன்னதாக பல விமர்சனங்கள். சம்பந்தன் ஐயா ஒரு கருத்தை தவறுதலாக சொல்லி விட்டாரோ அல்லது அப்படி தான் சொன்னாலும் முப்படைகளையும் கொண்ட எங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஒரு வருடத்தில் எப்படி சாதிக்க முடியும். அதனால் நாங்கள் எல்லாம் சொல்பவர்கள் பின்னால் செல்கின்றோம். நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஐயா சொன்னார் என்றால் அவர் ஏதோவொரு சிந்தனையில் சொல்லியிருக்கலாம். இந்த அரசாங்கத்திடம் ஒரு வருடத்திற்குள் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் எல்லாம் நம்பினோம் பாருங்கள். இப்பொழுது ஐயாவை விமர்சனம் செய்கிறோம். இவர் சொன்னார் நடக்கவில்லை. நாங்கள் எல்லோரும் யாரு..? எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேசத்திடம் நியாயம் கேட்கின்ற ஒரு வழிமுறை தான் இதுவே தவிர, அரசாங்கத்திடம் சரணாகதி இல்லை. சர்வதேசம் ஜனநாயத்தைப் பேசுகிறது. ஐ.நா சபையில் எங்களுக்காக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இவை அத்தனைக்கும் நியாயம் கேட்கும் வகையில் நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறோம். தான் ஒரு ஜனநாயகவாதி என்று ஜனாதிபதி சொன்னார். புதிய அரசாங்கம் எங்களது இனத்திற்கு ஒரு தீர்வைத் தரும் என்று சொன்னார். இவையெல்லாம் ஒரு பசப்பு வார்த்தைகள். சர்வதேசம் நியாயத்தை தரவேண்டும். அதற்கான வழிமுறை தான் இதுவே தவிர எம் இனத்தை காட்டிக் கொடுக்கின்ற வழிமுறையில்லை. அப்படி காட்டிக்கொடுக்க நினைத்திருந்த நிலை இருக்குமாக இருந்தால் எல்லோரும் அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்க முடியும்.

கேப்பாபுலவு போராட்டத்தை நியாயப்படுத்தியிருக்க முடியும். அரசாங்கம் செய்வது சரியென்று. எங்களது போராட்டத்தில் முப்படைகளையும் கொண்டு இருக்கின்ற போது சர்சதேசத்தில் ஒரு நாட்டைக் கூட எங்களது பக்கம் வைத்திருக்காத அந்த பலவீனம் தான் இன்றைக்கு எங்களை துளைத்திருக்கிறது. இன்றைக்கு ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் வகையில் எமது நடவடிக்கைகள் மாறிக் கொண்டு வருகிறது. ஆகவே நாங்கள் எங்களது இனத்தை அடைமானம் வைத்து சோரம் போய் வழிநடத்தவில்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். பார்வையாளராக இருக்க வேண்டாம். விமர்சனங்கள் வேண்டும் அவை மனதைத் தாக்குகின்ற விமர்சனங்களாக இருக்க கூடாது.

நாங்கள் எல்லோரும் எங்களுடைய அரசாங்கம் வருகின்றது என்று தான் மாகாணசபைக்கு வாக்கு போட்டோம். சிறிலங்கா அரசை கேள்வி கேட்கிறோம். சிறிலங்கா அரசில் நம்பிக்கையில்லை. அதை விடுங்கள். மாகாணசபை என்பது எங்களுடையது. அதிகாரம் என்பது நாங்கள் பெற வேண்டும். தட்டிப்பறிக்க வேண்டும். அதிகாரம் தரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். வெறும் பேச்சுக்களைப் பேசுவதில் அர்த்தமில்லை. இன்றைக்கு பின்தங்கி இருக்கிறது என்றால் யாருடைய பலவீனம். எங்களது உள்வீதிகள் பாழாய் போயுள்ளது என்றால் யாருடைய பலவீனம். எங்களுடைய நிலங்களிலே இராணுவம் இருக்கின்றது என்றால் எங்களுடைய பலவீனம்.

ஒரு அதிகாரி, ஒரு நிர்வாகம் இந்த மாகாணசபைக்கு அடங்கவில்லை என்றால் தட்டிக்கேட்கவேண்டியது எங்னளது கடமை. நாங்கள் எப்பொழுதும் மத்திய அரசாங்கத்தை தான் பேசுகிறோம். அதில் வேலையில்லை. சர்வதேசத்திடம் நியாயம் கேட்பது தான் எங்களது வேலை. அதேபோல் எங்களது அரசு என்கின்ற இந்த மாகாணசபை இரண்டு விடயங்களில் எங்களது மக்களுக்கு நியாயம் செலுத்த வேண்டும். அபிவிருத்தி, இனப்பிரச்சனை என்கின்ற இரண்டு விடயத்திலும் மாகாணசபை தனது அதிகாரத்தை எடுக்க வேண்டும்.

அகிம்சை போராட்டங்களை எமது தலைவர்கள் செய்கின்ற போது எப்படி ஆயுதங்களை தூக்கினோம். அதிகாரங்களை நாங்கள் கையில் எடுத்ததால் தான் அது நடந்தது. ஆகவே கிடைக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு நாம் அதனைக் கூட பெற முயலவேண்டும். எனவே எல்லோருக்கும் கடமை இருக்கிறது. உணர்வு இருக்கிறது. விடுதலை என்ற அந்த வேட்கை இருக்கிறது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .



கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.



மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.



சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா