Untitled Document
April 25, 2024 [GMT]
கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி - சுந்தர் பிச்சையிடமிருந்து பதிலும் கிடைத்தது
[Friday 2017-02-17 08:00]

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் வேலை வழங்கக் கோரி ஏழு வயது சிறுமி கூகுளி்ன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் என்ன? என்பதை பார்ப்போம்.லண்டனை சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் வேலை வழங்கக் கோரி ஏழு வயது சிறுமி கூகுளி்ன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் என்ன? என்பதை பார்ப்போம்.லண்டனை சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  

கூகுள் நிறுவனத்தில் வேலை வழங்குமாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் கடிதத்திற்கு பதில் கிடைக்காது என்றிருந்த கோலெவிற்கு சுந்தர் பிச்சை பதில் அளித்துள்ளார். கோலெவிற்கு சுந்தர் பிச்சை அளித்துள்ள பதிலில், 'உன் கனவைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும். இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்ததும் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர முறையாக விண்ணப்பிக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார். கூகுள் தலைவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கோலெ பிரிட்ஜ்வாட்டர் குறிப்பிட்டுள்ளதாவது,

என் பெயர் கோலெ, நான் வளரும் போது கூகுளில் வேலை செய்ய விரும்புகிறேன். இதோடு நான் சாக்லேட் ஃபேக்ட்ரியில் பணிபுரியவும், ஒலிம்பிக்ஸ்-ல் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவும் ஆசை கொண்டுள்ளேன். நான் ஒவ்வொரு சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறேன். கூகுளில் பணியாற்றும் போது பீன் பேக்களில் உட்கார்வது, சறுக்கிச்சென்று விளையாடுவது மற்றும் கோ கார்டிங் போன்றவற்றில் ஈடுபட முடியும் என்று என் தந்தை தெரிவித்தார். எனக்கு கம்ப்யூட்டர்களையும் பிடிக்கும், என்னிடம் டேப்லெட் ஒன்று உள்ளது. டேப்லெட்டில் நான் கேம்களை விளையாடுவேன், அதில் சதுர வடிவில் இருக்கும் ரோபோக்களை மேலும், கீழுமாக வைத்து விளையாடுவேன்.

கம்ப்யூட்டர் படிப்பது எனக்கு நல்லது என்று என் அப்பா தெரிவித்துள்ளார். அவர் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு ஏழு வயதாகிறது மேலும் எனது ஆசிரியர்கள் நான் வகுப்பில் சிறந்து செயல்படுவதாக என பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் சிறப்பாக படிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் இதே போல் நன்கு படித்தால் ஒரு நாள் கூகுளில் எனக்கு வேலை கிடைக்கும் என என் தந்தை தெரிவித்துள்ளார்.

என் தங்கை ஹோலீயும் திறமையானவள், அவளுக்கு 5 வயதாகிறது. ஹோலீக்கு பொம்மைகளுடன் விளையாடுவது மற்றும் ஆடை அணிந்து கொள்வது பிடிக்கும். என் தந்தை உங்களுக்கு கடிதம் எழுதி கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். உண்மையில் வேலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் கடிதம் எழுதுவது இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

என் கடிதத்தை படித்தமைக்கு நன்றி. நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது. எனது முதல் கடிதத்தை என் தந்தைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல எழுதினேன். குட் பை.

இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் கடிதத்திற்கு சுந்தர் பிச்சை எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த கடிதம் எழுதியமைக்கு நன்றி. உனக்கு ரோபோக்கள், கம்ப்யூட்டர்களை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து தொடர்ந்து படிப்பாய் என நம்புகிறேன். உனது கனவு மற்றும் இலக்குகளை மனதில் வைத்து கடினமாக உழைத்தால் நீ மனதில் நினைத்தது அனைத்தும் - கூகுளில் பணியாற்றுவதில் இருந்து ஒலிம்பிக்ஸ்-ல் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வது வரை அனைத்தையும் செய்ய முடியும். பள்ளி படிப்பை முடித்த பின் கூகுளில் பணியில் சேர உனது விண்ணப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன். உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம்!
[Monday 2024-04-22 19:00]

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.



சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.



டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.



சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.



பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.



பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.



ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.



கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.



பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.



உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.



பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.



அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.



நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.



எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.



இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க வணிக வளாகத்திற்குள் ஏலியன்கள் புகுந்ததா?
[Monday 2024-01-08 18:00]

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.



புத்தாண்டை முதலாவதாக வரவேற்ற பசிபிக் தேசம்!
[Sunday 2023-12-31 17:00]

பசிபிக் நாடான Kiritimati atoll புத்தாண்டை முதலாவதாக வரவேற்றுள்ளது. இரண்டாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நியூசிலாந்தை அடுத்து டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன. அத்துடன் பல மில்லியன் மக்கள் வரும் மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்!
[Saturday 2023-12-30 16:00]

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்க இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா