Untitled Document
April 18, 2024 [GMT]
யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய 'வணிகக்கல்வி ஆசான்' பசில் ஜெனதாஸின்: இறுதி நிமிடங்கள்! Top News
[Thursday 2016-10-20 08:00]

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே நேற்று முன்தினம் தினம் 17.10.2016 திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  சுவாமியார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும், நினைவுரைகளும், சமயச் சடங்குகளும் நேற்று காலை முதல் இடம்பெற்றன.  இறுதி நிகழ்வில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள்,  நண்பர்கள், உறவினர்கள் என என ஆயிரக்கணக்கில் திரண்டதால் ஆசிரியரின் வீட்டு வளவு நிரம்பி அயல் வீதிகளிலும் பெருமளவு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
இறுதி அஞ்சலி நிகழ்வில் கல்வியலாளர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 
ஆசிரியர், மாணவர்களால் ஏராளமான மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே நேற்று முன்தினம் தினம் 17.10.2016 திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுவாமியார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும், நினைவுரைகளும், சமயச் சடங்குகளும் நேற்று காலை முதல் இடம்பெற்றன. இறுதி நிகழ்வில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என என ஆயிரக்கணக்கில் திரண்டதால் ஆசிரியரின் வீட்டு வளவு நிரம்பி அயல் வீதிகளிலும் பெருமளவு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. இறுதி அஞ்சலி நிகழ்வில் கல்வியலாளர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர், மாணவர்களால் ஏராளமான மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டன.

  

ஆசிரியரின் வீடு மற்றும் அதனை அண்டிய சிறு ஒழுங்கைகளில் கூட மாணவர்களினால் ஏராளமான கண்ணீர் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் அன்னாரின் பூதவுடல் முன்னே செல்ல வீதியின் இரு பக்கங்களிலும் மாணவர்கள் வரிசையாக நடந்து வர, அவர்களுக்கு பின்னால் மக்களும் அணிவகுத்து வந்தனர்.

அன்னாரின் திடீர் பிரிவால் பெரும் சோகத்தில் இருந்த உறவுகள், மாணவர்களின் கதறல்களால் அப்பகுதியே அதிர்ந்தது.

அன்னாரின் வீட்டின் மட்டுமல்ல, செம்மணி மயானத்தில் இடம்பெற்ற நல்லடக்க நிகழ்விலும் பெருமளவு மாணவர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

கடந்த 5 ஆம் திகதி அச்சுவேலி, வல்லை, நாவற்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும், மனைவியும் பாரவூர்தியினால் மோதுண்டு சுமார் 10 மீற்றருக்கும் அதிகமான தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்திருந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பசில் ஆசிரியர் (வயது - 50) மரணமடைந்துள்ளார். அவரது மனைவி இன்னமும் கோமா நிலையிலேயே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மாணவர்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்த ஆசிரியரின் வாழ்க்கைப் பயணம் திடீரென முடிவுக்கு வந்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர வழியில்லாமல் இடைவழியில் தவித்த போது, அவர்களுக்கு இலவசமாகவே கல்வியைப் புகட்டியவர்.

குறிப்பாக முல்லைத்தீவு, ஓட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களுக்கும் நேரடியாக சென்று ஒரு சதம் காசு கூட வாங்காமல் கல்விப் பணியை மேற்கொண்டவர்.

கல்வி இன்று வியாபாரமாக்கப்பட்ட சூழ்நிலையில், பல ஆசிரியர்கள் ஏழை மாணவர்களிடமும் பெருந்தொகை பணம் வாங்கி கொஞ்சம் கூட மனிதாபிமானம் காட்டாது செயற்பட்டு வரும் நிலையில், பசில் ஆசிரியரின் மறைவு மாணவர் சமுதாயத்துக்கே பேரிடியாகும்.

இதனால் அவர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருக்கிறார். அவரிடம் ஒரு பழைய மோட்டார் சைக்கிள் மாத்திரமே இருந்துள்ளது. அவரிடம் காணி, சொத்துக்கள் என்று எதுவும் இல்லை என்றே கூறலாம். ஆனால், தனது சகோதரங்களை, உறவுகளை, மாணவர்களை நன்றாக வாழ வைத்துள்ளார்.

ஒருவனுக்கு கல்வி புகட்டுவது என்பது ஒரு மாபெரும் மகத்தான சேவை. அதன் மதிப்பை அறிந்து கல்விச் சேவையை அள்ளி வழங்கிய அந்த ஆசிரியருக்கு மாணவர் சமுதாயம் திரண்டு வழங்கிய அஞ்சலியை நேரில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பிரமித்துப் போயினர்.

அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு கூட இப்படி ஒரு பெரும் கூட்டத்தினை பணம் கொடுத்துக் கூட கூட்ட முடியாது.

பசில் ஆசிரியரின் கம்பீரத் தோற்றமும், மாணவர்களை அணுகும் விதமும், எளிமையும், இரக்க சிந்தனையுமே இன்றும் மாணவர்களின் நெஞ்சில் அவரை நிலை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆசிரியரின் நினைவுகளை தந்தையார் பகிர்ந்து கொண்ட போது, எட்டுப் பிள்ளைகளுக்கு மூத்த மகன். அவர் குடும்பத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர். சொந்தங்கள், பந்தங்கள் யார் எங்கே கஷ்டப்படுகினம், என்ன நடந்தாலும் உடனே அங்கே நிற்பார். பண உதவி மாத்திரமல்ல சரீர உதவியினையும் முடிந்தவரை செய்வார். போர் நடந்த காலப்பகுதியில் எத்தனையோ பேருக்கு தனியொரு ஆளாக நின்று பதுங்குகுழி வெட்டிக் கொடுத்திருக்கிறார். மற்றைய மகன்களின் மனைவிமார் கூட அவரை பசில் அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள். பிள்ளைகளின் மதிப்பு தான் பெற்றோருக்கும். நான் பெரிதாக படித்தவனல்ல, ஆனால் நான் கச்சேரிக்கு போனால் என்ன, பிரதேச செயலகம் போனால் என்ன, வங்கிக்கு போனால் என்ன பசில் சேரின் அப்பா என்று அறிந்தால் அங்கே குறைந்தது என் மகனிடம் படித்த ஒரு மாணவராவது இருந்து எல்லா உதவிகளையும் கேட்டு கேட்டு செய்வார்கள். நான் எங்காவது அருகில் உள்ள இடங்களுக்கு கூட மோட்டார் சைக்கிளில் போனால் கூட கட்டாயம் ஹெல்மெட் போட வேணும் என வலியுறுத்துவார். அப்படி ஒரு முன்னெச்சரிக்கை உள்ளம் கொண்டவருக்கு எப்படி விபத்து சம்பவித்துள்ளதோ என நினைக்கும் போது ஏக்கமாக உள்ளது. என்றார்.

நெருங்கிய நண்பரும், சக ஆசிரியருமான ஷாம் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன்னியிலும், வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் நேரடியாக சென்று இலவசமாக கல்வியைப் போதித்து வந்துள்ளார். நான் இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு முதன்மைக் காரணமே பசில் தான். எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அது நீண்டநாள் நீடிப்பதில்லை. சில நேரம் பிள்ளைகள் படிக்க வந்திருப்பார்கள். கஷ்டத்தில இடையில் நின்றிருப்பார்கள். அதனால் சேர் கவலைப்பட்டாலும், அவர்களுக்கு தனது நோட்ஸ்களை கொப்பியெடுத்து வீடு தேடிச் சென்று கொடுத்திருக்கிறார். தன்னலம் கருதாத ஒரு நண்பனை இழந்ததை ஏற்க முடியாதுள்ளது. என்றார்.

எல்லோராலும் விரும்பப்படத்தக்க ஒரு ஆளாக இருந்திருக்கிறார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், மாணவர்களின் வளர்ச்சிக்காக எப்படி ஒரு தவ வாழ்வு வாழ வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார் பசில் ஆசிரியர்.

இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். என்று பணக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும். அந்தப் பாடல் வரிக்கு நிரந்தர உதாரணமாக மாறிப் போய்விட்டார் பசில் சேர்....

பசில் சேரின் திடீர் இழப்பால் நிர்க்கதியாக உள்ள அவரின் குடும்பத்துக்கு உதவ பசில் சேரின் மாணவர்கள் மற்றும் ஷாம் ஆசிரியர் இணைந்து நிதியம் ஒன்றை ஆரம்பித்து உள்ளனர்.

அதற்கு பசில் ஆசிரியரிடம் படித்து இன்று பல்வேறு துறைகளிலும் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும் பழைய மாணவர்கள் அனைவரும் உதவலாம்.

  
   Bookmark and Share Seithy.com



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை! - தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி.
[Thursday 2024-04-18 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



அதிகளவு உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதான காரணம்!
[Thursday 2024-04-18 16:00]

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!
[Thursday 2024-04-18 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஞாயிறன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
[Thursday 2024-04-18 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.



நயினாதீவில் பெண்ணுக்கு நடுக்கடலில் பிரசவம்!
[Thursday 2024-04-18 16:00]

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.



வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் கோட்டா!
[Thursday 2024-04-18 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேவிபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் காயம்!
[Thursday 2024-04-18 16:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆரையம்பதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
[Thursday 2024-04-18 16:00]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



ரஷ்ய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்கு வியூகமா?
[Thursday 2024-04-18 05:00]

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



மைத்திரிக்கு எழுந்து மரியாதை செலுத்தாத நிமல்!
[Thursday 2024-04-18 05:00]

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108 ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.



அருட்தந்தை சிறில் காமினிக்கு சிஐடி அழைப்பாணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.



சுதந்திர கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியேன்!
[Thursday 2024-04-18 05:00]

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



வடக்கிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
[Thursday 2024-04-18 05:00]

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இ வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



பேராயருக்கு ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் உறுதிமொழி!
[Thursday 2024-04-18 05:00]

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



அராலியில் கணவன் தாக்கி மனைவி படுகாயம்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் நேற்று மாலை கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கொத்துக்கு 1900 ரூபா விலை கூறிய கடைக்காரருக்கு பிணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு புதுக்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரியில் தப்பியோடிய கைதிகள்- 30 நமிடங்களில் துரத்திப் பிடித்த பொலிஸ்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா