Untitled Document
April 24, 2024 [GMT]
சிங்களவருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளார் விக்கி! - விமல் வீரவன்ச ஆவேசம்
[Wednesday 2016-09-28 19:00]

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச-

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச-

  

முக்கியமாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது எழுக தமிழ் உரையில் குறிப்பிட்ட வடக்கில் தீவிரமடைந்துள்ள சிங்களமயமாக்கல், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, புத்தர் சிலைகளும், பௌத்த கலாசாரங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் பகிரங்கமாக திணிக்கும் முயற்சிகள் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகள் இனவாத கருத்துக்களாகும். இவை சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பிற்கான முயற்சியே.

ஒரு பக்கம் மங்கள சமரவீர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் பின்னிப் பிணைந்து உறவாடும் வேளையில் மறுபக்கம் உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் கட்டப்பட்டுவரும் நல்லிணக்கத்துடனான ஐக்கியச் சூழலை கொன்றுவிட்டு சிங்கள மக்களையும், பௌத்த கலாசாரத்தையும் அருவருப்பான விடயமாக எடுத்துக்காட்டி அப்பாவித் தமிழ் மக்களை இனவாதப் பாதையில் இட்டுச் செல்கின்றார்.

அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்காக உயிர்நீத்த திலீபனின் திருவுருவப் படத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து நினைவு கூருகின்றார்கள். வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் குடியேற வேண்டாம் எனக் கூறுகிறார்கள். இன்னும் தெளிவாகக் கூறினால் இவை சிங்கள இனச் சுத்திகரிப்பாகும். இதுவொரு பாசிசவாத வெளிப்பாடாகும். இந்தப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை குடியேற்ற வேண்டாம் என எங்களால் கூறமுடியாது.

அதேபோல சிங்கள மக்களைக் குடியேற வேண்டாம் என்றும் எவராலும் கூறமுடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தில் யாராவது இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவொரு நோயாகும். வடக்கு தமிழருக்கே சொந்தமானது. அதனால் வேறு இனத்தவர்கள் குடியேற முடியாது என்ற எண்ணக்கருவை விதைக்கும் சுதந்திரம் தற்போதைய நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் ஆட்சியிலேயே வழங்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனின் இனவாதம், சம்பந்தனின் நடுநிலைவாதம் என்ற இரண்டு விதமான கூற்றை தெற்கு அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, சுமந்திரனோ அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே உள்ளனர்.

இலங்கைக் குடியுரிமை உள்ள தமிழர் ஒருவரது புகலிடக் கோரிக்கையை அண்மையில் நிராகரித்த கனேடிய நீதிமன்றம், அரசியல் தஞ்சத்தை நிராகரித்தமைக்கான காரணத்தையும் தெரிவித்திருந்தது. குறித்த பிரஜை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார் என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த இயக்கத்தின் கிளையெனவும் கூறியிருக்கிறது. இதுதான் கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு. வெளிநாட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்திருந்தாலும் அரசாங்கம் அவ்வாறு தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா