Untitled Document
March 29, 2024 [GMT]
நெருங்கிய உறவுத் திருமணம்.. ஓர் பார்வை..!
[Tuesday 2016-05-17 08:00]


உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும், முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக் கடமை யாதெனில், தங்களது வாழ்க்கைக் காலத்தினுள், வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும், உருவாக்கிவிட வேண்டுமென்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கின்ற சூட்சுமங்கள் கடந்து, உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால், மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால், வளமற்ற மழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கை கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில் இயற்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும், புத்தியில் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில் நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி, மனிதனின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும். புதிய மனித சந்ததி உருவாக்கத்தின், நாகரிக உயிரியற் பிணைப்பாக திருமணங்கள் அமைகின்றன. இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு, பரம்பரையலகுப் பல்வகைமையையும் கொண்டமைந்தால், வளமான வழித்தோன்றல்களுக்கும் இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்கும் வழிகோலும்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும், முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக் கடமை யாதெனில், தங்களது வாழ்க்கைக் காலத்தினுள், வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும், உருவாக்கிவிட வேண்டுமென்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கின்ற சூட்சுமங்கள் கடந்து, உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால், மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால், வளமற்ற மழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கை கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில் இயற்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும், புத்தியில் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில் நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி, மனிதனின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும். புதிய மனித சந்ததி உருவாக்கத்தின், நாகரிக உயிரியற் பிணைப்பாக திருமணங்கள் அமைகின்றன. இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு, பரம்பரையலகுப் பல்வகைமையையும் கொண்டமைந்தால், வளமான வழித்தோன்றல்களுக்கும் இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்கும் வழிகோலும்.

  

இரத்த உறவு திருமணங்கள் - தகவல் திரட்டு

ஏனைய உறவுத் திருமணங்களை விடவும், இரத்த உறவுத் திருமணங்கள், பிறப்பு குறைபாடுகளையும் குழந்தை இறப்பு வீதத்தையும் இரு மடங்கினால் அதிகரிக்கிறது.பரம்பரை நோய்த்தாக்கத்தில், முதல்நிலை இரத்த உறவு இனக்கலப்பானது, இரத்த உறவற்ற திருமணங்களை விட 13 மடங்கு அதிகரிப்பையும் இரண்டாம்நிலை இரத்த உறவுமுறை இனக்கலப்பை விட, 4 மடங்கு அதிகரிப்பையும் கொண்டிருக்கும்.முதல்நிலை இரத்த உறவு திருமணங்கள், 40 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகளில் எழக்கூடிய பிறப்புக் குறைபாடுகள் மற்றும் குழந்தை இறப்புக்கு, ஒப்பான அளவு பிரச்சினைகளுக்கு சந்தர்ப்பம் அமைக்கும்.

இரத்த உறவுத் திருமணங்கள், குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஆளுமை விருத்தியை கணிசமாக மங்கச் செய்வதோடு, குழந்தைகளில் உயரம் மற்றும் உடற்திணிவு குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்மேற்குலக நாடுகள், பொதுவாக இரத்த உறவுத் திருமணங்களை புறக்கணிக்கின்ற போதும், மத்திய கிழக்கு நாடுகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவை, இன்னும் இரத்த உறவுமுறைத் திருமணங்களாகவே அமைகின்றன.அமெரிக்கா போன்ற நாடுகளில், முதல்நிலை இரத்த உறவு திருமணங்கள் சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, திருமணத்துக்கு முந்தைய மரபணுப் பரிசோதனை சான்றிதழ்களும் கோரப்படுகின்றன. இலங்கையிலும் இரத்த உறவு முறைத் திருமணங்கள் தொடர்பான முரண்பாட்டுத் தர்க்கங்கள் உள்ளபோதும், அவை தொடர்பான தெளிவூட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

திருமணம் - குடும்ப ஒப்பந்தம்

சமூக, சமய, சம்பிரதாய மற்றும் சட்ட அடிப்படையில், பொதுவாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் குடும்பம் எனும் அடிப்படை அலகை அமைத்து, அதனூடக பாலுறவு, இனப்பெருக்கம் மற்றும் பொருளாதாரம் ஆகிய வாழ்வியல் வளங்களை அடைந்து கொள்வதற்கான, வாழ்க்கையின் இல்லற ஒப்பந்தமே திருமணமாகும். உலகளவில், திருமணமானது பொதுமைப்பாடான ஆண்-பெண் ஒழுக்கமுறை பிணைப்பாக இருக்கின்றபோதும், வௌ;வேறு இனப்பண்பாட்டுக் குழுக்களிடையே வெவ்வேறு விதமான திருமண விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன.

இரத்த உறவுத் திருமணங்கள்

குறிப்பிட்ட குழும நலன்களான, குடும்பச் சொத்துப் பாதுகாப்பு, வாழ்விட அருகாமை, கலாசார வாழ்க்கைத்துணை, குடும்ப உறவு கட்டமைப்பும் வலுப்படுத்தலும், நிலைத்து நிற்கக்கூடிய திருமண ஸ்திரத்தன்மை, மாமி-மருமகள் நல்லுறவு, பெண் சுயவுரிமை போன்ற வாழ்வியல் விடயங்களை மாத்திரம் முன்னிலைப்படுத்துகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பரம்பரை சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பதற்காக, நெருங்கிய உறவினர்களுக்கிடையில் நிகழும் திருமணமாகும். இத்திருமண பந்தத்தில் ஏனைய உறவுத் திருமணங்களை விடவும் பரம்பரை நோய்த்தாக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாகவிருக்கும்.

கலப்புத் திருமணங்கள்

பரம்பரையலகு பல்வகைமையில், பரந்துப்பட்ட வேறுபாடுடைய மூதாதையரைக் கொண்ட, நெருங்கிய இரத்த உறவினர்கள் அல்லாத ஆண்-பெண்ணுக்கிடையில் நிகழும் திருமண உறவாகும். பரம்பரையலகு என்பது யாது? ஒவ்வொரு மனிதனின் உடல் உருவவியலுக்குரிய செய்திகளை கொண்டிருப்பதும், அச்செய்திகளை அடுத்தடுத்த சந்ததிக்கும் காவிச் செல்கின்றதுமான தனித்துவக் கட்டமைப்புக்கள். உதாரணமாக ஒரு மனிதனுடைய கண்ணிறம், இரத்தவகை மற்றும் உயரம் என்பவற்றுக்கு வெவ்வேறு வகையான பரம்பரை அலகுகள் பொறுப்பாகவிருக்கும்.

ஆயிரக்கணக்கான இவ்வலகுகள், 22 சோடி தன்னிறமூர்த்தம் மற்றும் 1 சோடி இலிங்க நிறமூர்த்தம் எனப்படும் கட்டமைப்புக்குள் சோடி சோடியாக சேமித்து வைக்கப்படுவதோடு, இச்சோடிகளின் ஒவ்வொரு பிரதிகளும் தாய் மற்றும் தந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும். சோடிகளில், பிரதிகள் இரண்டும் ஆட்சியுடையவையாக(AA) அல்லது பின்னடைவானவையாக(aa) அல்லது ஒன்று ஆட்சியுடையதாகவும் மற்றையது பின்னடைவானதாகவும்(Aa) இருக்கும். (AA, Aa, aa எல்லா சோடிகளிலும் ஆங்கில பெரிய எழுத்து A-ஆட்சியையும், சிறிய எழுத்து a-பின்னடைவையும் குறிக்கும்)

பரம்பரையலகு நோய்கள் என்றால் என்ன?

பரம்பரையலகுகளில் ஏற்படுத்தப்படும் விகாரங்கள் அல்லது மாற்றங்களின் மூலம், அவற்றில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் மாற்றப்படுவதனால், அச்செய்திகளுக்குரிய மனித இயல்புகளும் பிறழ்வுகளாக மாற்றமடையும். இப்பிறழ்வுகளில் சில, குறிப்பிட்ட நபரை மாத்திரம் பாதிப்பனவாகவும், இன்னும் சில அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படக்கூடியவையாகவும் அமைகின்றன.

பரம்பரையலகு நோய்கள்: காவிகள் எனப்படுவோர் யார்? பரம்பரையலகில் ஆட்சியான பிரதியையும், பின்னடைவான பிரதியையும் ஒருங்கே கொண்டிருக்கின்றதும்(யுய), பின்னடைவான பிரதியில்(ய) நோய்க்குரிய தகவல்களைக் காவுகின்றதுமான, நோய்த்தாக்கத்தை வெளிக்காட்டாத நபர்கள்.பரம்பரையலகு நோய்கள்: தாய்-தந்தை இருவருமே காவிகள்ஒவ்வொரு கருத்தரிப்பும் 25 வீதமான நோயுற்ற குழந்தைகளையும் 25 வீதமான குறைபாடற்ற குழந்தைகளையும் 50 வீதமான காவிக் குழந்தைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.

பரம்பரையலகு நோய்கள் - ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வு

பரம்பரையலகின் ஆட்சியான தனிப்பிரதியொன்றில் நிகழும் விகாரமாகும். பொதுவாக குறைபாட்டுக் குழந்தைகளின் பெற்றோரில், எவரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களில் நோய்த்தாக்கங்கள்; சிலவேளைகளில் வெளித்தெரிவதுமில்லை. இப்பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு நோய் கடத்தப்படும் சந்தர்ப்பம் 50 வீதமாகவிருக்கும். பல்சிறுநீரக கட்டிநோய் (Polycystic Kidney Disease), பரம்பரை கொலஸ்ட்ரோல் நோய் (Familial Hypercholestrolemia), பரம்பரை தற்குருதிச்சோகை (Hereditary Spherocytosis) போன்றவை ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வுகளாகும்.

பரம்பரையலகு நோய்கள் - பின்னடைவான தன்மூர்த்தப் பிறழ்வு

பரம்பரையலகின் பின்னடைவான இரு பிரதிகளும் மாற்றமுறுவதினால் நிகழும். நோய்த்தாக்கமுற்ற பெற்றோரினால் பிள்ளைகளுக்கு 100வீத தாக்கமும் காவிப் பெற்றோரினால் ஒவ்வொரு கருத்தரிப்பிலும் பிள்ளைகளுக்கான நோய்த் தாக்கம் 25 வீதமாகவுமிருக்கும். இப்பாதிப்புக்களாக அரிவாளுரு குருதிச்சோகை (Sickle Cell Anaemia), பீனைல் கீற்றோன் கழிவுநோய் (Phenylketonuria), நார்க்கட்டி (Cystic fibrosis) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பரம்பரையலகு நோய்கள் - ஆட்சியான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு

ஓ-இலிங்க மூர்த்த பரம்பரையலகுகளின் ஆட்சிப்பிரதி விகாரங்களாகும். இப்பிறழ்வு பெண்களை விட ஆண்களை அதிகமாகத் தாக்குவதோடு, அனேகமாக ஆண்கரு இறப்பை ஏற்படுத்தும். இதனால் நோய் நிலைகளோடு அதிகமாக பெண்களே இருப்பர். ரெட் கூட்டறிகுறி (Rett Syndrome), ஐகார்டி கூட்டறிகுறி (Aicardi Syndrome) போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

பரம்பரையலகு நோய்கள் - பின்னடைவான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு

இவை ஓ-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளின் பின்னடைவு பிரதிகளில் நிகழ்கின்ற மாற்றங்களாகும். இதனால் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புறுகின்றனர். தாய் பாதிப்பற்றவராகவும் தந்தை பாதிப்புள்ளவராகவுமுள்ள நிலையில், ஆண் குழந்தை பாதிப்புற்றும், பெண் குழந்தை காவியாகவுமிருக்கும்.

தந்தை பாதிப்பற்றவராகவும் தாய் காவியாகவும் உள்ளபோது, ஆண் பிள்ளை 50வீத குறைபாட்டு சந்தர்ப்பத்தையும் பெண் பிள்ளை 50 வீத காவியாகவுமிருக்கும். தந்தை பாதிப்போடும் தாய் காவியாகவுமிருப்பின், ஆண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பும், பெண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பு அல்லது 50 வீத காவியாகவும் இருப்பதற்கான சந்தர்ப்பங்களுண்டு. குருதி உறையாமை(Haemophlia), தசை நார்த்தேய்வு (Duchenne Muscular Dystrophy), நிறக்குருடு, ஆண்களில் வழுக்கை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.

பரம்பரையலகு நோய்கள் - லு-இலிங்க மூர்த்தப்(Y-linked) பிறழ்வு

Y-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளில் ஏற்படும் சடுதியான விகாரங்களாகும். லு-இலிங்க மூர்த்தம் ஆண்களில் மாத்திரமேயுள்ளதால் ஆண்கள் மாத்திரமே பாதிக்கப்படுவர். ஓப்பீட்டளவில் லு-சிறியதாகவும் குறைவான பரம்பரையலகுகளையும் கொண்டிருப்பதனால் பாதிப்பும் குறைவாகவுள்ளதோடு, ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

பரம்பரையலகு நோய்கள் - காவிப் பரிசோதனைகளும் ஆலோசனைகளும்

பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே காவிகளாகவுள்ள நிலையில் அவற்றுக்கான மரபணு பரிசோதனைகளும் கருத்;தரித்தல் தொடர்பான உளவள ஆலோசனைகளும் விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இரத்த உறவு முறைத் திருமணங்கள்: பரம்பரை நோய் அபாய அளவு ஒவ்வொரு மனிதனிலும் விகாரத்துக்கு உட்படக்கூடிய பரம்பரை அலகுகளும் காணப்படும். எவ்வாறெனினும் நெருங்கிய உறவினர் அல்லாதவர்களில் இவ்விகார அபாயம் மிகக்குறைவாகவே இருக்கும்.

ஆனால், இரத்த உறவு முறையில் பொதுவான மூதாதையரை கொண்டிருக்கும் நெருங்கிய உறவினர்கள், ஏறக்குறைய ஒத்த பரம்பரையலகுச் சங்கிலியையும் விகாரத்துக்குரிய பரம்பரையலகுகளையும் அதிகளவில் கொண்டிருப்பர். இதனால் நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள், பரம்பரையலகு குறைபாட்டு குழந்தைகளையும் காவிக் குழந்தைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பங்களை வெகுவாகவே அதிகரிக்கும். இரத்த உறவுத் திருமணங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றபோது, பரம்பரை நோய் அபாய அளவும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும்.

இரத்த உறவு முறைத் திருமணங்களும் பரம்பரை நோய் பரிகாரங்களும்

பரம்பரை நோய் பாதிப்புக்கள் பற்றிய பரந்தளவிலான விழிப்புணர்வுகளும் அறிவூட்டல்களும் மிகவும் அவசியமாக இருப்பதோடு, திருமணத்துக்கு முன்னரான மரபணுப் பரிசோதனைகளும் பரம்பரையலகுப் பிறழ்வு பற்றிய மருத்துவ ஆலோசனைகளும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. பரம்பரைக் குறைப்பாட்டு குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோரின் வேதனை மரண வேதனையிலும் பன்மடங்கு பெரியது. உன்னத உயிர்களை உற்பத்தி செய்து உலகுக்கு அளிக்கும் அனைவருமே, தங்களது குழந்தையும் இன்னுமொரு வளமான எச்சத்துக்;குரிய மூலமாகவே இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

உயிர் உற்பத்தியில் பரம்பரையலகுப் பிறழ்வுகள் நிகழ்ந்ததன்; பின்னர் நிவர்த்திப்பதற்கான உத்திகள், மருத்துவ உலகுக்கு இன்றளவிலும் சவாலாகவே இருக்கிறது. ஆகையினால் ஏனைய எல்லாக் காரணங்களையும் பின்தள்ளி, இரத்த உறவுத் திருமணங்களை தவிர்த்து, செல்வங்களில் உயர்ந்த செல்வமாய் குறைகளற்ற குழந்தைகளை உருவாக்கும் உறவுகளாக, திருமண பந்தங்களை முதன்மைப்படுத்துங்கள்.

  
   Bookmark and Share Seithy.com



3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்?
[Friday 2024-03-29 16:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள். இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.



ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு!
[Thursday 2024-03-28 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-03-27 18:00]

பெரும்பாலானோர் இந்த கால கட்டத்தில் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.



உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
[Tuesday 2024-03-26 18:00]

தென்னிந்திய சமையலில் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பு சீராக செயற்படுவதாக ஆய்வு ததகவல்கள் குறிப்பிடுகின்றது. அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது.இது இதய ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.



உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா!
[Sunday 2024-03-24 18:00]

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பாயா. இது பெரும்பாலும் காலை உணவாக இடியாப்பம், அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
[Saturday 2024-03-23 18:00]

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.



நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?
[Friday 2024-03-22 18:00]

பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்!
[Thursday 2024-03-21 18:00]

நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுக்காய் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னனு தெரியுமா?
[Tuesday 2024-03-19 15:00]

இந்த அவசரமான கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். வீட்டையும் பார்க்க வேண்டும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் வெளியிலும் வேலை செய்ய வேண்டும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர்.



டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
[Monday 2024-03-18 18:00]

பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான். நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது. இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.



மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?
[Sunday 2024-03-17 18:00]

பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.



தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!
[Saturday 2024-03-16 18:00]

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.



சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?
[Friday 2024-03-15 18:00]

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.



திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
[Thursday 2024-03-14 18:00]

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.



நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!
[Wednesday 2024-03-13 18:00]

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.



கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?
[Tuesday 2024-03-12 18:00]

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஜப்பானியர்கள் 90 வயதை கடந்து உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-03-11 18:00]

நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சுகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.



கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Sunday 2024-03-10 16:00]

வெயில் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.



தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன்?
[Saturday 2024-03-09 15:00]

நமது உடல் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் சாப்பிடுவது மிகவும் பயன் தரும். அந்த வகையில் பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பாதாமில் அதிக நார்ச்சத்து மற்றும் கூடுதலான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.



ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு!
[Friday 2024-03-08 18:00]

தொன்று தொட்டு சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிளகு உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அது தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது. மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா