Untitled Document
April 20, 2024 [GMT]
வித்தியா கொலை வழக்கை கையில் எடுக்கிறது யாழ். மேல் நீதிமன்றம்!
[Thursday 2016-05-05 08:00]

புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்திருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்திருந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  

சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் தோன்றி சட்டமா அதிபரின் மனுவை விண்ணப்பமாகத் தாக்கல் செய்தார். புங்குடுதிவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார், கோபாலசிங்கம் ஜயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாந்தன், சிவதேவன் துஷாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜயதரன் கோகிலன், ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் இந்த 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் காலம் 11.05.2016 ஆம் திகதி முடிவுறுகின்றது. இந்த நிலையில் இவர்களது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, பிணைச்சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் இந்த மனு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுவதாக அரச சட்டவாதி ஜனாப் சக்கி இஸ்மாயில் மன்றில் தெரிவித்தார். இந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை 3 மாதத்திற்கு ஒரு தடவையாக ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரச சட்டவாதி தனது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் உத்தரவை முதலில் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கான விசாரணை நடத்துவதற்கு சந்தேக நபர்களை மேல் நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தவிடுமாறும் அரச சட்டத்தரணி மன்றில் கோரினார். இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியல் காலத்தை நீடிப்பதா என்று விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை அவர்களை நீதிமன்றில் முற்படுத்துமாறு அநுராதபுரம் மறியற்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்றநீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தை விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு உட்டபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற சுற்று வளாகப் பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு 15.05.2016 ஆம் திகதி முடிவுறும் தறுவாயில் பிணைச்சட்டத்தின் 17 ஆவது உறுப்புரையின் கீழ் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது என்ற சட்டப்பரிந்துரையின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் யாழ் நீதிமன்றில் இந்த விசேட மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்!
[Saturday 2024-04-20 06:00]

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 91 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.



கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-20 06:00]

தமிழரசு கட்சி ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது சேவை சந்தை முன்பாக நேற்று அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.



ஈரானிய ஜனாதிபதியின் வருகைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!
[Saturday 2024-04-20 06:00]

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Saturday 2024-04-20 06:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்!
[Saturday 2024-04-20 06:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.



ஒட்டாவா கொலைகளுடன் தொடர்புடைய இளைஞன் பிணை கோரவில்லை!
[Saturday 2024-04-20 06:00]

கனடா- ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!
[Saturday 2024-04-20 06:00]

அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜேவிபி- பேராயர் சந்திப்பு குறித்து சந்தேகம் கிளப்புகிறது ஐதேக!
[Saturday 2024-04-20 06:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னியினர், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.



சுற்றுலாவிகள் கூடும் இடங்களில் சுற்றிவளைப்புகள்!
[Saturday 2024-04-20 06:00]

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் சஞ்சய் ரணசிங்க தெரிவித்துள்ளார்.



ஐஸ் போதைப்பொருளுடன் கடற்படை அதிகாரிகள் கைது!
[Saturday 2024-04-20 06:00]

முல்லேரிய பிரதேசத்தில் சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா