Untitled Document
April 19, 2024 [GMT]
அமெரிக்காவில் கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை கொன்ற பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை!
[Saturday 2016-04-30 09:00]

அமெரிக்காவில் பிள்ளையில்லா ஏக்கத்தால் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்ற பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் மிச்சேல் வில்கின்ஸ்(28). ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனது ஆசைமகள் பிறப்பதற்கு முன்னரே ஆவ்ரா என்ற பெயரும்சூட்டி, குழந்தையின் வரவுக்காக காத்திருந்தார்.
பேறுகால பெண்களுக்கு தேவையான உடைகளையும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் புதிய ஆடைகளையும் தருவதாக இணையதளம் மூலம் கிடைத்த தகவலை அறிந்த மிச்சேல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த முகவரியை தேடி சென்றார். அங்கு அவரை டய்னல் லேன்(35) என்ற பெண் அன்புடன் வரவேற்றார். 
குளிர்பானம் கொடுத்து, உபசரித்து, தனிமையில் வாடும் தனது நிலையைப் பற்றி மணிக்கணக்கில் கதையளந்த டய்னல், தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை போட்டுவைக்கும் பாதாள அறைக்கு மிச்சேலை அழைத்துச் சென்றார்.அங்கு கிடந்த மேஜை விளக்கால் மிச்சேலை கொலைவெறியுடன் தாக்கிய டய்னல், அவரது கழுத்தை நெறித்து மூர்ச்சை அடைய வைத்தார். பின்னர், நீளமான கத்தியை எடுத்து மிச்சேலின் அடிவயிற்றுப் பகுதியை வெட்டினார்.

அமெரிக்காவில் பிள்ளையில்லா ஏக்கத்தால் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்ற பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் மிச்சேல் வில்கின்ஸ்(28). ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனது ஆசைமகள் பிறப்பதற்கு முன்னரே ஆவ்ரா என்ற பெயரும்சூட்டி, குழந்தையின் வரவுக்காக காத்திருந்தார். பேறுகால பெண்களுக்கு தேவையான உடைகளையும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் புதிய ஆடைகளையும் தருவதாக இணையதளம் மூலம் கிடைத்த தகவலை அறிந்த மிச்சேல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த முகவரியை தேடி சென்றார். அங்கு அவரை டய்னல் லேன்(35) என்ற பெண் அன்புடன் வரவேற்றார். குளிர்பானம் கொடுத்து, உபசரித்து, தனிமையில் வாடும் தனது நிலையைப் பற்றி மணிக்கணக்கில் கதையளந்த டய்னல், தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை போட்டுவைக்கும் பாதாள அறைக்கு மிச்சேலை அழைத்துச் சென்றார்.அங்கு கிடந்த மேஜை விளக்கால் மிச்சேலை கொலைவெறியுடன் தாக்கிய டய்னல், அவரது கழுத்தை நெறித்து மூர்ச்சை அடைய வைத்தார். பின்னர், நீளமான கத்தியை எடுத்து மிச்சேலின் அடிவயிற்றுப் பகுதியை வெட்டினார்.

  

வயிற்றின் உள்பகுதியில் கருப்பைக்குள் உயிருடன் உலவிக் கொண்டிருந்த மிச்சேலின் பெண் குழந்தையை வெளியே எடுத்தார். அங்கிருந்து தனது காரில் ஏறி, அதற்குள் உயிரிழந்துகிடந்த சிசுவுடன் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்த டய்னல், தனது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துவிட்டதாகவும் அதன் உயிரை காப்பாற்றும்படியும் டாக்டர்களிடம் கதறினார். அவரது உடல்வாகு மற்றும் நடத்தையில் சந்தேகப்பட்ட டாக்டர்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில், டய்னல் வீட்டின் பாதாள அறைக்குள் மயங்கிகிடந்த மிச்சேல் அடிவயிற்றில் தாங்க முடியாத வலியுடன் கண்விழித்தார். தன்னைச் சுற்றிலும் ரத்தவெள்ளமாக கிடப்பதையும், வயிற்றில் இருந்த சிசு, கருப்பையுடன் களவாடப்பட்டதையும் அறிந்து வேதனையால் துடித்தார்.

அங்கிருந்தபடியே போலீசாருக்கும், அவசர சிகிச்சை குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார். இதன்மூலம் டய்னல் லேனின் வக்கிரபுத்தி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார் நடத்திய விசாரணையில் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத டய்னல், வெளிநாட்டில் இருக்கும் தனது புதிய காதலனை ஏமாற்றுவதற்காக தான்கருவுற்றிருப்பதாக நாடகம் ஆடியுள்ளார் என்பது தெரியவந்தது.காதலன் வீட்டுக்கு வருவதற்குள் தனது கருவில் இருந்த சிசு, குறைப்பிரசவத்தில் இறந்துப்போனதாக காதலனை நம்பவைக்க கர்ப்பிணிப் பெண்களை ஈர்ப்பதற்காக இணையதளத்தில் பேறுகால பெண்களுக்கு தேவையான உடைகளையும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் புதிய ஆடைகளையும் தருவதாக போலி விளம்பரம் கொடுத்துள்ளார். அவரது சதிவலையில் சிக்கிய மிச்சேல் கருவில் இருந்த குழந்தையை பறிகொடுத்துவிட்டு, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பவுல்டர் கவுண்ட்டி கோர்ட்டில் டய்னல்மீது சதி, மோசடி, சிசுக்கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி டய்னல் லேனுக்கு நூறாண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளார். மிகவும் காட்டுமிராண்டித்தனமான இதுபோன்ற ஒரு செயலை யாரும் செய்வார்களா? என்று கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என இந்த தீர்ப்பை விதித்த நீதிபதி மரியா பெர்கன்கோட்டர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.



சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.



பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.



பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.



ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.



கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.



பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.



உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.



பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.



அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.



நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.



எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.



இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க வணிக வளாகத்திற்குள் ஏலியன்கள் புகுந்ததா?
[Monday 2024-01-08 18:00]

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.



புத்தாண்டை முதலாவதாக வரவேற்ற பசிபிக் தேசம்!
[Sunday 2023-12-31 17:00]

பசிபிக் நாடான Kiritimati atoll புத்தாண்டை முதலாவதாக வரவேற்றுள்ளது. இரண்டாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நியூசிலாந்தை அடுத்து டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன. அத்துடன் பல மில்லியன் மக்கள் வரும் மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்!
[Saturday 2023-12-30 16:00]

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்க இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.



100 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாடு!
[Tuesday 2023-12-26 18:00]

முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, மக்கள் நேற்று (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்!
[Wednesday 2023-12-20 18:00]

முன்னோர்களின் வழியில் டைனோசர்களின் முட்டையை குலதெய்வமாக கிராமத்தினர் வழிபடும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய் (40). இவர், ஒரு உருண்டையான பொருளை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா