Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்: (பகுதி-2)
[Friday, 2012-07-27 11:03:22]

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பது புற்று நோய் போன்றது. நோயைத் தீர்க்க எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. சிறுபான்மை மக்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக அவ்வப்போது குரல் எழுப்பலாம். அமைதியான வழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம். முழக்கங்களை முழங்கலாம். ஆனால் பெரும்பான்மை இனம் தான் நினைத்ததைத் தங்குதடையின்றி, கேட்டுக் கேள்வியின்றிச் செய்கிறது. கேட்டால் மக்களாட்சி முறைமையில் பெரும்பான்மை மக்களுக்கே ஆட்சி அதிகாரம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.


  

அந்த வாதம் ஒரு நாட்டில் ஒரே இன மக்கள் வாழ்ந்தால் பொருந்தி வரும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இனம், மொழி, சமயம், பண்பாடு எனப் பல்லின மக்கள் வாழும் நாட்டில் அது பொருந்தி வராது. சிறுபான்மை இனத்துக்கு அரசியல் அமைப்பில் பாதுகாப்பு இல்லாவிட்டால் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆள வழிவகுத்துவிடும். அப்போது அது கொடுங்கோன்மை ஆட்சியாக மாறிவிடுகிறது. உண்மையான மக்களாட்சி முறைமையின் சிறப்பு அந்த ஆட்சியின் கீழ் சிறுபான்மை மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்கிறார் மகாத்மா காந்தி. அரசியல் பேச்சுச் சுதந்திரம், பேச்சுரிமை சுதந்திரமான ஊடகம், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள், முறைக்கு முறை தேர்தல் ஆகியவை மட்டுமே மக்களாட்சி முறைமையாகிவிடாது. அவை வெறும் வெளித்தோற்றங்கள். உள்ளடக்கம்தான் முக்கியம்.

1940 இல் இருந்து தமிழ் மக்களின் நாடாளுமன்ற மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முகமாக சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

மேலே செல்லுமுன் மண் பறிப்புப் தொடர்பான சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம். இந்தப் புள்ளி விபரங்கள் இந்தத் தொடரைப் படித்து விளங்கிக் கொள்வதற்குத் துணையாக இருக்கும்.

இலங்கையின் மொத்த நிலப்பரபு 65,610 ச.கிமீ (25,332 ச.மைல்) ஆகும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டும் 01.10.1833 இல் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட போது மொத்தம் 18,880 ச.கிமீ (7,289 ச.மைல்) நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன. அதாவது 29 விழுக்காடு நிலப்பரப்பு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமாக இருந்தது.

இதில் வடக்கு மாகாணத்தின் நிலப்பரப்பு 8,884 (3,430 ச.மைல்) ஆகும். கிழக்கு மாகாணத்தின் மொத்த பரப்பளவு 9,996 ச.கிமீ (3860 ச.மைல்) ஆக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 4431.4 ச.கிமீ (1,775 ச.மைல்) நிலப்பரப்பையும் மட்டக்களப்பு மாவட்டம் 2854 கிமீ (1,102 ச.மைல்) நிலப்பரப்பையும் திருமலை மாவட்டம் 2727 ச.கிமீ (1,053 ச.மைல்) நிலப்பரப்பையும் கொண்டிருந்தன. காலப்போக்கில் மாவட்டங்களின் எல்லகைள், பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டுதான் (பெப்ரவரி 27 - மார்ச் 21, 2012) நாடுதழுவிய குடித்தொகை மதிப்பு நடந்துள்ளது. போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டும் குடித்தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முற்றாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஓரளவும் குடித்தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டன. எனவே இந்த மாவட்டங்களின் 2012 இல் நடைபெற்ற குடிக்கணக்கின் இறுதி முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. மொத்த மக்கள் தொகை பற்றிய தொடக்க (preliminary) முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த குடித்தொகை மதிப்பு மற்றும் ஆண்டு வளர்ச்சி கீழேயுள்ள அட்டவணை 1 காட்டுகிறது.

*----------> அட்டவணையின் மேலே அழுத்துவதன்முலம் தெழிவாக பார்க்கமுடியும்.. <--------*

- நக்கீரன் -

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
NIRO-DANCE-100213
TDE_Computers2011
Ramans2011
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com