Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
நிமலரூபனின் உயிரும் இன்றில்லை உடலும் இனியில்லை... பௌத்தம் வெட்கித் தலைகுனிந்தது. - குரு நடராஜன்
[Friday, 2012-07-06 08:37:13]

தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.


  

அவனது கண்ணீர் வற்றியதாக அவனருகில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். அவன் கொல்லப்பட்ட அதிகாலைக்கு முந்தய இரவு அவனது உடலில் நீர் வடிந்திருக்கிறது. காயங்களினால் உடல் துடித்திருக்கிறது. அவனது அலரலையும், வேதனையையும் அங்கிருந்த கொடுங்கோலரின் படைகளிடம் சக கைதிகள் எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் அந்தக் கொடியவர்கள் தமக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நித்திரைக்குப் போய்விட்டார் காலையில்தான் வருவார்,

அதனால் காலையே வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியும் எனக் சொல்லியிருக்கிறார்கள். இரவு முழுவதும் உடல் வேதனையால் துவண்ட அவனின் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாகவே றாகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் அரக்கர்கள். ஆனால் காலை 5.30 மணியளவில் அவனது உயிர் காயங்களால் வதைக்கப்பட்ட உடலைவிட்டு போய்விட்டது.

புத்தரின் போதனைகளால் பௌத்த தர்மத்தால் ஆகர்சிக்கப்பட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் நிமலரூபன் மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணமானான் என கூறுகிறார்கள். அவன் அடித்துக் கொல்லப்பட்டதாக எவரும் கருதினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்கிறார்கள்.

அவனது கொலையின் பின் வவுனியா விரைந்த புலனாய்வுப் பிரிவினர் 70 வயது நிரம்பிய தந்தையையும் 65 வயது நிரம்பிய தாயையும் பலாத்காரமாக றாகமவிற்கு தம்முடன் ஏற்றிச் சென்றார்கள். உறவினர்களோ நண்பர்களோ அவர்களின் சட்டத்தரணிகளோ சந்திக்க முடியாதவாறு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதனை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரைத் தவிர எவரும் அறியவில்லை. அறிந்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் எனச் சொல்கிறார்கள்.

றாகம வைத்தியசாலை வளாகம் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. நிமலரூபனின் கொலைபற்றியும் நடந்தவைபற்றியும் அறியச் சென்ற உந்துள் பிரேமரட்ண குழுவை இலங்கைப் பாதுகாப்பு தரப்பு உட்செல்ல அனுமதிக்கவில்லை. உட்சென்று நடந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எனக் கூறுகிறார்கள்.

தமது மகனின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வருந்திக் கேட்டார்கள். அழுதார்கள். புலம்பினார்கள். மன்றாடிக் கேட்டார்கள். அவர்களிடம் கண்ணீர் இல்லை என்றாகிப் போனது. இரங்கினார்களா இல்லையே. கொடுங்கோலரின் நீதியைத் தொலைத்த மன்றத்திடம் தம்மால் அடித்துக் கொல்லப்பட்ட நிமலரூபனின் உயிரில்லா உடலை வவுனியா கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என உத்தரவை வாங்கியது காவற்படை.

ஆதலால் நீர்கொழும்பு அல்லது அதனை அண்மித்த கொழும்பில்தான் அவனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறந்தது. நிமலரூபனின் உடல் வேறு இடம் நகர்ந்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் எனவும் உத்தரவு கூறியது.

இரத்தக் கண்டல்களாலும், காயங்களாலாலும் சிதைந்த நிமலரூபனின் உயிரில்லா உடலை 65 வயது தாயும், 70 வயது தந்தையும் வவுனியாவுக்கு கொண்டு சென்றால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்றும் நீதியை எழுதியது நீதிமன்றம். சிறைக்குள் இருந்து பிரிவினைவாதத்தை துண்டும் நடவடிக்கையில் நிமலரூபன் ஈடுபட்டதாக பொலிசார் சொன்னதையும் தீர்ப்பாகினார் நீதிபதி.

வவுனியாவின் ஒரு ஓரத்தில் காட்போட் மட்டைகளிலான வீட்டில்தான் அடுத்த நேர உணவுக்கே அல்லாடும் அந்த வயோதிபப் பெற்றோர் வாழ்ந்தார்கள். வன்னியிலே இருந்த போது தாம் பெற்றெடுத்த அந்த ஒரே மகன் நிமலரூபன் தான் தமக்கு கஞ்சி ஊற்றினான் என்றார்கள் அவர்கள். இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த நிமல ரூபன் சந்தேகத்தின் பேரில் கைதானான் என்கிறார் வயோதிபத் தாய். ஒரே பிள்ளையாகிய அவனது உழைப்பிலேயே தமது வயோதிபத்தை கழித்தார்கள்.

கைது செய்யப்பட்ட காலம் முதல் நிமல ரூபன் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு இருக்கிறான். அதனால் மூச்செடுக்க முடியாத வருத்தங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறான். பலதடவைகள் சிறைச்சாலையூடாக சிகிச்சைகளையும் பெற்றிருக்கிறான். சிறைச்சாலை உணவு அவனது உடலை தேற்றாது என்பதனால் தாம் சமைத்துக் கொண்டுபோய் உணவைக் கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர்கள்.

அவ்வாறு செல்லும் போதெல்லாம் 'அம்மா நான் இங்கிருந்தால் செத்துப் போய்விடுவேன் என்னை வெளியில் எடுங்கள்' என பலமுறை அழுதிருக்கிறான் நிமலரூபன். அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே அல்லலுறும் அந்த வயோதிபப் பெற்றோர் இலங்கையின் நீதியில்லா மன்றங்களிடம் நீதிக்காக போராட பணத்திற்கு எங்கு போவார்கள்.

ஆனாலும் இரக்கப்பட்ட வள்ளல்கள் சிலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு தொகை பணத்துடன் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்ய சட்ட வல்லுணர்களை ஏற்பாடு செய்திருந்தர்கள். வறுமை வயோதிபம், பிள்ளைப் பாசம் என்பவற்றால் துடித்த அந்தப் பெற்றோர் விரைவாகவே தமது ஒரே மகனை வெளியில் எடுத்து விடலாம். அவனுடன் தமது வயோதிபத்தை கழிக்கலாம் என ஏங்கியிருந்தார்கள்.

ஆனால் யூன் 29 வெள்ளிக் கிழமை காலை 23 அரக்கர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, உள்ளிருந்தவர்களை மயக்கியபின் மண்வெட்டிப் பிடிகளுடன் உட்புகுந்து ஊழித் தாண்டவம் ஆடி தமது மகனையும் அவனுடன் இருந்தவர்களையும் அடித்து நொருக்குவார்கள் என்பதனை அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

காயப்பட்ட மகனின் நிலையறியாது தவித்த பெற்றோர் கொடுங்கோலரின் புலனாய்வுப் பிரிவினருடன் சென்றதன் பின்புதான் தமது ஒரே ஒரு பிள்ளையும் தம்மை விட்டு நிரந்தரமாகவே போய்விட்டதை உணர்ந்தார்கள்.

சொல்லொனாத் துயரங்களைச் சுமந்து தாம்பெற்ற ஒரே மகனை கொடுஞ் சிறையில் இருந்து உயிருடன் மீட்கலாம். நீதியில்லா மன்றங்களிடம் நீதியை தேடிக் கண்டு பிடிக்கலம் எனத் ஏங்கிய வயோதிபப் பெற்றோர் இப்போ காயங்களால் உருக்குலைந்த உயிரில்லா உடலையும் மீட்க முடியாமல் கொடுங்கோலரின் நீதியை தொலைத்த மன்றங்களால் தடுக்கப்பட்டுள்ளனர்.

நிமலரூபனின் உயிரும் இன்றில்லை உடலும் இனியில்லை. வறுமையால் வாடும் வயோதிபத்தை பார்த்து பௌத்தம் மீண்டும் ஒருமுறை வெட்கித் தலைகுனிந்தது.

நன்றி

குளோபல் தமிழ்

குரு நடராஜன்

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
முள்ளிவாய்க்காலின் மூச்சாகி வலியை விஞ்சி எழும் வலிமை: - பனங்காட்டன்
[Thursday, 2013-05-16 21:29:38]

நெஞ்சுக்குள் குவிந்திருக்கும் வலியை விஞ்சியதாக புலம்பெயர் தமிழர் சமூகம் இன்று வலிமை பெற்று உயிர்ப்புடன் செயற்படுவதால், சர்வதேசத்தின் கண்களை கொஞ்சமாவது திறக்கக்கூடியதாக இருந்தது என்பதே நிதர்சனம்.

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Ramans2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com