இழப்பிலும் இன்னல்களிலும் இழைக்கப்பட்டதே கனடா 150! - பிரகல் திரு | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 19, 2024 [GMT]

இழப்பிலும் இன்னல்களிலும் இழைக்கப்பட்டதே கனடா 150! - பிரகல் திரு Top News
[Saturday 2017-07-01 09:00]

வட அமெரிக்காவில் எங்கிருந்தாலும் நாம் வாழும் நிலப்பரப்புக்கள், கோடிக்கணக்கான பழங்குடி மக்களின் அழிவிலும் அல்லல்களிலும் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவிடயம். இந்த கண்டத்தின் பழங்குடி மக்களுடன் ஐரோப்பியர்கள், பொருள் பரிமாற்றத்தில் தொடங்கி, மக்களை அளித்து அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அவர்களின் கலாச்சாரத்தை அளித்து, ஒரு இனத்தின் அடையாளமான மொழியை அழித்து, அதன் பயன் உருவாகியது தான் நாம் இன்று போற்றும் குடியேற்ற நாடான
  

கனடா 150 கொண்டாடுவது தப்பென்பது எனது கருத்தல்ல. ஆனால் இந்த உண்மையை கருத்தில் வைத்துக்கொண்டு, கொண்டாட்டங்கள் தொடரட்டும் என்பதே எனது வேண்ண்டுகோள்.

500 வருடங்களுக்கு முன் வந்தேறு குடிகளை வரவேற்ற பழங்குடி மக்கள், இன்றுவரை ஒரு ஒதுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமூகமாகவே இந்த நாட்டின் அரசாங்கத்தால் கையாளப்பட்டு வருகின்றார்கள். இந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரு சட்டம் The British North America Act, 1867. அனால் பழங்குடி மக்களுக்கோ, அடக்குமுறைக்கு மறுபெயர் சூட்டப்பட்ட இன்னும் ஓர் சட்டம்: The Indian Act, 1867.

ஆனாலும் இந்த பழங்குடி மக்களின் விருந்தோம்பல் பண்பாடு இன்னும் மாறவில்லை. 2010 எமது உறவுகளை தாங்கிய MV SUN SEA கப்பல் வன்குவரை வந்தடையும் முன்னரே, குடியேறிகளின் வம்சாவளி வந்த கன்சவேட்டிவ் அமைச்சர் விக் தேவஸ், கப்பலில் வருபவர்கள் தீவிரவாதிகள், கனடிய குடிவரவு சட்டத்தை மீறுபவர்கள் என அச்சமூட்டும் வகையில் கனடிய மக்களுக்கு அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்த அதேவேளை ஈஸ்கிமால்தை (Esquimalt) சேர்ந்த பழங்குடி மக்கள், அகதிகளை வரவேர்கின்றோம் என்ற பதாகைகளை வைத்து கரையோரம் காத்திருந்த காட்சியை யாரும் மறக்கமுடியாது.

அப்படியிருந்தும் இன்றுவரை இந்த மண்ணின் மூத்த மக்கள் பல சமூக சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உதாரணமாக, குடிநீர் தட்டுப்பாடு, வறுமைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குடும்பங்கள், அதனால் குறிப்பாக பாதிக்கப்பட்டு வரும் சிறுவர்கள், கல்வி வசதிகள் இன்மை, சமூகப் பிரச்சசனைகள், காணமல் போய் மற்றும் கொல்லப்பட்டு வரும் பெண்கள், யுவதிகள் தற்கொலை இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இது போன்ற பல சிக்கல்கள் மத்தியில் இந்த நாட்டின் எமது பழங்குடி மக்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர் என்பதை நினைக்க வேதனை தருகின்றது.

தற்போதைய அரசுகள் பழங்குடி மக்கள் விவகாரத்தில் சில நல்லிணக்க நகர்வுகளை எடுப்பதை காணக்குடியதாக இருந்தாலும், அன்றாட சமூகத் தேவைகளைக் கூட இன்னும் நிறைவேறாமல், சிக்கல்களுக்கான அடிப்படை காரணங்களை Truth and Reconciliation அனுசரனைகளூடாக அறிந்தும் அவைகளை நிவர்த்தி செய்யாமல், மேலோட்டமாக அறிக்கைகளை மட்டும் விட்டு நிற்கின்றது மாகாண மற்றும் மத்திய அரசுகள். இருந்தாலும், சரித்திரத்தில் பிழைகள் இளைக்க்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதை சரி செய்யவேண்டும் என்பதில் ஜஸ்ரின் ருடோவின் மற்றும் கத்லீன் வின் அவரகளின் அரசுகள் ஆர்வம் காட்டுவது நம்பிக்கை தரும்படியாக உள்ளது.

தொடக்கத்தில் பழங்குடி மக்களை பாவித்து தமது பொருளாதாரத்தை வளர்த்த ஐரோப்பிய குடிவரவாளர்கள்,, கடந்த 150 வருடங்களாக பழங்குடி மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை துண்டித்து வைத்து, அவர்களின் வாழ்வாதரம் மங்கலாக்கப்பட்டுவருகின்றது. அன்று இன அழிப்பிற்கு இட்ட விதைகள் இன்றும் தாக்கத்தை உருவாக்குவதை காணக்கூடியதாக உள்ளது. சிறுவர்களை அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து, மத குருமார்களால் Residential Schools இல் இணைத்து ஒரு சந்ததியின் வாழ்வை சின்னாபின்னம் ஆக்கியது, இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா