போராளிகளின் மரணம் - புற்றுநோயை உருவாக்க முடியுமா? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 24, 2024 [GMT]

போராளிகளின் மரணம் - புற்றுநோயை உருவாக்க முடியுமா?
[Wednesday 2016-08-03 05:00]

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோரும் அடக்கம். இந்த போராளிகளின் இறப்பு என்பது தமிழினத்திற்கு மிகப்பெரும் இழப்பு என்பதைவிட மிகப்பெரும் அவமானமாகும் ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய அற்புத மனிதர்கள் இன்று அனாதைகளாக இறக்கின்றனர்.


  

எனினும் இந்த நோய்களை சிறீலங்கா அரசும் அதன் கைக்கூலியான இந்திய உளவுத்துறையும் இணைந்தே போராளிகள் மத்தியில் பரப்பி வருவதாக தகவல்கள் உண்டு. இந்த தகவல் உண்மையானதா அவ்வாறாயின் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? என்பதே தற்போதைய மில்லியன் டொலர் கேள்வி. இதற்கான ஒரு வரி பதில் ஆம் என்பதேயாகும். எவ்வாறு என்பதற்கு நான் இங்கு சில சான்றுகளை முன்வைப்பதே உகந்தது.

இதன் அண்மைய உதாரணம் அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ ((Alexander Litvinenko) என்பவரே. ரஸ்யா உளவுத்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புற்றுநோயினால் இவர் 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இறந்துபோனார்.

இவரை ஏன் படுகொலை செய்தனர்? முன்னர் ரஸ்யாவின் புலனாய்வுத்துறையின் (Federal Security Service (FSB) and KGB) அதிகாரியாக இவர் பணியாற்றியிருந்தார். ரஸ்யாவின் அரச தலைவர் விளமிடீர் பூட்டினுடன் இணைந்து செயற்பட்ட லிற்வினஸ்கோ அங்கிருந்து தப்பியோடி பிரித்தானியாவில் தஞ்சமடைந்ததுடன், பிரித்தானியாவின் உளவுத்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபராகவும் மாறியிருந்தார். அதற்காக பிரித்தானியா அரசு அவருக்கு வீட்டு வசதிகளையும், மாதம்தோறும் 2500 ஸ்ரேலிங் பவுண்ஸ்களையும் வழங்கி வந்ததாக அவரின் மனைவி பிரித்தானியா ஊடகத்திங்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பூட்டின் மீதான மேற்குலகத்தின் சேறடிக்கும் பணிகளுக்கு லிற்வினஸ்கோ பல உதவிகளை வழங்கியிருந்தார். அதாவது பூட்டினின் பல இரகசியத் தகவல்களை அவர் வழங்கியதுடன், பூட்டினின் ஊழல் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதுதற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார். இதுவே ரஸ்யாவை அதிக சினம் கொள்ள வைத்தது.

ரஸ்யாவின் உளவுத்துறையை சேர்ந்த இருவர் போலோனியம்-210 (Polonium-210) என்னும் புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சுக் கொண்ட இராசாயனப் பொருளுடன் பிரித்தானியாவுக்குள் நுளைந்தனர். லிற்வினஸ்கோவுடன் நட்பை ஏற்படுத்தினர். ரஸ்யா தொடர்பான பல இரகசியத் தகவல்களை அவருக்கு வழங்கினர். அவரின் நம்பிக்கையை பெற்ற பின்னர் விருந்து ஒன்றிற்கு மிலேனியம் ஆடம்பர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

விருந்தின் போது அவர் அருந்திய கிறீன் தேனீரில் தாம் கொண்டு வந்த போலோனிம்-210 இராசாயனத்தை கலந்து விட்டனர். அதன் பின்னர் அவர்கள் ரஸ்யாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஒரு வாரத்திற்குள் தலைமுடி எல்லாம் கொட்டப்பட்டு உடல்முழுவதும் பலவீனமாக இனம்தெரியாத நோயினால் லிற்வினஸ்கோ பாதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் என கண்டறியப்பட்டபோது புற்றுநோய் அவரின் பல அங்கங்களுக்கு பரவியிருந்தது. தனது இறப்பை தெரிந்தவாறே மிகுந்த உடல்வேதனையுடன் லிற்வினஸ்கோ 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணத்தை தழுவியிருந்தார்.

அதன் பின்னர் விழித்தெழுந்த பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்துயாட் காவல்துறை வந்தவர்கள் தங்கிய விடுதி, அவர்கள் பயணித்த விமானம், அவர்கள் விருந்து உண்ட விடுதி ஆகியவற்றில் போலோனியம்-210 இன் கதிர்வீச்சுக்களை கண்டறிந்து சாட்சியங்களை சேகரித்தனர். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் ரஸ்யாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இந்த விடயம் மிகப்பெரும் இராஜதந்திரப் போராக உருப்பொற்றிருந்தது. ஆனால் பின்னர் அது அடங்கிவிட்டது.

ஒரு சிறு தூசி அளவு போலோனியம் புற்றுநோயை உருவாக்கப்போதுமானது. ஏன் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புற்றுநோயை ஒருவருக்கு உருவாக்க முடியும் அதற்கு அதிக தொழில்நுட்பம் தேவையில்லை. ஆனால் அதனை நான் இங்கு கூறவிரும்பவில்லை. அது மட்டுமல்லாது ஒருவரை எவ்வளவு காலத்திற்கு பின்னர் அல்லது முன்னர் சாகடிக்க வேண்டும் என்பதையும் பல்வேறு இரசாயனப்பொருட்களை கொண்டு தீர்மானிக்க முடியும்.

நான் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விஞ்ஞானியாக பணியாற்றிய காலத்தில் மனிதனின் மூளையில் உள்ள பிரச்சனைகளை (புற்றுநோயாக இருந்தாலும்) கண்டறிவதற்குரிய எம்.ஆர்.ஐ ஸ்கானிங் எடுப்பதற்கு முன்னர் மூளைக்குள் செலுத்தும் இரசாயனப்பொருள் (contrast agent)) தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தேன்.

நாங்கள் உருவாக்கும் இரசாயணப் பொருட்களை உயிரியல் பீடத்திற்கு அனுப்புவோம் அவர்கள் அதனை எலி மற்றும் முயல் போன்ற மிருகங்களில் பரிசோதனை செய்வதுண்டு. அவ்வாறு செய்வதற்கு முன்னர் எலிகளுக்கும், முயல்களுக்கும் செயற்கையாகவே புற்றுநோய்களை உருவாக்குவதுண்டு. இதில் என்ன சிறப்பு என்றால் எந்த பகுதியில்

புற்றுநோய்களை உருவாக்க வேண்டும் என தெரிவு செய்து உருவாக்க முடியும். எனவே புற்றுநோயினால் மரணமடையும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை இங்கு மறுக்க முடியாது. இதனை தடுப்பது எவ்வாறு அல்லது அவர்களை காப்பாற்றுவது எவ்வாறு என்பது தொடர்பான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதனை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

ஒரு லிற்வினஸ்கோவின் மரணத்தை பெரும் இராஜ தந்திரப்போராக மாற்றியது பிரித்தானியா ஆனால் நாம் பல போராளிகளை இழந்த பின்னரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ண ரஜனி தனது தொடர் ஆய்வு களில் தெரிவித்துவருவது போல முதலில் நாம் புனர்வாழ்வு என்ற பெயரில் வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் உடல்நிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தேசத்து அமைப்புக்களிடம் அதற்கு தேவையான நிதி வளம் உள்ளது. அதனை அவர்கள் சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் ஏனெனில் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சட்சிகளும், சரித்திரமும் அவர்கள் மட்டும் தான்.

சித்ரா - பாலன்

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா