Untitled Document
May 15, 2024 [GMT]
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Thursday 2023-05-11 19:00]

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.


மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Thursday 2023-05-11 19:00]

மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.


மின்னமைப்பினால் உருவாகிய இந்து தெய்வங்கள்! Top News
[Thursday 2023-05-11 19:00]

இந்திரவிழா வரலாற்றில் மட்டுமல்ல, இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் கட்டமைத்து வரலாற்றுச்சாதனை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் இது இடம்பெற்றது.


இராணுவத்தினர் காணொளி எடுத்து அச்சுறுத்தல்! Top News
[Thursday 2023-05-11 19:00]

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் இராணுவத்தினர் புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டனர்.


காரைநகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Top News
[Tuesday 2023-05-09 20:00]

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி உள்ளது. அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.


முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஆரம்பம்! Top News
[Tuesday 2023-05-09 20:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் (09/05/2023) திகதி முதல் வரும் 14ம் திகதிவரை தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னேடுக்கவும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை, ஆலடிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்றது.


வல்வையில் இந்திரவிழா! Top News
[Monday 2023-05-08 06:00]

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் (05.05.2023) அன்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.


சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2023-05-08 06:00]

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு (05/5/2023) அன்று வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.


வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்! Top News
[Saturday 2023-05-06 08:00]

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்ற செயல்களோடு தொடர்புள்ளோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறி நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 ஆண் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.


அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் - மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Top News
[Friday 2023-05-05 06:00]

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணியில் இருந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என மல்லாகம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் வீதிமறியல் போடப்பட்டது. ஆகையால் வெளியே உள்ளவர்கள் உள்ளே போகமுடியாத, உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது.


பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு! Top News
[Friday 2023-05-05 06:00]

நேற்றைய தினம் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் வேலணை ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, வேலணை பகுதியில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன.


வெசாக் தினத்திற்காக இராணுவத்தினர் துரிதகதி - அலங்கார பௌத்தசின்ன கொடிகள் மற்றும் வெசாக் தோரண பந்தல்கள் அமைப்பு! Top News
[Friday 2023-05-05 06:00]

சிங்கள மக்களால் நாளையதினம் புனித முழுமதி பௌர்ணமி செவாக் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துபௌத்த விகாரைகளிலும் மற்றும் பாதுகாப்பு படைத்தலைமைய பிரிவுகளின் அமைவிடங்களிலும் பௌத்தசின்னகொடிகள் மற்றும் வெசாக் தோரணபந்தல்களை அலங்கரிக்கும் பணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.


கதலி வாழைக்குலைகள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழில் ஆரம்பம்! Top News
[Thursday 2023-05-04 07:00]

கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளகடமிருந்து வாழைக்குலைககள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்! Top News
[Tuesday 2023-05-02 22:00]

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் பராயத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே நாளான நேற்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் மே தினம்! Top News
[Tuesday 2023-05-02 22:00]

நேற்று திங்கட்கிழமை (01.05.2023) நல்லூரில் எழுச்சி பூர்வமாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமை தாங்கினார்.


கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா! Top News
[Sunday 2023-04-30 20:00]

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது. அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு போட்டி நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்துள்ளனர் அதன் ஒரு அங்கமாக நேற்றையதினம் (29) மாபெரும் மரதனோட்ட போட்டியும் நூறு பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு! Top News
[Thursday 2023-04-27 06:00]

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மகன் செல்வன். ஆதவியன் சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்ட நிகழ்வு! Top News
[Thursday 2023-04-27 06:00]

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கம்பஹா மாவட்ட, இரண்டாம் மொழிக் கற்கை நிலைய மாணவர்களது புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சூரிய அறக்கட்டளை கல்வி நிலையத்தில் நடைபெற்றது.


செல்வநாயகத்தின் 46 ஆவது சிரார்த்ததினம்! Top News
[Thursday 2023-04-27 06:00]

தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வா மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகத்தின் 46 ஆவது சிராத்த நினைவேந்தல் தினம் நேற்று யாழ்ஹ துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா நினைவேந்தல் தூபியில் இடம்பெற்றது. அதன்போது தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரரின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.


ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Thursday 2023-04-27 06:00]

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் [25] பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.


பாடசாலைகள் பூட்டு! Top News
[Thursday 2023-04-27 06:00]

சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரி நேற்று யாழ் வர்த்தகர்கள், மற்றும் தனியார் தொழில் நிலையஊழியர்கள் பூரண ஹர்த்தலை முன்னெடுத்துள்ளனர்.


கப்பல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது! Top News
[Tuesday 2023-04-25 18:00]

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல்த்திருவிழா இன்று இடம்பெற்றது.


கம்பஹா அணிகளை வீழ்த்தி கயிறு இழுத்தலில் வெற்றி மகுடம் சூடிய யாழ். அணிகள் - இரண்டாக அறுந்த கயிறு! Top News
[Sunday 2023-04-23 08:00]

நேற்றைய தினம் யாழ்ப்பாண ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கும் கம்பஹா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கும் இடையே தனித்தனியே நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் கம்பஹா அணிகளை வீழ்த்தி யாழ். அணிகள் வெற்றி மகுடம் சூடின. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சூரிய அறக்கட்டளையின், இலவச சிங்கள வகுப்பு மாணவர்கள் கடந்த 19ஆம் திகதி சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டனர்.


யாழ். பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள்! Top News
[Sunday 2023-04-23 08:00]

உலக வாழ் இஸ்லாமியர் இன்று ரம்ழான் பெருநாளினை கொண்டாடு கின்றனர்.அவ் நாளினை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.


கிளி பாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது! Top News
[Friday 2023-04-21 06:00]

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.


யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு! Top News
[Friday 2023-04-21 06:00]

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தவர்களுக்காக, 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன.. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு கல்வி நிலையமும் இயங்கி வருகின்றது.


கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு! Top News
[Wednesday 2023-04-19 20:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.


தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்னைபூபதி நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Wednesday 2023-04-19 20:00]

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்னைபூபதி நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வடிவேல் தகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா