|
|
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 42ஆவது நினைவு நாள் - யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!
[Sunday 2016-01-10 19:00]
|
தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.
|
|
|
காணாமற்போன உறவுகளுக்கு மரணச்சான்றிதழ் பெற 48 பேர் மட்டுமே விண்ணப்பம்!
[Sunday 2016-01-10 19:00]
|
காணாமல்போன தமது உறவுகளுக்காக கடந்த ஆண்டில் 48 பேர் மாத்திரமே இறப்புப் பத்திரத்தை கோரி பதிவு செய்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
|
|
|
யோசித்த ராஜபக்ச விரைவில் கைது!
[Sunday 2016-01-10 19:00]
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் யோசித்த கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
|
|
|
மூத்த பத்திரிகை ஆசிரியர் இரத்தினசிங்கம் காலமானார்!
[Sunday 2016-01-10 19:00]
|
சுடர் ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
|
|
|
இந்தியா எதிர்ப்பு - போர் விமானக்கொள்வனவை இடைநிறுத்தியது இலங்கை!
[Sunday 2016-01-10 18:00]
|
இந்தியா கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக, விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களிற்கு முன்னர் ஏன் இலங்கை குறிப்பிட்ட வகை விமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு புதுடில்லி இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது.
|
|
|
புதிய ஆயரின் காலத்தில் மாற்றங்கள் நிகழும்!
- விக்னேஸ்வரன்
[Sunday 2016-01-10 18:00]
|
யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் காலத்தில் பல மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும், மக்களை ஒருங்கிணைத்து அவர் பாரிய சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவாரென நம்புவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
|
|
|
இந்த ஆண்டு 500 இந்திய மீனவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார் அமைச்சர்!
[Sunday 2016-01-10 18:00]
|
அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளை கைப்பற்றி சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு கடலோரக் காவற்படை, மற்றும் நீரியல் வளத்துறையினருக்கு மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று அறிவுறுத்தல் வழங்கினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
கிணற்றுக்குள் தவறி விழுந்த மின்சாரசபை ஊழியர் மரணம்!
[Sunday 2016-01-10 18:00]
|
கிணற்றில் நீர் அள்ளி குளித்தவர், கால் இடறி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மின்சார சபையில் ஊழியராக பணி புரியும் சோமசுந்தரம் தவராஜா (வயது 52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
|
|
|
சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்றும் இரகசிய சதியில் மஹிந்த!
[Sunday 2016-01-10 18:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றும் இரகசிய முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்து கட்சியின் தலைமைப் பதவியை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தீவிரம் காட்டி வருவதாகவும், இதன் காரணமாகவே அவர் கட்சியை விட்டு வெளியேறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
|
|
|
மைத்திரியால் மன்னிக்கப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பினார்!
[Sunday 2016-01-10 18:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர், தன்னுடைய சொந்த ஊரான யாழ்ப்பாணம் கோப்பாய்க்கு, நேற்று திரும்பினார். தன்னை படுகொலைச் செய்வதற்கு முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெள்ளிக்கிழமை மன்னிப்பளித்தார்.
|
|
|
24 மணிநேரத்தில் மைத்திரியிடம் குவித்த 3200 முறைப்பாடுகள்!
[Sunday 2016-01-10 18:00]
|
பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில்
|
|
|
கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில்!
- முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயத் திட்டம்
[Sunday 2016-01-10 08:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் எதிர்வரும், 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
மகிந்தவிடம் திருமணச்செலவு, மரணவீட்டுச் செலவுக் கணக்குகளைக் கேட்கிறது ஆணைக்குழு!
[Sunday 2016-01-10 08:00]
|
தனது ஆட்சிக் காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 100 பக்க கடிதமொன்றை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு பதவியிலிருந்து வெளியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளின் விபரங்களை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
|
|
|
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்முறையாக இலங்கைக்கு அழைப்பு!
[Sunday 2016-01-10 08:00]
|
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு முதல் தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் டாவோஸில் எதிர்வரும் 20ம் திகதி உலகப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் 52 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
பிரகீத் கடத்தல்- ஏழு ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!
[Sunday 2016-01-10 08:00]
|
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு ஊடகவியலாளர்களிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எக்னெலிகொடவுடன் பணிபுரிந்த ஊடகவியலாளர்களிடமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
|
|
|
இலங்கைக்கு நிதியுதவிகளைத் திறந்து விடுகிறது அமெரிக்கா
[Sunday 2016-01-10 08:00]
|
இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
நீண்ட இடைவெளியின் பின்னரே இலங்கைக்கு, அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
|
|
|
அடுத்தமாத நடுப்பகுதிக்குள் இலங்கை வருகிறார் சுஸ்மா!
- யாழ்ப்பாணமும் செல்வார்.
[Sunday 2016-01-10 08:00]
|
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி இந்திய
|
|
|
அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி
[Sunday 2016-01-10 08:00]
|
ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை இலங்கை அரசாங்கம் புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
|
|
|
மைத்திரி, ரணில் யாழ். வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்!
- சிவாஜிலிங்கம் அறிவிப்பு
[Sunday 2016-01-10 08:00]
|
தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. ஆனால் இந்த ஆட்சி காலமும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை.
|
|
|
சிங்க லேயை தடுக்காவிடின் புலி இரத்தமும் உருவாகும்!
- ஊடக அமைப்பு எச்சரிக்கை
[Sunday 2016-01-10 08:00]
|
நாட்டில் தற்போது இனநல்லிணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும்
|
|
|
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நாளை மறுநாள் கொழும்பு வருகிறார்!
[Sunday 2016-01-10 08:00]
|
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி மாலைதீவிலிருந்து கொழும்பு வரும் அவர், அரச உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
|
|
|
செல்வாவுடனான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார்!
- ஜனாதிபதி மைத்திரி
[Saturday 2016-01-09 19:00]
|
டட்லி - செல்வா மற்றும் பண்டா - செல்வாம் ஒப்பந்தங்கள் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகி இருக்கமாட்டார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்ற விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
|
|
|
போதைப்பொருட்கள் குறித்து அவதானமாக இருங்கள்!
- மன்னாரில் முதலமைச்சர் அறிவுரை
[Saturday 2016-01-09 19:00]
|
அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். இன்று மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கூட கட்டடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
கொலை செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயின் சடலத்தை கண்டுபிடிக்க விசுவமடுவில் அகழ்வு!
[Saturday 2016-01-09 19:00]
|
விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு பின் பகுதியில் உள்ள காணியில் இன்று அகழ்வுப் பணிள் இடம்பெற்றது. 2010ஆம் ஆண்டு விசுவமடு இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் சக வீரர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்திலேயே இவ் அகழ்வு பணி இடம்பெற்றது. இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
|
|
|
[Saturday 2016-01-09 19:00]
|
|
|
|
மன்னார் ஆயரைச் சந்தித்தார் முதலமைச்சர்!
[Saturday 2016-01-09 19:00]
|
வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயரை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார்.
|
|
|
பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது!
- இராணுவத் தளபதி
[Saturday 2016-01-09 19:00]
|
இலங்கையில் எந்தவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராணுவ தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
|
|
|
சரத் பொன்சேகாவின் இணையத்தளத்தை முடக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்!
[Saturday 2016-01-09 19:00]
|
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியினால் நடத்தப்படும் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சைபர் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகின்றது. லங்கா இஸட் நியூஸ் என்ற இந்த இணையத்தளத்தின் முகப்பு பகுதிக்கு பிரவேசிக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியும் பிரசார வாசகங்களும் காணப்படுகின்றன.
|
|
|
|